Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொல்லும் கொரோனாவை வெல்லும் மந்திரம்


Member

Status: Offline
Posts: 232
Date:
கொல்லும் கொரோனாவை வெல்லும் மந்திரம்
Permalink  
 


ஆவிக்குரிய நோய் எதிர்ப்பு சக்தி 

 

⭐ என் சரீரம் கிறிஸ்துவின் சரீரம்.

⭐ என் அவயவங்கள் கிறிஸ்துவின் அவயவங்கள்.

⭐ என் தலை கிறிஸ்து.

⭐ நான் இயேசுவின் மாமிசத்திற்கும் எலும்புகளுக்கும் உரியவன்.

⭐  கிறிஸ்துவின் ஜீவன் என் மாமிசத்தில் வெளிப்படுகிறது.

⭐ என் சரீரம் தேவனுடைய ஆலயம்     

⭐ வாதை என் கூடாரத்தை( என் சரீரத்தை என் குடும்பத்தை) அணுகாது.

⭐ பொல்லாப்பு எனக்கு( என் குடும்பத்துக்கு என்னை சேர்ந்தவர்களுக்கு என் தேசத்தாருக்கு) நேரிடாது.

⭐ அவர் வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவிக்கிறார்.

⭐ அவருடைய தழும்புகளால் நான் சுகமாகி இருக்கிறேன்.

⭐  இயேசுவின் ரத்தம் என் மேலே தெளிக்கப்பட்டு இருக்கிறது.

⭐ இயேசுவின் நாமம் என் மேல் எழுதப்பட்டுள்ளது.

⭐ இயேசுவின் வார்த்தை என் இருதயத்தில் நிரம்பி உள்ளது.

⭐ நான் இயேசுவின் ரத்தத்திற்குள், நாமத்திற்குள், வார்த்தைக்குள் இருக்கிறேன்.

⭐ கர்த்தர் என் பெலன்

⭐ கர்த்தர் என் கேடகம்

⭐ கர்த்தர் என் துருகம்

⭐ கர்த்தர் என் கோட்டை

⭐ கர்த்தர் என்னை சூழ அக்கினி மதிலாய் இருக்கிறார் .

⭐ கர்த்தர் என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காக்கிறார்.

⭐  நான் உலகத்தில் இல்லை கிறிஸ்துவுக்குள் தேவ ராஜ்யத்தில் உன்னதத்தில் அவரோடு இருக்கிறேன்.

⭐ கர்த்தருடைய வார்த்தை எனக்கு ஜீவனும் என் உடலுக்கெல்லாம் ஆரோக்கியம்.

⭐  என் சரீரத்தில் உள்ள 100 ட்ரில்லியன் செல்களிலும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்,.

⭐ நான் தேவனால் பிறந்தவன் அவருடைய வித்து எனக்குள் தரித்து இருக்கிறது.

⭐  இயேசு என்ற நீதியின் சூரியனின் செட்டைகளின் கீழ் இருக்கிற எனக்கு ஆரோக்கியமும் சுகமும் இருக்கிறது.

 

⭐  நான் எந்த சூழலிலும் பயப்படமாட்டேன். தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கெடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

 

⭐ கர்த்தர் என் ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.

 

⭐ எனக்குள் ஜீவன் பரிபூரண ஜீவன், வாழ்வு எனக்கு  உண்டு.

⭐ இயேசுவின் சரீரத்தை புசித்து ரத்தத்தை பானம் பண்ணுகிற எனக்கு நித்திய ஜீவன் உண்டு.

 

⭐ இயேசு பிதாவினால் பிழைத்திருக்கிறது போல நான் இயேசுவால் பிழைத்திருக்கிறேன்.

 

⭐ கர்த்தரின் கிருபை எனக்கு போதும்.என் பெலவீனத்தில் கர்த்தர் தம்முடைய பெலத்தை எனக்கு தருகிறார்.

 

⭐ அவர் என் நோய்களையெல்லாம் குணமாக்கி என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு என்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி நன்மையினால் என் வாயை திருப்தி ஆக்குகிறார். கழுகுக்கு சமானமாய் என் வயது திரும்ப வால வயது போல் ஆகிறது.

 

⭐ அவர் என்னை நீடித்த நாட்களால் திருப்தி ஆக்குகிறார்.

 

💥 பரிசுத்தவான்களுக்காக எனக்காக, எனக்குள் இருந்து வேண்டுதல் செய்கிற ஆவியானவர் , மற்றும் பிரதான ஆசாரியராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வேண்டுதல் என்னை பாதுகாக்கிறது.  

 

💥 இயேசுவின்  இரத்தம் பேசுகிற நன்மைக்குள் நானும் என் குடும்பமும் தேசமும் சபையும் ஆரோக்கியமாய் உள்ளோம்.

 

Psalm 34:1  படி தினமும் இதை அறிக்கை செய்து பாவத்தையும் வியாதியையும் ஜெயிப்போம்

ஆமென்.



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard