Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெர்ஸன் எடின்பரோ in "நீரே" 3


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஜெர்ஸன் எடின்பரோ in "நீரே" 3
Permalink  
 


பாடல். 5
நீர் மாத்ரம் எனக்கு (4)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2)
-நீர் மாத்ரம்
(1)
அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2)
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

(2)
ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2)
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பாடல். 4

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுமே (2)
தேவனின் மகிமை நம்மை எல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2)
-தேவபிரசன்னமே
1.  தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2)
-தேவனின் மகிமை
2.  தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே  இறங்கி வந்திடுதே (2)
-தேவனின் மகிமை

3.   வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2)
-தேவனின் மகிமை

(பாடலை எழுதியவர் REV.Vg.செல்வராஜ்)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பாடல். 3

நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன் 
கருத்தோடு நன்றி சொல்கிறேன்


நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

1.  என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
-நன்றி நன்றி பலி

2. பாபியாக நான் வாழ்ந்து பாபஞ்செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வ‌ந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வ‌ந்தீரே
-நன்றி நன்றி பலி

3. நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே
-நன்றி நன்றி பலி

4. நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரையா
சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா

(நீர் செய்த நன்மைகளை நான் நினைத்து
பார்க்கிறேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன்.)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இளம் ஆராதனை வீரர் ஜெர்ஸன் எடின்பரோ அவர்களின் இசைத் தொகுப்பான "நீரே" மூன்றாம் பாகம் வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது;ஆனாலும் அதன் பாடல் தாள் (Song Sheet) இணைக்கப்படாததால் புதிய பாடல்களான அவற்றைக் கற்றுக்கொண்டு நமது சபை ஆராதனைகளில் பாடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு "நீரே" மூன்றாம் பாகத்தின் பாடல் வரிகளை எனது அன்பு வாசகர்களின் வசதிக்காக பதிக்கிறேன்;இன்னும் இது போன்ற புதிய பாடல்களின் வரிகள் தேவைப்பட்டால் தள நண்பர்கள் தயக்கமின்றி தெரிவிக்கவும்.

50291_134576956590159_8130072_n.jpg

பாடல்.1


பேசு சபையே பேசு (4)

இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் ‍(2) (பேசு)

நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாகத் தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புதுஜீவன் உனக்குள் தோன்றும் (2)  (பேசு)

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2)அதனால் (பேசு)

ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும்...
-இது உலர்ந்த எலும்புகள்  ‍(பேசு)

ஜீவனை பேசு
இரட்சிப்பை பேசு
சுவாசத்தை பேசு
அற்புதத்தை பேசு (2)

சபையே நீ எழும்பிடு-
காற்றே நீ வீசிடு-

போற்று சபையே போற்று -இயேசுவை
போற்று சபையே போற்று (பேசு)

பாடல்.2


நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே -பரம
பரிசுத்த தேவனை பரலோக இராஜனை
பாடல்பாடி கொண்டாடிடுவோம் (2)
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே (2) நீர்தானே


1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம்‍¸ஆயிரம்
பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம்
(நம்பிக்கையும் நீர்தானே)

2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம்,பஞ்சம்
பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம்
(நம்பிக்கையும் நீர்தானே)

3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம் –மரண
இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள்
வந்தாலும் பயமின்றி முன்னேறிடுவோம்
(நம்பிக்கையும் நீர்தானே)



(குறிப்பு: "நீரே" இசைத் தொகுப்பின் ஒரிஜினல் சிடிக்களை வாங்கி மீண்டும்
மீண்டும் கேளுங்கள்;அந்த பாடல்களின் இசையும் அதன் வரிகளும் நிச்சயமாகவே உங்களுக்குள் ஒரு மாற்றத்தையும் உரு மாற்றத்தையும் கொண்டுவரும் என்பது நிச்சயம்.)

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard