Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாபர் மசூதி இடிக்கப்பட என்ன காரணம்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பாபர் மசூதி இடிக்கப்பட என்ன காரணம்..?
Permalink  
 


நம்முடைய அருமை நண்பர் சுந்தர்p அவர்களுக்கு அண்டர்வேர் ஸாரி ஆண்டரவேர் அற்புதமான ஞானத்தைக் கொடுத்துள்ளார்;இவருக்கு எதிராக யாரும் எதுவும் எழுதமுடியாது;ஏனெனில் ஏற்போர் ஏற்கட்டும், ஏற்காதவரைக் குறித்து தனக்குக் கவலை இல்லை என்ற விசாலமான கொள்கையுடைவர்;

ஒரு கட்டத்தில் அந்த ஆவியே அவருக்கு உணர்த்தி தான் அவருக்கு எழுதத் தூண்டியவை தவறு என்று இடித்துரைக்கும்;அப்போது 'ஏன் இப்படி தப்புந்தவறுமாய் சொல்லிக்குடுக்கறே' என்று சலித்துக்கொண்டு அதனை நீக்கிவிடுவார்;

எனவே அவர் நீக்கும் முன்பதாக நாம் ஒருமுறை படித்துவிடலாமே என்று இங்கே கடன் வாங்கி பதித்துள்ளேன்;அவனவன் அயோத்தி தீர்ப்புக்கு பயந்து என்னாகுமோ ஏதாகுமோ என்று வீட்டில் முடங்கியிருக்க தலைவர் பயங்கர ஷோக்கா ஸாரி ஜோக்கா ஜோரடிக்கிறார்..சே..எனக்கு ஆவி சரியாவே வேலை செய்யல‌...ஜோரா 'ஜோக்'கடிக்கிறாருன்னு சொல்லவந்தேன்...!

>>>>>>>>>>>xxxxxxxxxxxxxxxxxxx<<<<<<<<<<<<<<<<

1992 ம வருடம் டிசம்பர் மாதம் 6 ம தேதி பாபர் மசூதி இடிப்பும் தினமாகும். அந்த நாள்தான் எனது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு மேன்மையான நாள். ஆம்! இறைவனின் ஆவியின் மொத்த வல்லமையாலும் நான் நிரப்பபட்ட நாள்.  எனது ஆவிக்குரிய வாழ்வின் வயதும் சுமார் 18 வருடங்கள். அன்று நடந்த அந்த சம்பவத்துக்கும் இன்று தீர்ப்பு வர இருக்கிறது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்தும் எந்த இந்துவாலும் இடிக்கமுடியாமல் இருந்த அந்த மசூதி அன்றைய தினம் இந்துக்களால் இடிக்கப்பட்டதற்கு ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய காரணம் உண்டு.
நமது இந்தியா என்பது ஒரு சாதாரண நாடும் அல்ல, நமது ஆதி மதமாகிய இந்து மதம் ஒரு சாதாரண மதமும் அல்ல! நீதிக்கும் நேர்மைக்கும் கற்ப்புக்கும் பண்பாட்டுக்கும்  பாடம் சொல்லும் அனேக உயர்ந்த மனிதர்களை கண்டது நமது பாரத நாடு!
உலகில் இருக்கும்  மதங்களுக்கும் மார்க்கங்களுக்கும் பிரிவினைகளுக்கும் ஒவ்வொரு வல்லமை மிக்க ஆவியே காரணமாக இருக்கிறது. அதுபோல் முப்பெரும் மதங்களாகிய   இந்து இஸ்லாம் கிறிஸ்த்தவம் ஆகியவற்றையும் மூன்று யுகங்களின் முக்கிய ஆவிகள் வழி நடத்துகின்றன. மிக பழமையானதும் செல்வம் செழிப்போடும் இருந்த இந்து மதமானது அசுத்த ஆவிகளின் பிடியால் ஆட்கொள்ளப்பட்டு  அதில் உள்ள  தேவர்களின் வரையறையற்ற பாவங்களால் இறை பாதுகாப்பை இழந்து இஸ்லாம் ஆவிக்கு அடிமையானது.
அதை தொடர்ந்து இஸ்லாத்தியர் வல்லமைக்கு  முன்னால் இந்து மதம் நிற்க முடியாமல் போய் இமயமலை லிங்கசாமியின் பாதுகாவலை உடைத்து உள்ளே நுழைந்த முகம்மதியர் இந்தியர்களை   கடுமையாக சுரண்டியதோடு இந்தியாவை பல நூற்றாண்டு  காலம் அடிமைபடுத்தி வைத்திருந்தனர்.

அதன் பின்னர் கிறிஸ்த்துவின்  உயிர்தெழுந்த வல்லமையுடைய  ஆவியின் பலத்துடன் உள்ளே நுழைந்த கிறிஸ்த்தவர்களுக்கு முன்னால் இஸ்லாம் ஆவியால் நிற்கமுடியாத காரணத்தால்
இஸ்லாத்தை மேற்கொண்டு கிறிஸ்த்தவம் இந்தியாமை அடிமை கொண்டது.

( மடையன்... லூசு... என்றெல்லாம் திட்டணும் போல இருந்தாலும் உண்மையான மடையனும் லூஸும் வருந்துவார்களே என்று யோசிக்கிறேன்;கிறித்தவம் எப்போது இந்தியாவை அடிமை கொண்டது யாராவது விளக்கினால் நல்லது;ஓஹோ ஆங்கிலேயர் கிறித்தவர்கள் என்ற பொருளில் கூறுகிறாரோ...அப்படியானால் ஏன் அவர்கள் மிஷினரிகளைத் துன்புறுத்தினர்? )

அதன்பின்னர் கிறிஸ்த்தவத்தின் தனது நடைமுறை வாழ்வில் நிறைவேற்றி காட்டிய மகாத்மாவின் வேறுபட்ட விசேஷித்த  ஆவியின் முன்னால் நிற்கமுடியாத ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு கடந்து சென்றனர். (ஆலேலூயா..!?) இவ்வாறு இந்துவை அடிமைபடுத்திய இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவம் இந்தியாவை விட்டு கடந்து சென்றாலும் அவர்களோடு வந்த ஆவிகள் இந்தியாவை விட்டு செல்லவில்லை காரணம் அவைகளின் முக்கிய நோக்கமே இந்தியாவும் இந்துக்களும்தான். எனவே இந்தியா கீழ்கண்ட நிலையில் இருந்தது

இந்துக்கள் (+ அசுத்த ஆவிகள்)  > இஸ்லாமியர் (+ விழுந்துபோன தூதன்) > கிறிஸ்த்தவர்(அசுத்த ஆவிகள்+விழுந்துபோன தூதன்)

இதில் இந்துக்களோடு கூடிய அசுத்தாவிகளின் வல்லமையை இஸ்லாமியரோடு கூடிய விழுந்துபோன தூதன் அமுக்க இஸ்லாமியரின் வல்லமையை கிறிஸ்தவர்கள் அமுக்க ஒன்றன்மேல் ஒன்றாக அனேக நூன்றண்டுகள் இந்தியா போராடி கடந்து வந்தது.

1996 டிசம்பர் 6 ம தேதி இந்துக்களில் பிறந்த ஒருவர் பரிசுத்த ஆவியின் துணையுடன்
இஸ்லாத்தின் ஆவியுடன் நடந்த மிகப்பெரிய ஆவிக்குரிய யுத்தத்தில் மிகுந்த தாழ்மையின் மூலம்  தன்னை அமுக்கியிருக்கும் இஸ்லாத்தின் ஆவியை மேற்கொள்ளவே, இந்துமதம் இஸ்லாத்தின் பிடியில் இருந்து விடுதலை ஆனது. அதை தொடர்ந்து இந்துக்களுடன் சேர்ந்திருக்கும்  அசுத்த ஆவியால் இஸ்லாத்தியரின் அந்த மசூதி இடிக்கப்ட்டு மிகப்பெரிய கலவரம் மூண்டது.

இன்றுவரை அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டமுடியாமல் போனதற்கு காரணம் தற்ச்சமயம் இந்துமத வல்லமை விடுதலை பெற்று, அசுத்த ஆவிகளுடன் கூடி
கிரிஸ்த்தவத்தையும்  கூட துன்புறுத்தி வருகிறது  அந்த மிகப்பெரிய வல்லமையை
முறியடிப்பது கடினம்!
இந்நிலையை  மாற்றி  அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவர  ஒரு இந்துவாலேயே முடியும்!
அந்த இந்து, இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பை பெற்று, தேவ ஆவியின் வல்லமையால் அபிஷேகித்து நடத்தப்பட்டு,  இந்துஆவியை பிடித்து வைத்திருக்கும் அசுத்த சக்திகளை மேற்கொண்டு ஜெயம்கொள்ள வேண்டும்  அதன் பின்னரே கிறிஸ்த்துவின் வருகை   உலக முடிவு மற்றும் நித்திய நியாயதீர்ப்பு நடைபெறும்!
சகரியா 4:6 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

(இவை எல்லாம் ஒரு அடையாளமாகவே நான் எழுதியிருக்கிறேன். ஞானம் உள்ளவர்கள்
இதை சிந்திக்கக்கடவர்கள் )



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard