Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுகிறித்து மனுஷனே -வேதமாணவர் அதிரடி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுகிறித்து மனுஷனே -வேதமாணவர் அதிரடி..!
Permalink  
 


"அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?" (யோபு.38:2), இது பக்தன் யோபுவிடம் சர்வ வல்லவராகிய தேவாதி தேவன் முழங்கியது;அது எல்லாவகையிலும் பொருந்தத்தக்கதாக ஒரு புதிய எதிரி முளைத்திருக்கிறான்;அவனுக்கு தைரியமிருந்து இங்கே வந்து அவற்றைச் சொன்னால் தக்க பதிலடி கிடைக்கும்.

Theneer Pookal@Kovai on Date: 14:33:25 Jan 19, 2011

1374854?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1296691200&Signature=FdDwcs69zxTcaIfHEYHJZW0GJSg%3D&1295154288


//கிழே கொடுக்கப்பட்ட கருத்து  இறைவன் தளத்தில் அங்கதவராகிய கொள்வினுக்காக கொடுக்க பட்டது. அவருக்கு எப்ப பார்த்தாலும் ''வார்த்தை'' மேல சந்தேகம் ...கிழே கொடுக்கப் பட்ட விளக்கம் தங்களுக்கு போதும் என்று நினைக்கிறன்.//

''அந்த வார்த்தை தேவனாயிருந்தது'' யோவான் ௧:௧ தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் பின்வருமாறு வாசிக்கிறோம். ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனை இருந்தது''.இயேசு கிறிஸ்துவாக பூமிக்கு வந்த ''அந்த வார்த்தை'' (கிரேக்கில், ஸோ லோகாஸ் ) சர்வ வல்லமை உள்ள தேவன் என்று இது பொருள்கொள்கிறது என திருத்துவக் கொள்கைக்காரர் வாதாடுகின்றனர்.

எனினும் , மறுபடியுமாக இங்கும் திருத்தமாய் விளங்கிக் கொள்வதற்கு சூழமைவு அடிப்படையே வைக்கிறது. ''அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது'' என்ற தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலும் சொல்லிருகிறது.மற்றோரு ஆளி''டத்தில்'' (''உடன்,'' KJ ) இருக்கிற ஒருவர் அதே மற்ற ஆளாக இருக்க முடியாது. இதற்கு ஒத்திசைவாய், ஜெசுட் மதகுருஜோசப் பிட்ஸ் மையார் என்பவர் பதிப்பித்த  பைபிள் இலக்கிய பத்திரிகை என்ற ஆங்கில புத்தகத்தில், யோவான் 1 : 1 ன் பிட்பகுதியே ''அந்த'' தேவன் என பொருள் கொள்ளும்படி விலக்கினால், இது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்ததென சொல்லும் அந்த ''வாக்கியத்தின் முந்தின உட்பிரிவுக்கு முரண்படும்,'' என குறிப்பிடுகிறது.

இந்த வசனத்தின் இந்த பாகத்தை மற்ற மொழிபெயர்ப்புக்கள் மொழிபெயர்க்கும் முறையையும் கவனயுங்கள்.

1808 ::: ''அந்த வார்த்தை ஒரு கடவுளாய் இருந்தது'' The New Testament in a Improved Version, Upon the Basis of Archbishop Newcomes New Translatuion: With a Correct Text.

1864... ''ஒரு கடவுளாக அந்த வார்த்தை இருந்தது'' The Emphatic Diaglott, interlinear reading, by Benjamin Wilson.

1935...''அந்த வார்த்தை தெய்வீகமாய் இருந்தது '' தி பைபல் -அன் அமரிக்கன் ட்ரான்ஸ்லேசன் J.M.P Smith and Goodspeed.

1946.... ''ஒரு தெய்வீக இயல்புகுரியதாய் அந்த வார்த்தை இருந்தது'' Das Neue Testament, by Ludwig Thimme.

1950.. ''அந்த வார்த்தை ஒரு கடவுளாய் இருந்தது.'' கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துகளில் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)
1958 ...''அந்த வார்த்தை ஒரு கடவுளாய் இருந்தது '' The  New testament by James L. Tomanek.
1975... ''ஒரு கடவுளாக (அல்லது, ஒரு தெய்வீக இயல்புகுரியதாக ) அந்த வார்த்தை இருந்தது.'' Das Evangalium nach johannes, by seigfried schulz.
1978...''கடவுளைப் போன்ற இயல்பில் அந்த லோகாஸ் இருந்தது '' Das Evangelium nach johannes, by johannes Schneider.

யோவான் 1 : 1 -ல் தியாஸ் (கடவுள் ) என்ற கிரேக்கப் பெயர் இரு தடவைகள் வருகிறது. முதல் தடவை சர்வ வல்லமை உள்ள கடவுளை குறிக்கிறது. அவரோடு அந்த வார்த்தை இருந்தது (அந்த வார்த்தை (லோகாஸ் ) கடவுளோடு இருந்தது. (ஒரு வகையான தியாஸ் )'') இந்த முதல் தியாஸ் -க்கு முன்னாள் டன் (அந்த ) என்ற சொல் வருகிறது, இது தெளிவாய் அதுவென வேறுபடுத்தித் தெரிவிக்கிற திட்டமான கிரக்கச் சுட்டிடைச் சொல் வகையாகும்.
இந்த சந்தர்பத்தில் சர்வவல்லமை உள்ள கடவுளை சுட்டிக் காட்டுகிறது.( ''அந்த வார்த்தை (அந்தக் ) கடவுளோடிருந்தது'')

மறுபட்சத்தில், யோவான் 1 . 1 -ல் இரண்டாவது தியாஸ் -க்கு முன்னாள் சுட்டிடைச் சொல் இல்லை. ஆகையால் சொல்லின் நேர் பொருள் மொழிபெயர்ப்பு, ''அந்த வார்த்தை கடவுளாய் இருந்தது;'' என்றிருக்கும். எனினும் பல மொழிபெயர்ப்புகள் இந்த இரண்டாவது தியாஸ் -ஐ (பயநிலைப் பெயர்ச் சொல் ) ''தெய்வீக'' ''கடவுளைபோன்ர ''அல்லது ''ஒரு கடவுள்,'' என மொளிபெயர்த்திருபதை நாம் கண்டோம்: எந்த அதிகாரத்தின் பேரில் அவ்வாறு செய்கிறார்கள் ?  (இன்னும் முடிவடையவில்லை)

bereans@Kovai On Date: 21:21:56 Jan 19, 2011

lib_avtr_210.gif

// நல்லது சகோதரரே, நல்ல ஒரு பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தளத்தில் ஒரு உறுப்பினரின் தரப்பிலிருந்து கிடைத்திருக்கிறது!!

யோவான் 1:1ஐ மிகவும் சரியாக விளக்கியிருக்கிறீர்கள்!!

இறைவன் தளத்தின் நிர்வாகிக்கு "வார்த்தை" என்றவுடன் பிதா பேசும் போது வெளிப்படும் வார்த்தை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்!! அந்த வார்த்தை இயேசுவாக மாம்சத்தில் வந்தவர் என்று நினைக்கிறார்!! ஆனால் வார்த்தை என்பதும் ஒரு தனி ஆள்தத்துவம் என்பதை ஏனோ ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்!! சரி போகட்டும்!! காதுள்ளவர்கள் நிச்சயமாக கேட்பார்கள்!! தொடர்ந்து இப்படி பதிவுகளை தந்து பக்கங்களை நிறப்புங்கள்!! தேவனின் ஆவி தாமே உங்களை நடத்தட்டும்!! //

எழுதப்பட்ட வார்த்தைக்கு தப்புந்தவறுமான வியாக்கியானங்களைக் கொடுத்து உங்களையும் உங்கள் ஸ்தானத்தையும் உங்கள் மேன்மையையும் நீங்களே கெடுத்துக்கொண்டு பந்தயப்பொருளையும் இழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அறியாமல் தேவத்துவத்துடன்  (Divinity) தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கிறீர்கள்.

"(கிறித்துவாகிய கன்மலையான) இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் " (மத்தேயு.21:44)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அண்மையில் தமிழ்க் கிறித்தவ தளத்தில் நண்பர் மைகோவை அவர்கள் முன்வைத்த கருத்து என்னவென்றால், " துருபதேசத் தளங்களுக்கு எதிராக ஆவேசப்பட வேண்டாம்;அவர்களிடமிருந்தே அனைத்து மோசடியான உபதேசங்களும் வெளிவரட்டும்,அவர்கள் பேசட்டும்,அதன் மூலமே அனைவரும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளுவார்கள்" என்பதாக; ஆனால் நம்முடைய கருத்து என்னவென்றால், அவர்களுடைய தந்திரங்களை அறிந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன், அவர்கள் ஒருபோதும் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய காரியங்களைச் சொல்லுவதே இல்லை அல்லது ஒருபோதும் தங்கள் முழுமையான உபதேசத்தையும் எங்கும் சொல்ல அவர்களுக்கு கட்டளையிடப்படவில்லை;ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமாக இருக்கக்கூடிய தங்கள் வேற்றுமையான உபதேசங்களை அதிகபட்சமாக‌ 30% மட்டுமே அங்குமிங்குமாக சிதறவிடுவார்கள்; அதில் கவரப்படும் அப்பாவிகளைத் தனியே பிரித்துக்கொண்டுபோய் நன்றாக மூளைச் சலவை செய்வார்கள்; இதுவே துருபதேசக்காரர்களின் கடந்த கால வரலாறு;ஆனால் அடியேன் மாற்றி மாற்றி கொடுத்த அடிகளால் அந்த சர்ப்பமானது இங்கே முதன்முதலாக விஷத்தை உமிழத் துவங்கியுள்ளது, தமிழில் எழுத்து வடிவில் இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்; இதை சொல்லிவிடு என்றே அந்த கோவை பெரியன்ஸ் குழுவினரை நச்சரித்துக்கொண்டேயிருந்தேன்; எனது கோரிக்கையை இத்தனை சீக்கிரமாக நிறைவேற்றியமைக்கு நன்றி, நண்பர்களே..!

தொடர்ந்து கோவை பெரியன்ஸ் தளத்தில் இயேசுவானவரை மிகாவேல் தூதனுடன் சம்பந்தப்படுத்தி வேத ஆதாரத்துடன் எழுதியுள்ள விவரம்... உங்களுக்கு என்ன வேத வசனத்தின்படியான ஆதாரம் தானே வேண்டும்...? இதோ ஆதாரத்துடன் இயேசு தேவன் அல்ல சாதாரணத் தூதனைவிட‌ சற்றே மேன்மையான நிலையிலிருந்த தூதனே என்று நிரூபிக்கிறோம் பாருங்கள்...!

/// Col 1:15 Who is the image of the invisible God, the firstborn of every creature:

கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

எல்லா சிருஷ்டிக‌ளிலும் கிறிஸ்து ஒருவ‌ரே அத‌ரிச‌ன‌மான‌ தேவ‌னுடைய‌ த‌ற்சுரூப‌மாக‌ இருப்ப‌வ‌ர், ஆக‌வே தான் அவ‌ர் மாம்ச‌த்தில் இயேசுவாக‌ வ‌ந்த‌ போது இப்ப‌டியாக‌ சொல்லுகிறார்,

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

யோவான் 14:9  என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;

தேவ‌னின் த‌ற்சுரூப‌மான‌வ‌ர் என்று இருப்ப‌தால் இருவ‌ரும் ஒருவ‌ரே என்று சொல்லவே முடியாது!!

2 கொரி 4:4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்து..............................

எபி 1:3. இவர்(கிறிஸ்து) அவருடைய (தேவனின்) மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து,

இப்ப‌டி ஒரே சாய‌லாக‌ இருப்ப‌தால் கிறிஸ்து தேவ‌னின் ஜெனிப்பிக்க‌ப்ப‌ட்ட‌ குமார‌ன் என்ப‌தை புரிந்துக்கொள்கிறோம்!! அவ‌ரின் குமார‌னின் சாய‌லாக‌ மாற‌வே சீஷ‌ர்க‌ளான‌ கிறிஸ்துவ‌ர்க‌ள் அழைக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள்!!

அவ‌ரின் த‌ற்சொருப‌ம் என்ப‌தால் எப்ப‌டி தேவ‌ன் ஆவியாக‌ இருக்கிறாரோ, அப்ப‌டியே கிறிஸ்துவும் ஆவியாக‌ இருப்ப‌வ‌ரே (தொட‌க்க‌ முத‌ல் அப்ப‌டியே இருந்த‌வ‌ர், இடையில் தேவ‌னின் திட்ட‌த்தை நிறைவேற்ற‌வே மாம்ச‌த்தில் வ‌ந்த‌வ‌ர்). கிறிஸ்துவை தேவ‌ன் என்று  வேத‌ம் சில‌ இட‌ங்க‌ளில் எழுதியிருந்தாலும் அவ‌ர் ச‌ர்வ‌வ‌ல்ல‌மை தேவ‌ன் அல்ல‌ என்ப‌தையும் வேத‌ம் சொல்லுகிற‌து!! அப்ப‌டி என்றால் கிறிஸ்து யார்?

ச‌கோ அன்பு இறைவ‌ன் த‌ள‌த்தில் எழுதிய‌து, கிறிஸ்து தேவ‌ தூத‌னாக‌ இருக்க‌ முடியாது என்ப‌து!! ஏன் இருக்க‌ கூடாது என்ப‌த‌ற்கு நானும் சில‌ வ‌ச‌ன‌ங்க‌ள் த‌ருகிறேன்:

எபி. 3:4. இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். 5. எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

நிச்ச‌ய‌மாக‌ வ‌ச‌ன‌ம் ஓர் இட‌த்திலும் இவ‌ர் தேவ‌தூத‌னாக‌ இருந்தார் அல்ல‌து இல்லை என்ப‌தை நேர‌டியாக‌ சொல்ல‌வில்லை, ஆனாலும் வ‌ச‌ன‌த்தின் மூல‌ம் நாம் புரிந்துக்கொள்வ‌து இயேசு கிறிஸ்து பிர‌தான‌ தூத‌ராக‌ தான் இருந்திரிக்க‌ வேண்டும் என்ப‌து!! மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌த்திலும் தேவ‌ன் அவ‌ரை தேவ‌தூத‌ர்க‌ளுட‌ன் தான் ஒப்பீட்டு பேசுகிறார், ஏன் தேவ‌ தூத‌த‌ர்க‌ளை இதில் இழுக்க‌ வேண்டும்!! நீ என்னுடைய‌ குமார‌ன் என்று இது வ‌ரையில் யாரிட‌மும் சொன்ன‌தில்லை என்றே இருந்திருக்க‌லாமே!! ஏன் தூத‌ர் என்ன‌ ஒரு வித்தியாச‌ம் என்றால் கிறிஸ்து தேவ‌னால் நேர‌டியாக‌ ப‌டைக்க‌ப்பாட்ட‌வ‌ர், ஆனால் தேவ‌தூத‌ர்க‌ளையோ கிறிஸ்துவே ப‌டைத்தார்!!

ச‌ரி ஏன் இவ‌ர் பிர‌தான‌ தூத‌னாக‌ இருப்பார் என்ப‌த‌ற்கு இன்னும் ஒரு முக்கிய‌மான‌ வ‌ச‌ன‌ம் இருக்கிற‌து,

மிக்கேல் தூத‌ர் என்ப‌வ‌ர் தேவ‌னின் பிர‌தான‌ தூத‌ன்!! அந்த‌ மிக்கேலின் அர்த்த‌ம் என்ன‌ தெரியும்,

மிக் என்றால் சாயலானவர், ஏல் என்றால் தேவன்.

ஆக‌ தேவ‌னின் சாய‌ல் கொண்டிருப்ப‌வ‌ர்!! ஆங்கிள‌த்தில், Who is the express image of God!!

தொட‌ரும்.............................///


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

யோவான் 1:1 அர்த்தம் தெளிவானது. இவர் எங்கிருந்து இந்த மாதிரியான கருத்துக்களை சொல்கிறார் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதோ உண்மையான கருத்து.

http://isakoran.blogspot.com/2007/08/11.html">டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:10





__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

/download.spark?ID=852955&aBID=128972
// அறிவு தான் மங்கி போய் வசனம் புரியவில்லை என்று பார்த்தால் கண்ணும் அப்படியே தான் இருக்கிறது...தமிழ் மாத்திரமே பழகி போன உம்மை போன்றோருக்கு இது புரிவது கடினமாக இருக்கலாம், ஒழுங்காக ஸ்கூலுக்கு போகாதவரே, நான் ர‌ஸ்ஸ‌லை பின் ப‌ற்றுவ‌து கிடையாது என்ப‌தை ப‌ல‌ முறை எழுதியும் உம் ம‌ண்டைக்குள் அது ஏற‌வே மாட்டாதா!! ஆவி ஜிவியாக‌ இருந்த‌ அந்த‌ பிர‌தான‌ தூத‌ன் த‌ன‌க்காக‌ ஒரு ச‌ரீர‌த்தை ஆய‌த்த‌ப்ப‌டுத்தும்ப‌டியாக‌ வின்ண‌ப்ப‌ம் செய்கிறார்!! உம்மை போன்ற நாசக்கார மோசக்கார "வித்வான்களுக்கு" பதில் எழுதுவது ஒன்றும் எனக்கு புதிது அல்ல!! //

இவை துருபதேச யேகோவா சாட்சி கூட்டத்தைச் சேர்ந்த கோவை பெரியன்ஸ் தளத்தின் தூஷணக் கூச்சல்...மங்கலான ஒரு வசன அட்டையைப் போட்டுவிட்டு கண் மங்கிப் போனதாகச் சொன்னால் அது அநியாயம் அல்லவா? இரவும் பகலும் கணிணி முன்பு அமர்ந்திருப்பதால் எனது கண் மங்கிவிட்டது உண்மை தான் ஆனாலும் எனது அறிவுக்கண் அத்தனை சீக்கிரம் மங்கிவிடாது; சிலுவையில் பாடுபட்ட எனது இரட்சகரின் அறிவை மங்கச் செய்து அவரை பைத்தியமாக்கவும் சுயநினைவை இழக்கச் செய்யவும் அவருடைய ஆவி மற்ற மனிதரைப் போல இயல்பாகப் பிரியவும் உம்மைப் போன்ற சாத்தான் கூட்டத்தார் தீவிரமாக முயற்சித்தார்களாம்; ஆனால் அவர்கள் அதில் தோற்றுபோயினர்; அதே தூஷண ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கும் ஞானசூன்யமான உமது சூழ்ச்சிகளுக்கு யாரும் பலியாகாதிருக்க அதே சிலுவை நாயகர் எனது கண் - அறிவுக் கண் குருடாகாமல் காத்துக்கொள்ளுவார்.

தனது தாய்மொழியைக் குறித்து அறியாத
ஒரு மேதாவி வேறெந்த மொழியையும் ஆய்ந்தறியும் அறிவு வர வாய்ப்பே இல்லை; சொல்லப்படும் ஒரு காரியம் எந்த மொழியில் சொல்லப்பட்டாலும் எந்த மொழியில் சொல்லப்பட்டாலும் ஒரு மனுஷன் தான் சாகும் வரையிலும் தன் தாய்மொழியைக் கொண்டே அதனை விளங்கிக் கொள்ளமுடியும் என்பது உலகின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான நியதியாகும்; என்னைப் போன்றவர்கள் தமிழ் மொழியைக் கொஞ்சமாவது அறிந்திருப்பதாலேயே மற்ற மொழிகளைக் குறித்து அறியும் ஆர்வமாவது ஏற்படுகிறது.

மரித்த இயேசுவின் சடலத்துக்குள்ளிருந்து‌ வெளியேறிய அவருடைய ஆவி மீண்டும் உள்ளே நுழைந்தது எனும் சாதாரண உண்மையை
கூடுவிட்டு கூடும் பாய்ந்ததா என பரியாசம் செய்த நீர் எங்கோ இருந்த பிரதான தூதனின் ஆவி ஒரு சரீரத்துக்காக ஏங்கி அந்த சரீரத்துக்குள் வந்தார் என்று கூறுகிறீர்; யாருடைய கருத்து நகைப்புக்குரியதாக இருக்கிறது என்று வாசகரே சொல்லட்டும்; அந்த பிரதான தூதனின் பெயர் மிகாவேல் தானே, அதைச் சொல்லாமல் ஏன் அமுக்கி வாசிக்கிறீர்..?

நீர் இங்கே தமிழில் கதைப்பவைகளில் ஆங்கிலத்தில்- ரஸ்ஸல் எனும் மேதாவி எழுதிய  ஆறு முக்கியப் போதனைகளின் பாதிப்பு இல்லையா..?

அண்ணே, ஒமக்கு ஒடம்பெல்லாம் எரிந்தாலும் சரி, நான் உம்மை யெகோவா சாட்சி என்றே குறிப்பிடுவேன்; ஏனென்றால் நீர் சாதாரண மக்களை வஞ்சிக்கவே வேதாகம மாணவர் என்று கூறிக்கொள்ளுகிறீர் அல்லது அவர்களுடைய போதனையின் பாதிப்பில் பேசுகிறீர்; ஆனாலும்  "இயேசுவானவர் ஆராதனைக்குரியவரல்ல, அவர் பாவப் பரிகார பலி மாத்திரமே" என்று, சொல்லி பிதாவாகிய தேவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்று பிதாவுக்கே புத்தி சொல்லுவதால் நீங்கள் பிதாவின் பெயரைக் கூறவே தகுதியற்றவர்கள்; உலகின் எந்த மூலைகளிலெல்லாம் பிதாவாகிய தேவனுடைய காரணப்பெயரான  "யெகோவா" என்பது உச்சரிக்கப்படுகிறதோ அந்த சாபமெல்லாம் உங்கள் தலையின் மீதே நின்று- அந்த இரத்தப்பழி மட்டுமல்ல, இயேசுவின் இரத்தப்பழியும் உங்கள் மீதே சுமரும்; காரணம், இரட்சிக்கப்படும்படி கொடுக்கப்பட்ட நாமம் " இயேசு " எனும் நாமமே தவிர "யெகோவா" எனும் நாமமல்ல; "யெகோவா" எனும் நாமம் இஸ்ரவேலருக்காக மாத்திரமே வழங்கப்பட்டது;இந்த நாமம் அவருடைய தாசானு தாசனாகிய ஆபிரகாமுக்கே வழங்கப்படவில்லை என்பது தெரியுமா..?


உமது அறிவு மங்கலான- மறைவான- மலிவான‌ காரியங்களிலேயே அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் அறிவைத் தேடுவோரைக் கண்டால் உமக்கு பரியாசம் பண்ணவே தோன்றும்; ஆனால் நான் உமக்காக நல்லதொரு தெளிவான ஒப்பீட்டு வாக்கிய பிரதியைப் போட்டிருக்கிறேன், பாரும்; இதில் நீர் சொன்னபடியே  GOD எனும் சொல்லுக்கு முன்னால்
The போடாவிட்டாலும் ஏதோ குழப்பத்தில் அந்த The-WORD-க்கு முன்னால் போட்டிருக்கிறார்கள்; இப்போது இதை என்ன செய்வதென்றே தெரியவில்லை; அப்படியானால் பிதாவாகிய தேவனைக் குறிப்பிடும் GOD-க்கு The-முன்னால் வரக்கூடாது அல்லவா? அதுபோல வேதத்தில் எங்குமே இல்லை என்று உம்மால் சொல்லமுடியுமா? அந்த தேவாதி தேவனே வார்த்தை வடிவாக இருந்தார் என்றும் அவரே மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றும் நீர் குறிப்பிடும் வார்த்தைகளே உமக்கு Return (boomerang..?) அடிக்கிறதே என்ன செய்யலாம்?

In the beginning was THE WORD and THE WORD was with THE GOD and GOD was THE WORD.



1
ἐν
en
In
ἀρχῇ
archē
beginning
ἦν
ēn
was

o
the
λόγος,
logos
word
καὶ
kai
and

o
the
λόγος
logos
word
ἦν
ēn
was
πρὸς
pros
with
τὸν
ton
the
θεόν,
theon
God
καὶ
kai
and
θεὸς
theos
God
ἦν
ēn
was

o
the
λόγος.
logos
word
2
οὗτος
outos
same
ἦν
ēn
was
ἐν
en
in
ἀρχῇ
archē
beginning
πρὸς
pros
with
τὸν
ton
the
θεόν.
theon
God


இது உம்மைப் போன்ற திரித்துவ சத்திய மறுப்பாளர்களுக்கெல்லாம் சம்மட்டியான வெளிப்பாடாகும்; " GOD was THE WORD " என்பதை உம்மால் ஜீரணிக்கவே முடியாதே, ஒடம்பு அப்படியே உதறுமே..? அவர் ஆவி வடிவில் தானே இருந்தார், எப்போது வார்த்தை வடிவுக்கு ஜாகை மாறினார் என்று நீர் துடிக்கிறதை என் கற்பனையில் பார்க்கிறேன்.


(ASV)  In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

(BBE)  From the first he was the Word, and the Word was in relation with God and was God.

(CEV)  In the beginning was the one who is called the Word. The Word was with God and was truly God.

(ISV)  In the beginning, the Word existed. The Word was with God, and the Word was God.

(KJV)  In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

(KJV+)  InG1722 the beginningG746 wasG2258 theG3588 Word,G3056 andG2532 theG3588 WordG3056 wasG2258 withG4314 God,G2316 andG2532 theG3588 WordG3056 wasG2258 God.G2316

(LITV)  In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

(Tamil OV)  ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.


ஏதோ போனால் போகட்டும் என்று அந்த கால KJV மொழிபெயர்ப்பாளர்கள் 
வெறுமனே "
the Word was God." என்று போட்டுவிட்டு ஒதுங்கினார்கள்; ஆனால் தற்காலத்தில் ஒருவனும் போக்குச்சொல்ல இடமே இல்லை;

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான்.
12:48 )

"நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்."
( யோவான்.15:22,23)

அவரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கவும் தடுக்கிவிழவும் அவரே செய்திருக்கும் போது நீர் பாவம், சாதாரண மனுஷன் என்ன செய்வீர்? நான் தடவித் தழுவிக் கொண்டிருக்கிறேன்; நீரோ தடுக்கித் தடவிக் கொண்டிருக்கிறீர்; சீக்கிரம் எழும்ப வாழ்த்துக்கள்..!

இந்த திரை நீக்கப்பட்ட சத்தியமானது கொடுமையான வெளிப்பாடுகளினால் சபைகளைக் கலங்கப்பண்ணின இரஸ்ஸல் காலத்தில் இல்லை; ஆனால் இனி உங்களுக்கு டிக்கி தான் நைனா... இன்றைக்கு முகமது இருந்திருந்தால் அவருக்கே நாங்கள் ஞானஸ்நானம் கொடுத்திருப்போம்' ணேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// அந்தம் என்கிற வார்த்தையை முடிவில்லாதவர் என்று அர்த்தம் கொடுக்கும் முதல் அகராதி யெளவன தளம் தான்!! //

நம்முடைய தளத்தைக் குறித்துக் கூறப்பட்ட தவறான தகவலுக்கு மட்டும் மறுப்பை முன்வைக்கிறேன்;"அந்தம்" எனும் சொல்லின் அர்த்தம் நமக்கு நன்கு தெரியும்;ஆனாலும்...

"இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். (வெளிப்படுத்தல்.
1:8)

அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
(வெளிப்படுத்தல்.1:11)

"அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்."
(வெளிப்படுத்தல்.21:6)

"நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்."
(வெளிப்படுத்தல்.22:13)


-மேற்கண்ட வசனங்களின் பொதுவான வார்த்தையானது "ஆல்பா" எனும் வார்த்தையாகும்;அறியாதவர்களுக்காக எழுதுகிறேன்,இது ஆங்கில மொழியின் ஆதார எழுத்தான "A"எனும் எழுத்தைப் போலவும் தமிழ் மொழியின் "
"எனும் எழுத்தைப் போலவும் கிரேக்க மொழியின் ஆதார எழுத்தாகும்;காரணம் இன்றைய ஆங்கிலத்தைப் போலவே அன்றைக்கு கிரேக்கம் செழித்திருந்தது;ஆனாலும் இயேசுவானவர் கிரேக்க மொழியில் ஏதாவது பேசினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பது போலத் தெரியவில்லை;ஆனாலும் அன்றைய மக்கள் பெரியதாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் ஆதாரச் சொல்லாகவும் ஆரம்ப உயிர்ச் சொல்லாகவும் தாம் இருப்பதாகச் சொல்வதிலிருந்து நம்முடைய கர்த்தரின் எல்லையற்ற கர்த்தத்துவத்தைக் குறித்து நாம் அறிந்திட முடியும்;அதுபோலவே ஒமேகா என்பது கிரேக்கத்தின் இறுதிச் சொல்லாக இருக்கிறது;இதன்மூலம் அனைத்துக்கும் தாமே முடிவு என்கிறார்;
இதற்கு ஆதாரமாக ஒரு குறளையும் அடியேன் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்,"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு".

இந்த பொருளிலேயே அதாவது, ஆரம்பிப்பவர் மற்றும் முடிப்பவர் அல்லது  ஆரம்பித்து முடிப்பவர் என்ற பொருளிலேயே இதனைக் கொள்ளவேண்டுமே தவிர அவரே முடிந்து போகப்போகிறவர் என்று எந்த மடையனாவது நினைத்துக்கொண்டால் அவன் கண்களில் வெளிச்சம் இல்லை என்பது பொருளாகும்;அப்படிப்பட்ட ஜந்துக்களுக்காகவும் ஒரு வசனம் உண்டு...

"வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. "(ஏசாயா.8:20)




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

எனதருமை தள நண்பர்களே,கோவை பெரியன்ஸ் போன்ற துருபதேசத் தளங்களுடன் தொடர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம்;ஆனாலும் அவர்களிடம் தாழ்த்தினால் இன்னும் தரம் தாழ்த்தி எழுதுவதும் எச்சரித்து எழுதினால் பரியாசம் செய்வதுமான போக்கு தொடருகிறது;மேலும் " நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் " என்பது போல வரட்டுப் பிடிவாதத்துடன் நாம் சொல்லும் வசனத்துக்கு சத்தியத்துக்குப் புறம்பான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நமது வாசக நண்பர்கள் அமைதி காப்பதைப் பார்த்தால் 'அவர்களுடன் ஏன் வீணான விவாதம் ' என்பது போலவும் 'வாதம் எப்படித் தான் போகிறதோ பார்ப்போம் ' என்ற மனப்பான்மையில் இருப்பதுபோலத் தோன்றுகிறது;இங்கே வந்து கேட்கப்படாத கேள்விகளுக்கெல்லாம் நானே வலியச் சென்று எடுத்துப் பதித்து பதில் எழுதுவதால் 'இவன் என்ன கிறித்தவத்தின் காவலாளியா ' என்ற ஏச்சும் பேச்சுமே மிச்சமாக இருக்கிறதே தவிர வேறெந்த பலனுமிருப்பது போலத் தெரியவில்லை;அந்த ஆட்கள் சொல்லுவது போல, ஆன்லைன் கனெக்ஷன் இருப்பினும் நாம் கலெக்ஷன் எதுவும் பண்ணக் கற்றுக்கொள்ளவில்லை.

எனவே நமக்கு என்ன தோன்றுகிறது என்றால்,ஆமாம் எனது வாசக நண்பர்கள் அடிக்கடி யோசிப்பது போல, ஒன்றுமில்லாத ஒரு குப்பையான தளத்துக்கு தேவையில்லாமல் விளம்பரம் கொடுப்பது போலவே இருக்கிறது;எனவே இந்த துருபதேசத் தளங்களுடன் மோதும் பணியைத் தற்காலிகமாக‌ நிறுத்திவைக்கிறேன்.

ஆனாலும் இங்கே நண்பர்கள் வந்து சுட்டிக்காட்டும் கேள்விகளுக்கோ அல்லது எனக்கு மின்னஞ்சல் மூலம் கேட்கும் கேள்விகளுக்கோ உரிய பதிலைத் தர ஆயத்தமாக இருக்கிறேன்;எனக்கென்று எந்த பேர்ப் புகழையோ பணம் பொருளையோ எதிர்பார்க்காமல் புனைப்பெயரில் கர்த்தருக்காகச் செய்யும் தியாகமான இந்த பணியினால் நான் மட்டுமல்ல, எனது குடும்பத்தாரும் தேவையில்லாமல் தூஷிக்கப்படுகிறார்கள்;இதைக் குறித்து யாரும் வருத்தப்படப்போவதில்லை; "அடாது செய்பவன் படாது படுவன் " என்ற முதுமொழிக்கேற்ப நண்பர்களும் வேடிக்கை தானே பார்க்கின்றனர்?

எனவே இனி அந்த சைத்தான்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கொஞ்ச காலத்தில் எத்தனை பேரை வஞ்சிக்கமுடியுமோ அத்தனை பேரையும் வஞ்சிக்கட்டும்;கர்த்தர் தமது மணவாட்டி சபைக்காக வைராக்கியம் கொண்டு கடாட்சித்தால் கடாட்சிக்கட்டும்;மற்றபடி சிறிய அளவில் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இறைப்பணியாற்றுவேன்,என் ஜீவன் உள்ளவரையிலும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

எனக்கு அருமையான வாசக நண்பர்களே, தங்கள் வசதிக்காகவே துருபதேசத் தளங்களின் விவரங்களை இங்கே பதித்து அதன் தொடுப்புகளையும் கொடுத்து வருகிறேன்; ஏனென்றால் நீங்கள் அங்கே போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான்;ஏதாவது ஒருவகையில் நீங்கள் வஞ்சிக்கப்பட்டால் அந்த இரத்தப்பழி என்னைச் சேரக்கூடாது என்றே எச்சரிக்கிறேன்;ஆனாலும் இது எனக்கு ஏற்புடைய பணியல்ல என்று அறியவும்; வேறு யாரும் இவற்றுக்கு பதில்தர ஆயத்தமாக இல்லாததால் என்னால் இயன்ற மட்டும் பொதுவான ஞானத்திலேயே பதிலளித்துவருகிறேன்; நமது எதிரிகள் கூறுவது போலவே, "மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. " (நீதிமொழிகள்.30:2,3) ஆனால் இந்த அறிவுகூட இல்லாதோரையும் அறிவிருந்தும் மறைந்திருப்போரையும் எண்ணி வருந்துகிறேன்; எனவே என்னுடைய கருத்துக்களை அவர்களுடைய கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் எனக்கு தீர்ப்பு சொல்லுங்கள்; இதனை இங்கே பின்னூட்டமாக இடலாம் or எனக்கு தனிமடல் அனுப்பலாம் அல்லது மின்னஞ்சல் மூலமும் என்னைத் தொடர்புகொள்ளலாம். Pls mail me: chillsam@rocketmail.com

தொடர்ந்து இந்த திரியின் பாதிப்பில் அங்கேயிருந்து வந்துள்ள பித்தலாட்டங்கள்...

// சம்பந்தமே இல்லாமல் பெந்தகோஸ்தே பாணியில் தன் குழப்பங்களை அழகாக வெளிப்படுத்தி, வாசிப்பவர்களை குழப்பத்தின் உச்சிக்கே கொண்டு போய் இருக்கிறார் யெள்வன ஜனம் தள சர்வாதிகாரி!!

ஒவ்வொன்றாக பார்கலாம், இவரின் வசன புலமையை!! இவர் எழுத எழுத எனக்கு வசனத்தின் மேல் இன்னும் தாகம் ஏற்படுகிறது, நான் இன்னும் கற்றுக்கொள்கிறேன், இவர்களுக்கு பதில் கொடுக்க‌!!

//ஆனாலும் அவர் அநாதியானவர் அல்ல என்று கூறுவதால் பிதாவாகிய தேவனை அனாதையாகவும் ஊமையானவராகவும் சித்தரிக்கிறார்கள்;//

இது நான் சொல்லாத‌ ஒரு க‌ருத்து!! ச‌ர்வ‌வ‌ல்ல‌மை உள்ள‌ தேவ‌னை அனாதையாக‌வும் ஊமையான‌வ‌ராக‌வும் நான் சித்த‌ரிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் அல்ல‌, ஏனென்றால் அவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்ப‌து வேத‌ம் என‌க்கு தெளிவு ப‌டுத்தியிருக்கிற‌து!! ஆதி அந்த‌ம் இல்லாத‌வ‌ர் தான் அநாதி, அதாவ‌து அவ‌ரின் துவ‌க்க‌ம் எப்ப‌டி என்றும் எப்பொழுது என்றும் ம‌னித‌ அறிவுக்கு அப்பாற்ப‌ட்ட‌ ஒரு விஷ‌யமாகும்!! நான் பிதாவாகிய‌ தேவ‌னை குறித்து சொல்லுகிறேன்!! இப்ப‌டிப‌ட்ட‌ ச‌ர்வ‌வ‌ல்ல‌மை உள்ள‌ தேவ‌ன், ம‌னித‌ர்க‌ளிட‌ம் தொட‌ர்பு கொள்ள‌ த‌ன் குமாரானை தான் உப‌யோகித்தார்!! ப‌ழைய‌ ஏற்பாட்டில் தூத‌னான‌வ‌ர் என்று ப‌ல‌ முறை ப‌ல‌ இட‌ங்க‌ளில் வாசித்தும் இருப்பீர்க‌ள்!! ஐய்யா கிறிஸ்த‌வ‌ மார்க‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளே (இவர்கள் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அல்ல‌), இயேசு என்ப‌து அவ‌ர் பூமியில் இருந்த‌ போது அவ‌ருக்கு உண்டான‌ பெய‌ர்!! பூமியில் வ‌ரும் முன் கிறிஸ்துவாக‌ ஒரு ஆவிக்குரிய‌ ஜீவியாக‌, பிதாவின் காரிய‌த‌ரிசியாக‌, அத‌ற்கும் மேல் அவ‌ரின் குமார‌னாக‌ அவ‌ருட‌ன் இருந்தார்!!

"ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை."(யோவான் 1:1,2,3)

ஆதியில் வார்த்தையாக‌ இருந்த‌ இயேசு கிறிஸ்து தேவ‌னாக‌ இருந்தார்!! தேவ‌ன் என்ற‌வுட‌ன் அவ‌ர் பிதா என்று பார‌ம்ப‌ரிய‌ விசுவாசிக‌ள் வேண்டுமென்றால் ந‌ம்ப‌ட்டும், என‌க்கு க‌வ‌லை இல்லை!! சாத்தானையும் தான் இப்பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌ன் என்று வேத‌ம் கூறுவ‌தால், இவ‌ர்க‌ள் அவ‌னையும் பிதா என்று சொன்னாலும் சொல்லுவார்க‌ள்!! தேவ‌னோடு (பிதாவோடு) அவர் (கிறிஸ்து) தேவ‌னாக‌ இருந்தார்!! தேவ‌ன் என்று மாத்திர‌ம் பார்த்தோமென்றால், அத‌ற்கு ஏக‌ப்ப‌ட்ட‌ அர்த்த‌ங்க‌ள் இருக்கிற‌து, நீதிப‌தி, ராஜா, மகாராஜா, இவை எல்லாம் தேவ‌ன் என்று தான் இருக்கிற‌து!! இன்னும் நீதிப‌திக‌ளை "மை லார்ட்" என்று தான் சொல்லுவார்க‌ள் என்ப‌தை க‌வ‌னிக்க‌ வேண்டுகிறேன். //

இந்த மோசடியான - பித்தலாட்டமான திரிபுகளுக்கு அவர்கள் பாணியிலே விளக்கம் தேடுகிறேன்; உதாரணத்துக்கு அவர்கள் குறிப்பிட்டயோவான்.1:1-ஐயும் அதற்கு அவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்; அவர்கள் கூற்று என்ன,"தேவன்" என்று குறிப்பிட்ட இடமெல்லாம் பிதாவாகிய தேவன் இல்லை என்பதுதானே? சரி, அவர்களுக்குப் பிடித்தமான மூலபாஷைக்கும் இந்த விதி பொருந்துமா என்று அறிய விரும்புகிறேன்; ஆம்,எனில் யோவான்.3:16 - ஐ ஒப்பிட்டுப் பார்க்கலாமா? ஒப்புக்கொள்ளமாட்டாயா..? இதுக்குதான் உன்னை லோக்கல் பாஷையில் போட்டு தள்ளவேண்டியதாகிறது, இப்போ புரிகிறதா.?

G2316
θεός theos  theh'-os
-Of uncertain affinity; a deity, especially (with G3588) the supreme Divinity; figuratively a magistrate; by Hebraism very: - X exceeding, God, god [-ly, -ward].

யோவான்.1:1 மற்றும் 3:16 ஆகிய இரண்டு வசனத்திலும் தேவன் என்பதற்கு ஒரே கிரேக்க வார்த்தையே கையாளப்பட்டுள்ளது; மேலும்,"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்."(2.கொரிந்தியர்.4:4) எனும் வசனத்தில் வரும் தேவன் என்ற சொல்லுக்கும் அதே கிரேக்க வார்த்தை பயன்படுகிறது;ஆக பிதாவாகிய தேவன்,வார்த்தையாகிய தேவன்,பிரபஞ்சத்தின் தேவன் ஆகிய மூன்றில் தமிழுக்கும் கிரேக்கத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று தெரியவருகிறது;ஆனாலும் ஒரு குறிப்பிட்ட மொழியினால் அறிய முடியாததை அவர்தம் செயல் மற்றும் சூழல் மூலம் அறியலாமல்லவா? இதன்படி பிதாவாகிய தேவனுக்கு சமமும் இணையுமாக வேதம் முழுவதும் பேசப்பட்டவரும் செயல்பட்டவருமான வார்த்தையாகிய தேவன், அதாவது இயேசுவானவர் தொழத்தக்கவரே, நீர் இதைக் கண்டு அழத்தக்கவரே; உலகமே அவரை இராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா தேவாதி தேவன் என்று ஆர்ப்பரித்து மகிழும்போது, யூதாஸைப் போல எங்கிருந்தோ முனங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தாரே நீங்களெல்லாரும்; இறுதியாக "தேவன் யார்?" என்ற சர்ச்சைக்கு எளிமையான ஒரு தீர்வை ஆங்கில வேதாகமம் தருகிறது;நீங்கள் குறிப்பிடும் தேவனை சிறிய எழுத்தாலும் ("g") பிதாவாகிய தேவனையும் வார்த்தையாகிய தேவனையும் பெரிய எழுத்தாலும் ("G") குறிப்பிடுகிறது; இது போதுமா இன்னும் வேண்டுமா..?

(KJV)  In whom the god of this world hath blinded the minds of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of God, should shine unto them. (2.Corinthians.4:4)

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் பிதாவாகிய தேவன், வார்த்தை மற்றும் ஆவி ஆகிய இரண்டு பிரதான தன்மைகளில் இருந்தார்; அதில் முதலாவது வார்த்தையாகிய தேவன் மனு உருவெடுத்து வந்து அனைத்தையும் செய்து முடித்தார்;அவர் பரமேறிச் சென்று தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்காக தமக்குள்ளும் பிதாவுக்குள்ளும் இருந்து இயங்கும் பரிசுத்த ஆவியான தேற்றரவாளனை இந்த உலகுக்கு அனுப்பினார்; அவர் வேதம் வேதம் முழுவதும் ஆள்தத்துவமுடையவராகவே விளங்கினார்; ஒழுங்காக ஸ்கூலுக்குப் போகாத எனக்கே தெரியும் இந்த இராஜ ரகசியம் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்த கனவான்களுக்குத் தெரியாதது ஆச்சரியமில்லை; அதுவே தேவனுடைய கிருபை; இவற்றை கல்விமான்களான உங்களுக்கெல்லாம் மறைத்துவிட்டார் போலும்..!

மேலும் சிங்காசனத்தில் இராஜா போல ஒருவர் உட்கார்ந்திருப்பது போலவும் அவர் அருகே சேவகம் செய்ய அமர்ந்திருக்கும் யாரோ ஒரு தூதன் போலவும் இயேசுவானவரை கற்பனை செய்துவைத்திருக்கிறீரே,அப்படி காரியதரிசியாகவும் பிரதான தூதனாகவும் இருந்தவர் மிகாவேல் தூதன் தானே, அதை ஏன் வெளிப்படையாகக் கூறமாட்டேன் என்கிறீர்?அதை  இப்போது சொல்லவேண்டாம் என்று இரஸல் சொல்லிவிட்டாரா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்."(லூக்கா. 2:13,14)

// எல்லா ஜனத்திற்கும் ஒரு நற்செய்தியை சொல்லி விட்டு, தேவ தூதர் கூட்டம் இப்படியாக உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை செலுத்துகிறார்கள், எனென்றால் உன்னதத்தில் இருக்கும் அந்த தேவன், தன் நேச குமாரனை, வார்த்தையாக (லோகோஸ்) இருந்த கிறிஸ்துவை இந்த பூமிக்கு தன் (தேவனின்) சித்தம் நிறைவேற்றும்படி, எல்லா மனிதர்களின் இரட்சிப்பிற்காக, மாம்சத்தில் இயேசுவாக பிறக்க வைத்தார்!! தேவ தூதர்கள் இன்றைய திரித்துவம் பேசுபவர்கள் போல், தேவனே மாம்சத்தில் வந்து பிறந்தார் என்று பாடவில்லை!! மாறாக மாம்சத்தில் வந்த கிறிஸ்துவினால் அனைவருக்கும் இரட்சிப்பின் செய்தியும், அதினால் பிதாவாகிய தேவனுக்கு மகிமையும் என்றே சொல்லி வாழ்த்தினார்கள்!! வாழ்த்திய பிறகு தேவனை துதித்தார்கள்!!

வேதத்தில் ஒவ்வொரு வசனமும் தேவன் வேறு கிறிஸ்து வேறு என்று தெளிவாக இருக்கிறது!! புரியாத ஒரு சில வசனங்களை வைத்துக்கொண்டு, இவர் தான் அவர், அவர் தான் இவர் என்று மாயாஜால கதைகளை வைத்து தொழில் நடத்தும் கூட்டத்தார் இதை புரிந்துக்கொள்ளும் காலம் வ‌ருகிறது!!

தேவனால் மரிக்க முடியாது, அவர் சாவாமையுள்ளவர், அவர் மூன்று நாட்கள் மரித்து போய் இருக்க முடியுமா!! ஆகவே அந்த இரட்சிப்பின் பலியாக, மீட்கும் பொருளாக தேவனே அல்ல, அவரின் ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவை இயேசுவாக மாம்சத்தில் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்!! //

இயேசுவானவரின் தெய்வத்துவத்தை மறுக்கும் மேற்காணும் செய்தியானது வேதமாணவர் குழுவான கோவைபெரியன்ஸ் தளத்தில் பிதா குமாரன் எனும் தலைப்பின் கீழ் பதிக்கப்பட்டுள்ளது;

இவர்களை அறிமுகப்படுத்துவதற்காக அடியேன் வெட்கப்படுகிறேன்; ஆனாலும் இரண்டு காரணங்களுக்காக இதனை மேற்கொள்ளுகிறேன்;ஒன்று புதிய விசுவாசிகள் தடுமாறக்கூடாது,மற்றும் இவர்களுடைய துருபதேசங்களுக்கு சரியான மாறுத்துரத்தைச் சொல்லி நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளவேண்டும்;இது நாம் பெலப்படவும் இவர்களை எச்சரிக்கவும் உதவுகிறது; இதனால் அவர்களுடைய Viewers ரேட் உயரட்டும், அதைக் குறித்து நான் கவலைப்படுகிறது இல்லை;

இது வேட்டையாடச் செல்லும் முன்பதாக புலியானது தனது நகங்களை மரத்தில் கூர்தீட்டிக்கொள்ளுவதைப் போன்றதே;ஆம்,இவர்கள் சாத்தானல்ல, இவர்கள் சாத்தானின் பிடியில் சிக்கி அவன் இச்சையின்படி செய்யப் பழகினவர்கள் என்பது அறிந்ததே; இவர்கள் நம்மைப் பொறுத்தவரை சாதாரண மரங்களே;இவர்கள் என்றைக்காவது ஒருநாள் எழுந்து வரட்டும், அதற்குள் அநேகரை இழுத்துப்போட்டுவிடாமல் தடுக்க வேண்டும்; நாம் இவர்களை நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சிக்காமல் சத்தியத்தை மட்டும் கட்டுரைகளாகவோ கேள்வி பதில் பாணியிலோ எழுதிவிட்டு போகலாம்;ஆனாலும் அதன் வீச்சு குறைவாகவே இருக்கும்;இப்படி அடையாளப்படுத்தி எழுதுவதே நமது நேர்மைக்கும் சான்றாக விளங்குகிறது.

ஏற்கனவே இரண்டு பிரதானமான ஸ்தாபனங்களை நாம் பொருட்படுத்துகிறதில்லை;ஒன்று இஸ்லாமியர்,மற்றவர் கத்தோலிக்கர்;இவர்களை வரிக்கு வரி தேடிப்பிடித்து விமர்சிக்கிறதில்லை; காரணம் அவர்கள் சத்தியத்துக்கு விரோதமானவர்கள் என்பது வெளிப்படையாகவே தெரிவதால் பிரச்சினையில்லை;அவர்களைப் பின்பற்றுவது என்பது ஒரு தனிப்பட்ட ஆத்துமாவின் தெரிந்தெடுப்பாக இருப்பதால் நமக்கு இரத்தப்பழி இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் நம்மில் ஒருவரைப் போல நம்மோடு தந்திரமாகப் பழகி நமக்குள் குழப்பத்தையும் பிரிவினையையும் விளைவிக்க எண்ணும் சிறு குழுக்களிடம் நாம் அதிஎச்சரிக்கையாக இருந்திட வேண்டும்;அதுவும் தமிழ் கிறித்தவ சமுதாயத்தில் இதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது அடியேன் தன்னார்வத்துடன் ஏற்றுக்கொண்ட பணியாகும்.

இயேசுவானவர் இந்த உலகில் மனிதனாக வந்து அவதரித்தபோது தூதர்கள் பாடி தேவனைத் துதித்த வசனத்தை எடுத்துக்கொண்டு அதனை வியாக்கியானம் செய்யும் கோவை பெரியன்ஸ் குழுவின் உண்மைக்கு மாறான துர்செய்திகளை நிதானமாக ஆராய்வோமாக‌.

முதலாவதும் அவர்களால் மாற்றிக்கொள்ளமுடியாததுமான கூற்று என்னவென்றால் இயேசு பிதாவாகிய தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதே;

அதை அடித்தளமாக
க் கொண்டே மற்ற கொள்கைகளை வகுக்கிறார்கள்; அதன் விளைவாக பிறக்கும் மற்றொரு கொள்கையானது பிதா வேறு குமாரன் வேறு என்றாகிறது;

குமாரனை பிதாவிடமிருந்து பிரித்தபிறகு அவர் ஆதியில் என்னவாக இருந்தார் என்று சொல்லவேண்டுமே,அதற்கு இரண்டு பதிலைச் சொல்லுவார்கள்;ஒன்று பிரதான தூதனாகிய மிகாவேல் என்பதும் மற்றது அவர் பிதாவின் வார்த்தை என்பதும்;

ஆனாலும் அவர் அநாதியானவர் அல்ல என்று கூறுவதால் பிதாவாகிய தேவனை அனாதையாகவும் ஊமையானவராகவும் சித்தரிக்கிறார்கள்;

எப்படியெனில் பிதாவாகிய தேவனுக்குள் குமாரன் எப்போதும் இணைந்தே இருந்தார், ஒருபோதும் அவர் குமாரன் இல்லாமல் இருந்ததே இல்லை என்று சொல்லாமல் அவர் பின்னொரு காலத்தில் சிருஷ்டிகளை உருவாக்குவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுவதால் பிதாவாகிய தேவன் அனாதியானவர் மட்டுமல்ல,அனாதையானவர் என்று சில நல்லவர்கள் கூறுகின்றனர்; மேலும் வார்த்தையானது வெளிப்படும் வரை பிதா பேச இயலாத ஊமையாக இருந்தார் என்றும் நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் பிதாவாகிய தேவனும் தாமும் ஒன்றாக இருப்பதாகவும் அவரால் இந்த உலகுக்கு அனுப்பப்பட்டதாகவும் இயேசுவானவர் கூறுகிறார்;அந்த வசனங்கள் இந்த பிரஹஸ்பதிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் நாம் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை;வேதத்தில் எங்குமே இயேசுவானவர் தாம் சிருஷ்டிக்கப்பட்டவர் கூறவே இல்லை;மாறாக பிதாவாகிய தேவன் அவருக்காக ஆயத்தம் பண்ணிய மாம்சத்துக்குள் அவர் வந்தார் என்றே கூறுகிறது;அந்த வசனத்தையும் சர்ச்சைக்குரியதாக்கி அந்த மாம்சம் மரியாளின் மாம்சமானது இயேசுவின் மாம்சமா என்று தனி விவாதங்களை சிலர் நடத்துவார்கள்;

"ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.."(எபிரெயர்.10:5)

மேற்கண்ட வசனத்தின்படியும்,"தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்," என்று பவுல் தீமோத்தேயுவுக்கு (1.தீமோத்தேயு.3:16) எழுதியதன் படியும் இயேசுவானவர் மாம்சத்திலிருந்த நாட்களில் மனுஷ ஞானத்தின்படி மனுஷகுமாரனாகவும் பரலோகத்தில் தேவகுமாரனாகவும் தேவனுடன் உறைந்த தேவனாகவும் இந்த உலகத்திலும் தற்போது நம்முடனும் நமக்குள்ளும் நிறைந்திருக்கும் தேவனாகவும் இருக்கிறார்;

லூக்கா.2:13,14 - உடன் நிறுத்திவிட்டால் எபிரெயர்.1:6- க்கு யார் விளக்கம் சொல்லுவது? " மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச் செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்." அங்கே மேய்ப்பர்களுக்கு நற்செய்தி அறிவித்த தூதர்கள் அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ அல்லது இந்த துதியின் மூலமோ குழந்தையாக இந்த உலகத்தில் அவதரித்த இயேசுவானவரைத் தொழுதுகொண்டது இந்த வசனத்தால் உறுதியாகிறதல்லவா?

உலகத்தில் வந்தார்
அல்லது பிரவேசித்தார் என்று வேதம் சொல்லும்போது அவர் பிறந்தார் அல்லது சிருஷ்டிக்கப்பட்டார் என்பதே அவருடைய தெய்வத்துவ மாட்சிமைக்கு எதிரானதாகும்;அப்படி எழுதப்பட்டது மனிதப் புரிதலுக்காகத் தானே தவிர பரலோகத்தில் அப்படி சொல்லப்படவில்லை;

அவன் கிண்டல் பண்ணினாலும் பண்ணட்டும்; என் பிள்ளைகளுக்காக சொல்லுகிறேன்,பள்ளிக்குச் செல்லும் எனது மகன் "போயிட்டு வரேன், டாடி" என்று சொல்லிவிட்டு போவது போலவே அவரும் இந்த உலகத்துக்கு வந்தார்; எனவே மீண்டும் பரமேறிச் செல்லும் காலம் வந்தபோதும் முடிந்தது,அதாவது தாம் இந்த உலகுக்கு வ‌ந்த நோக்கம் முடிந்தது என்று சொல்லிச் சென்றார்;

இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளுகிறோம்,ஆனாலும் அவருக்கு ஆதி அல்லது ஆரம்பம் என்ற ஒன்று இருந்தது,ஆனால் பிதாவுக்கு அது இல்லை,அவர் அநாதியானவர்
என்பீர்களாகில் அது மாம்சத்தில் வெளிப்பட்ட காலங்களையே குறிக்கும் என்று கூறுவேன்;ஏனெனில் மாம்சத்தில் வெளிபட்ட தேவனுக்கு ஆதி என்பது இருந்ததை வேதம் வெளிப்படையாகவே கூறுகிறது;ஆதி என்றால் அந்தமும் இருக்கவேண்டுமே,ஆம் அவர் அந்தம் அதாவது முடிவில்லாதவர் என்று வேதம் கூறுகிறது; நீங்கள் வேத வசனங்களை எப்படியாவது மறுக்கப் பார்த்தாலும் அது மாறாதது.

"அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது."(லூக்கா.1:33)

"இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (எபிரெயர்.13:8)

"நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. "(மல்கியா.3:6)

மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவானவரும் அநாதியாவனவரே, ஆனாலும் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தின் காரணமாக ஆதியாக இங்கே வந்தார்; ஆனாலும் அவருக்கு மற்ற மனிதரைப் போல அந்தம் இராது; ஏனெனில் அந்த மனிதர்களையே நித்திய நித்தியமாக வாழ்ந்திருக்கச் செய்யும் ஜீவனையுடைவர் அவரே, அவரே ஜீவாதிபதி; அவரையே கொலைசெய்தனர், காரணம் அவர் தம்முடைய ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நிலையில் ஒப்புக்கொடுத்தார்;ஏனெனில் தெய்வம் மரிக்கக்கூடாதே..!

ஆம், பிதாவாகிய தேவன் மரிக்கக்கூடாதே,அவரைக் குறித்து சாவாமையுள்ளவர் என்று வேதம் கூறுகிறதே,இதனால் இயேசுவானவர் தேவன் இல்லை', என்கின்றனர் எதிரிகள்;ஆனால்,எபிரெயர். 2:9 - ஐ என்ன செய்யலாம்? " என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்."

இங்கே மரணம் என்றாலே என்னவென்றே தெரியாத சர்வ வல்ல தேவனும் ஜீவாதிபதியுமான இயேசுவானவர் மரணத்தை ருசிபார்த்தார் என மிக அழகாக, கவித்துவமாக வேதம் குறிப்பிடுகிறது;

ஐயா, கனவான்களே, மூலபாஷைகளில் சர்வ வல்லவரைத் தேடும் வித்தகர்களே, சிலுவையில் அறைய ஆண்டவர் தம்மை ஒப்புக்கொடுத்தபோது அடிக்கப்பட்ட ஆணியானது அவருடைய கைகளிலும் கால்களிலும் அடிக்கப்படவில்லை,அவை உங்களைப் போன்றோருடைய தலையில் தான் அடிக்கப்பட்டது; மூளையறிவினால் தெய்வத்துவத்தைக் கூறுபோடாதிருங்கள்; சத்தியத்துக்கு எதிர்த்து நின்றால் சாதாரண பெண்ணின் கையால் செத்துப்போன சிசெராவின் பரிதாப நிலையே ஏற்படும்;இது சாபமல்ல,எச்சரிக்கை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இன்று அநேக‌ர் (ஏற‌குறைய‌ முழு கிறிஸ்த‌வ‌ மார்க‌ம்) திரித்துவ‌ம் என்ப‌தை ந‌ம்புகிறார்க‌ளே!! சில‌ரே அதை எதிர்க்கிறார்க‌ள்!! அநேக‌ர் என்றாலே அங்கே த‌வ‌று ந‌ட‌க்கிற‌து என்ப‌து வேத‌ம் ந‌ம‌க்கு ப‌ல‌ இட‌ங்க‌ளில் கான்பித்திருக்கிற‌து, க‌ண்க‌ள் தான் மூடியிருக்கிற‌து!! நிச்ச‌ய‌மாக‌வே வேத‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ப்ப‌டி இடுக்க‌மான‌ வாச‌ல் வ‌ழியே வெகு சில‌ரே ந‌ட‌க்க‌ பிர‌யாசிக்கிறார்க‌ள்!! யார் துருப‌தேச‌த்தை ப‌ர‌ப்பி எந்த‌ த‌ள‌ங்க‌ல் அத‌ற்கு ஒத்து போகிற‌து என்று வேத‌த்தில் வெளிச்ச‌த்தில் பாருங்க‌ள்!! //

மேற்கண்ட கருத்து நமது கட்டுரைக்கான துருபதேச தளத்தின் ரியாக்ஷன்;சிலர் மட்டும் எதிர்ப்பதால் அது விசேஷமாகி விடும் என்பது வேதத்தின் கொள்கையாம்;அப்படியானால் பலர் எதிர்க்கும் ஒரு சத்தியம் விசேஷமாகாதா..?

இன்று உலகத்தில் இயேசுகிறித்துவை தெய்வமாக ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை 10 (%) சதவீதம் கூட தேறாது;முழு இஸ்லாமும் இந்து மார்க்கம் உட்பட உலகத்தின் அனைத்து மார்க்கங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயேசுகிறித்துவை எதிர்க்கின்றது;சிலர் ஏற்பது போல பாவ்லா காட்டினாலும் அவருக்குரிய மகிமையை செலுத்துகிறதில்லை; பவுல் எதிலிருந்து எதற்கு மனந்திரும்பினார் என்பதை மட்டும் ஆராய்ந்தாலே சத்தியம் எளிதாக விளங்கும்;நிரூபிக்க முயற்சிப்போம்; ஆனாலும் அவர் ஏற்கனவே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரன் (ரோமர்.1:4) என்று பவுலடிகள்  கூறிவிட்டார்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தங்களது ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றிகள், கொல்வின்; எங்கே நான் எனது முரட்டுத்தனமான போக்கினால் இழந்துவிட்டேனோ என்று அஞ்சினேன்..!

கர்த்தர் நல்லவர்,
கர்த்தரே
நல்லவர்,
கர்த்தர் மட்டுமே நல்லவர்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

தொடர்ந்து இத்தகைய துர்உபதேச தளங்களை அடையாளம் காட்டுங்கள். உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. கர்த்தர் நி்சசியம் உங்கள் ஊழியங்களை ஆசிர்வதிப்பார்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இவற்றினை குறித்து ஒரு வரலாற்றுத் தொடர் தரலாம் என இருக்கிறேன். ஆதிசபையில் இயேசுவை தெய்வமாக தொழுதார்களா? திரித்துவ போதனை பழைய,புதிய ஏற்பாட்டில் உள்ளதா? தவறான உபதேசங்கள் எப்படி நமது திருச்சபைக்குள் வந்தன? விரைவில் சிறிது சிறிதாக பதிக்கிறேன். 

ஒன்றுமட்டும் உறுதி இது கடைசி காலமாததால் இப்படியான உபதேசங்கள் வருவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கல்ல

இக்காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்."(அப்போஸ்தலர் 17:31)

மேற்காணும் வேத வேசனத்துக்கு வேதமாணவர் தளத்தில் (
நியமிக்கப்பட்ட மனுஷன்!!) கீழ்க்காணும் விளக்கம் கொடுக்கப்படுகிறது; முதலாவது அவர்களுடைய விளக்கத்தைப் பார்த்துவிட்டு அதற்குரிய சரியான சத்தியத்தை வேத வெளிச்சத்தில் தியானிப்போம்.இதோ அவர்களுடைய கருத்து...

// எவ்வுளவு தைரியம் இருந்தால் பவுல் இது போன்ற ஒரு தேவதூஷண‌த்தை அதுவும் "பரிசுத்த வேதாகமத்தில்" சொல்லியிருக்கலாம்!!
உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து,தேவனோடு ஐக்கியமான இயேசு கிறிஸ்து, பிதாவாகி
ப் போன இயேசு கிறிஸ்துவை குறித்து,திரியேக தேவனில் ஒரு அங்கமான இயேசு கிறிஸ்துவை -"மனுஷன்" அதுவும் நியமிக்கப்பட்ட மனுஷன் என்று எப்படி எழுதலாம்..?

திரித்துவவாதிகளுக்கு இந்த வசனம் தெரியவில்லையென்றால் அல்லது பார்த்தும் பார்க்காதவர்கள் போல் இருந்திருந்தால் தயவு செய்து இந்த வசனத்தை வாசியுங்கள்!!

உயிர்த்தெழுந்து பரலோகத்தில் பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவை, பவுல் இப்படியாக எழுதியிருக்கிறார்!!

பவுலுக்கு திரித்துவ இரகசியம் புரியவில்லை போல்,இல்லாவிட்டால் அவர் அப்படி எழுதாமல்,"மேலும் ஒரு நாளைக்குறித்திருக்கிறார்; அதிலே அவரே கிறிஸ்துவாக பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்" என்று எழுதியிருப்பார்!! யார் கண்டால், இந்த திரித்துவவாதிகள் இப்படி தான் இந்த வசனத்திற்கு விளக்கம் தருகிறார்களோ?!!

பவுல் எத்தனை தெளிவாக சர்வவல்லமையுள்ள தேவனை குறித்தும், இயேசு கிறிஸ்துவை குறித்தும் எழுதியிருக்கிறார்;தேவன் தான் எழுப்பிய இயேசுகிறிஸ்துவை, திரித்துவவாதிகள் சொல்லுவது போல், இயேசுகிறிஸ்துவும் தேவனும் ஒருவரே என்றால், அவரே அவரை எழுப்பிக்கொண்டார் என்றால் அபத்தமாக இருக்கும்;இயேசுகிறிஸ்து பரலோகத்தில் சென்று அமர்ந்த பிறகும் "நியமிக்கப்பட்ட மனுஷன்" என்றே பவுல் எழுதுகிறார்; இது தான் தேவனை அறிகிற அறிவு; பவுலுக்கு தெரியாத திரித்துவ இரகசியத்தை கத்தோலிக்க சபை தொடங்கி இன்றைய பெந்தகோஸ்தே சபை வரை பின்பற்றுவது ஒரு மாறுபாடான ஒற்றுமை தான்.

இதனை வாசிக்கும் விசுவாசிக்கு என்ன தோன்றும்? அடடா.., நாம் தவறாக இயேசுவை தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கும் போலிருக்கிறதே என்றல்லவா தோன்றும்? ஆம்,அதுபோன்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதே சாத்தானின் அற்புதமான திட்டம்; இதற்கு நாம் சரியானதொரு விளக்கத்தை உடனே தராவிட்டால் இதுவே உண்மை போலாகும்.

ஆங்கில கிறித்தவ உலகில் இதுபோன்று எண்ணற்ற குப்பையான தளங்கள் உண்டு; நிரம்ப கல்வி கற்றதாலோ அல்லது அவர்கள் எப்போதும் கற்றும் ஒருபோதும் உணராததாலோ அவர்களைக் குறித்து கவலையில்லை; ஆனால் தமிழ்க் கிறித்தவ தளத்தினை ஆரோக்கிய உபதேசமும் நற்போதக‌மும் சென்றடைவதற்குள் துருபதேசங்கள் ஆக்கிரமித்துவிட்ட சூழலைப் பார்க்கிறோம்; எனவே நாம் கண்டும் காணாமல் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்; நானே கிறித்தவத்தின் ஏகபோக காவலாளி என்ற மமதையில் இருப்பதாக என்னைக் குறித்து எதிரி சொல்லுகிறான்;அது தவறல்ல,ஆனாலும் யாருமே இல்லாத நிலையில் நானாவது இருக்கிறேனே என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளுகிறேன்;அந்த மூச்சும் எப்போது நிற்குமோ தெரியாது..!

எனவே...

(தொடரும்)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard