Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09
Permalink  
 


இது எந்த ஆவி ???



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Christian Rock -- Music From Hell!

Not To listen,but Read@http://www.biblebelievers.com/AntiRock1.html

விரைவில் இந்த கட்டுரையை மொழிபெயர்த்து பதிவிடுவேன்.

What is Rock? http://en.wikipedia.org/wiki/Rock_music



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஒரு கிறிஸ்தவம் சமபந்தமில்லாத தமிழ் உரையாடல் தளத்தைக் காண நேர்ந்தது. அதில் யாரும் சண்டையே போடுவதில்லை. ரொம்ப அழகா, இனிமையா பேசுறாங்க. இங்கு ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் சண்டை கோழி போல் சிலுப்பிக் கொள்கிறீர்கள் என்று தான் புரியவில்லை.
--

Joseph: This is something outrageous and it is the peak of ignorance to demean the traditional songs.

Golda: You are talking nonsense.


--

To Chillsam:

முதலில் வேதத்தை ஒழுங்கா வாசிங்க.சிலர் முறுமுறுத்தார்கள் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, யூதாஸ் மட்டும் முறுமுறுத்தான் என்று சொல்லப்படவில்லை
  • 3. அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
  • 4. அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
  • 5. இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.
  • 6. இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மாற்கு 14
யூதாஸ் போல் பொருளாசை உடையோரும், ஆண்டவருக்காக என்றாலும், பணம் செலவழிவதைப் பற்றி கவலைப்படத்தான் செய்வார்கள்


Chillsam:

கோல்டா அவர்களே, நீங்களும் வேதத்தை ஒழுங்குடன் வாசியுங்கள்; முறைகேடாகவும் சுயநலத்துக்காகவும் ஒழுங்கீனமாகவும் அதனைப் பயன்படுத்தவேண்டாம்; இதன் காரணமாகவே நான் வசனத்தை வைத்து சண்டையிடுகிறதில்லை; நீங்களெல்லாம் மெத்தப்படித்த நீதிமான்கள் என்ற தைரியத்தில் கண்டதையும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள், இதன் விளைவுகளை அறியாமலே.

நீங்கள் குறிப்பிட்ட வேதப்பகுதியில் சிலர் என்றுதானே இருக்கிறது; சகோ.ஜோசப் போன்ற சிலர் என்றா இருக்கிறது; நான் கொஞ்சமே கொஞ்சம் படித்த வேதப்பகுதியில் இன்னும் தெளிவாக அனைத்தும் இருக்கிறதம்மா...உங்களுக்கு ஒரு கண்பார்வையில் ஏதேனும் கோளாறா இல்லை, முளையில் கோளாறா..? தரிசனம் என்ற பெயரில் எதையாவது பார்த்துவிட்டு உளறுபவர்களின் பின்னால் அலையாதிருங்கள்; நிதானமாக சத்தியத்தை கைக்கொண்டு போதிக்கும் என்னைப் போன்றவர்களிடம் நட்பாக இருங்கள்.

  • "அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
  • இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
  • அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்." (யோவான்.12:3,5,6)


இந்த வேதப்பகுதியின்படி நான், ஜோசப் உட்பட எல்லோரும் யூதாஸின் வரிசையில் நிற்கிறோம்; செலவு செய்பவர்கள் வரிசையில் உங்களுக்கு வேண்டியவர்கள் நிற்கட்டும்; ஆண்டவரே தீர்ப்பு செய்வார். நான் கண்ணகி பரம்பரையைச் சேர்ந்தவள் என்று மணிமேகலையின் பேத்தி சொன்னால் எப்படியிருக்குமோ அப்படியே உங்கள் ஆட்களும்... போய் அவங்க பழைய தொழிலைச் செய்யச் சொல்லுங்கள்... இயேசுவின் இரத்தத்தை வைத்து வியாபாரம் செய்வதைவிட பால் தினகரனைப் போல பிணத்தைக் காட்டி பிச்சையெடுக்கட்டும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

chillsam wrote:
பேக் டு த பைபிள் என்பார்களே அதுபோல சுயமான திட்டங்களையும் யோசனைகளையும் விட்டு விட்டு எளிமையாக ஊழியம் செய்தாலே இந்தியாவை ஆதாயப்படுத்தமுடியும்; ச்சும்மா பரபரப்பாக எதையாவது செய்ய நினைத்தால் உண்மையாக உழைப்போருக்கும் இவர்களால் சங்கடமே நேரும்; ஏனெனில் இவர்களுடைய பணத்தையும் பகட்டையும் பார்த்து பிரமித்து நிற்கும் சாமான்யன் தன் தெருமுனையில் சாதாரண எருக்கம்பூவிற்கே அருள்பாலிக்கும் யானைமுகத்தோனையே மேன்மையாக நினைக்கிறான்.


"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்..!"
"அப்பத்தைப் பட்சிப்பது போல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்கள்..!"

 

Wanna! Meet You Personally!!!

by Thomas Alwin on Friday, June 17, 2011 at 11:18am
 

Dear Friend!

 

Greetings to you in the Name of the Lord and Saviour Jesus Christ!

 

Though we are separated by miles and Kilometers we are united together by the Love of Christ as one body in Him. We have been interacting through Facebook all these days and now it’s my Pleasure and Privilege to meet you in person when I come to a Campaign near your Place (Which intend to do very shortly)

 

Our Goal is to see more Blessings in you from Our Lord Jesus Christ. Our Ruah Ministry is standing in the gap and interceding for your blessings and goodness. Apart from the TV ministry and various other, yet another facet to you is the Magazine Ministry that has been started by the Grace of God. The “Ruah Swaasa Kaatru (Ruah Breath Of God)" is our monthly magazine delivering Prophetical Message to usher Healing and comfort to the broken hearted world. Already Testimony through Magazine Ministry have started Pouring in and one such testimony is given below for the Glory of God.

 

Dear Pastor,

I am working as a nurse in a Private Hospital. Last week, A girl aged 13 named Meenakshi was admitted in the hospital in serious condition. I am the in charge for that ward. She was affected by epilepsy (Fits). But As per Doctors statement she was normal. There was no symptom for her next attack due to epilepsy, but suddenly she got fits. Though we gave her treatment she didn’t get well, suddenly my eyes saw Ruah Swaasa Kaatru Magazine. By faith I took the magazine and kept it under her pillow with prayer. Immediately fits stopped. Doctor advised to change her to normal ward from Critical Care. At that time, they kept the Ruah Magazine somewhere else. In this situation she got fits again. I searched the Magazine and once again I took the magazine and kept it under her pillow and prayed, she got Miraculous healing. Not alone this, within short span she got complete healing and returned home. The power of God’s word in Ruah Magazine gave her perfect healing. All Glory belongs to God.

 

I’m also glad to introduce our Magazine to You.

 

I request you to send your Name, Address, Contact Number and the email id to send you the free issue of the magazine to your address.

 

If you are residing out of India we don’t mind sending the hard copy personally if you prefer it or we can send as the softcopy as E-Magazine.

 

Please send your information to<span class=" fbUnderline"> info@ruah.in </span>

 

Please find the following URL for E-Magazine.

 

MAY MONTH MAGAZINE http://www.ruahministries.org/rsk/may/  

 

JUNE MONTH MAGAZINE http://www.ruahministries.org/rsk/june/

http://www.facebook.com/notes/thomas-alwin/wanna-meet-you-personally/131186626961342

ஒரு பத்திரிக்கையை வைத்தாலே சுகம் கிடைக்கும்போது அவ்வளவு பெரிய வேதம் எதற்கு சகோ. சில்சாம் அவர்களே???

ஒரே ஒரு meeting சென்றுவந்தாலே பரலோகம் பார்க்கமுடியுமே!!!!!!!!!

வேதம் தியானிக்கவேண்டும், பரிசுத்தத்தை நாடவேண்டும் என்றெல்லாம் சொல்லி கிறிஸ்தவத்தை யாரும் கைக்கொள்ள முடியாத கடினமான மதமாக்க முயலுகிறீர்களோ???!!!!!!!!!!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// ...இப்படித்தான் விலையுயர்ந்த பரிமள தைலத்தை உடைத்து ஆண்டவர் தலையில் ஊற்றிய பெண்ணைப் பார்த்து இந்த வீண் செலவு என்னத்திற்கு. இந்தப் பணத்தை தரித்திரருக்கு கொடுத்திருக்கலாமே என்று கூடியிருந்த சகோ ஜோசப் போன்ற சிலர் முறுமுறுத்தார்கள். என்றாலும் ஆண்டவர் அந்தப் பெண்ணின் செயலை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அவளை விட்டு விடுங்கள் என்றும் சொன்னார். அதுபோல் ஆல்வின் தாமஸும் எல்லா பணத்தையும் ஆண்டவர் மேல் தான், ஆண்டவருக்காகத்தான் ஊற்றுகிறார்....//

நண்பர் ஜோசப் அவர்களை யூதாஸுடன் ஒப்பிடும் துணிகரத்தை கோல்டாவுக்கு யார் கொடுத்தது..? இயேசுவானவரின் உயிர்த்தெழுதலின் அடையாளமாக அந்த ஸ்தீரியின் செயல்பாடு இருந்ததாக வேதம் சொல்லுகிறது;அவரை தனது ஆத்ம மணாளனாக எண்ணி அந்த செயலை அவள் செய்ததாகவும் வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்;உயர்வான அந்த செயலுக்கும் சீப் பாப்புலாரிட்டிக்காக தற்கால ஊழியர்கள் செய்யும் செயலுக்கும் எப்படி ஒப்பீடு செய்திட முடியும்;கோல்டா வாசகர்களுக்கு தவறான ஒப்பீட்டைக் கொடுத்து குழப்பக்கூடாது;எல்லாவற்றையும் நான் இங்கே எழுதினால் சந்தி சிரிக்கும்; முதலில் நீங்கள் நம்முடைய சகோதரர் ஜோசப் அவர்களை யூதாஸுடன் ஒப்பிட்டதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டுகிறேன்; இல்லாவிட்டால் நானும் உங்களை இன்னொருவருடன் ஒப்பிட்டு எழுதவேண்டியதாகும்; அப்புறம் நீங்கள் மூக்கை சிந்துவீர்கள்..!

தங்களிடம் வரும் அத்தனை பணத்தையும் இதுபோன்ற தவறான வழிகளில் செலவிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தியாகமல்ல, அந்த பணத்தை அவர்கள் கடவுளுடைய பணமாக நினைக்கவில்லை என்பதே; மேலும் இவர்களை பந்தய குதிரையைப் போல தயார்செய்து இவர்கள் மீது யார் யாரெல்லாம் பணம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? இங்கே எவ்வளவு கறுப்பு பணமும் லஞ்சமும் விளையாடுகிறது என்பதை யாராவது அறிவார்களா?

சில துதிபாடிகளை அருகில் வைத்துக்கொண்டு கேட்க ஆளில்லை என்று ஆண்டவர் பெயரில் எதை வேண்டுமானாலும் செய்வதா? பரிசுத்த அலங்காரத்துடனே ஆண்டவரை துதிக்கவே வேதம் சொல்லுகிறது;ஆனால் இவர்களோ ஆராதனை பீடங்களை பேகனிக் ஸ்டைல் ஆஃப் வொர்ஷிப்பாக மாற்றிவிட்டார்கள்; இவர்கள் கெட்டது போதாதென்று மற்றவரும் அதேபோல செய்யத் தூண்டுகிறார்கள். "நரியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக் கொண்டதைப் போல" அங்கே இங்கே கடன் வாங்கி பல லட்சம் முதலீட்டில் சிடி போட்டுவிட்டு அல்லாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் (ஏழை பாஸ்டருடைய பிள்ளைகள்...) எத்தனை பேர் தெரியுமா? திருச்சபையின் வளர்ச்சிக்காகக் கொடுக்கப்படும் தசமபாக காணிக்கைகளே இவை.

பேக் டு த பைபிள் என்பார்களே அதுபோல சுயமான திட்டங்களையும் யோசனைகளையும் விட்டு விட்டு எளிமையாக ஊழியம் செய்தாலே இந்தியாவை ஆதாயப்படுத்தமுடியும்; ச்சும்மா பரபரப்பாக எதையாவது செய்ய நினைத்தால் உண்மையாக உழைப்போருக்கும் இவர்களால் சங்கடமே நேரும்; ஏனெனில் இவர்களுடைய பணத்தையும் பகட்டையும் பார்த்து பிரமித்து நிற்கும் சாமான்யன் தன் தெருமுனையில் சாதாரண எருக்கம்பூவிற்கே அருள்பாலிக்கும் யானைமுகத்தோனையே மேன்மையாக நினைக்கிறான்.

இவர்களுடைய சிடியை 100 ரூபாய் கொடுத்து வாங்கி கேட்டாலே ஆசீர்வாதம் வந்துவிடுமாம், இவர்களுடைய ஒரே ஒரு வருடத்தைக் குறித்த தீர்க்கதரிசன சிடியை 100 ரூபாய் கொடுத்து வாங்கி கேட்டாலே வருகைக்கு ஆயத்தமாகிவிட முடியுமாம்; அதைவிட மொத்த பைபிளின் விலை குறைவுதானே..?

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்..!"
"அப்பத்தைப் பட்சிப்பது போல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்கள்..!"



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

 
josephsneha Wrote@Tcs on 08-07-2011 17:57:58:

தமிழகத்திற்கு கிறிஸ்தவம் வந்தபோது மிஷனரிகள் freedom concert நடத்தி ஆத்தும ஆதாயம் செய்யவில்லை, மாறாக தங்களால் இயன்றளவு பணம் சேகரித்து ஆஸ்பத்திரி, பள்ளிகளை நிறுவினர். அந்த 25,30 லட்சத்தை எத்தனையோ பேரின் வாழ்க்கை மாற்றத்திற்கு செலவிடலாமே. இந்த மாதிரியான பாடல்களால் தான் தமிழ் கிறிஸ்தவ இசை பொலிவிழந்து போகிறது.


பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய அற்புதமான வரிகள்... வாழ்த்துக்கள்,ஜோ..!

ஆல்வின் போன்றவர்களால் சினிமாக்காரர்களுக்கு நல்ல கலெக்ஷன்... ஏனெனில் அவர்களோடு இவருக்கு இருக்கும் கனெக்ஷன்..!

சென்னையின் பிரபலமான ஒரு ஒலி ஒளி அமைப்பாளர்களில் ஒருவர் அம்பிகா சவுண்ட் சர்வீஸ்;பிரபல ஊடக உபகரணங்கள் அமைப்பாளர்களில் ஒருவர் சரவணா வீடீயோஸ்; இன்றைக்கு இவர்கள் ஒருவராகிலும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டாரா என்றால் அதுதான் இல்லை; மக்கள் தரும் தியாகமான காணிக்கைகள் எல்லாம் புறவழியில் திருப்பதிக்கும் திருத்தணிக்கும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் லட்சக்கணக்கான ரூபாய்களை வாடகையாகப் பெறும் இவர்கள் ஒரு சில மாதங்களிலேயே அந்த உபகரணங்களின் மதிப்பைக் காட்டிலும் அதிக பணத்தை சம்பாதித்துவிடுகின்றனர்; இந்த பணம் முழுமையும் கடவுள் பெயரால் ஊழியத்துக்காக என்று தியாகத்துடன் சிலர் கொடுப்பதே.கிறித்தவர்களைத் தவிர வேறு யாரும் மார்க்க பிரச்சாரத்துக்காக இவ்வளவு இலட்சங்களை செலவிடுவதில்லை.

இது ஒரு சிறிய உதாரணமே; தேவைப்பட்டால் ஊழியம் என்ற பெயரில் நடக்கும் முறைகேடுகளையும் தில்லுமுல்லுகளையும் புள்ளிவிவரங்களுடன் பகிரங்கப்படுத்த நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

ஒரு அதிர்ச்சிகரமான செய்தி:

இதுபோன்ற ஆராதனை வீரர்களில் பலர் மேட்டுக்குடி மக்களாக இருப்பதால் அவர்களிடம் கொகெய்ன் எனும் போதைப் பொருள் மிகவும் பிரபலமானது; இது உயர்தட்டு மக்களின் நாகரீகத்துக்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காததுடன் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடன் இருக்க உதவுகிறதாம்; மேலும் வோட்கா எனும் விலையுயர்ந்த மதுபானம் மற்ற சாராய வகைகளைப் போல நாற்றமில்லாதது; இதுவும் மனிதனை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது; இவற்றின் பயன்பாடு தற்கால ஊழியர்களிடம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவை வெகுவிரைவில் வெளியரங்கமாகும் போது அவர்களுக்காக இன்றைக்கு வக்காலத்து வாங்கும் சிலர் வெட்கத்தில் தலைகுனியப் போகின்றனர்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: 3G to Heaven -ஆல்வின் தாமஸ்
Permalink  
 


chillsam wrote:

நீண்ட இடைவெளிக்கு யௌவன ஜனம் தளத்தைப் பார்வையிட்டு தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே; இந்த தளத்தில் தாங்களும் ஒரு உறுப்பினர் என்ற பொறுப்பினை உணர்ந்து பங்காற்ற அன்புடன் வேண்டுகிறேன்.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆல்வின் தாமஸின் தீர்க்கதரிசனங்கள் 

இந்தியா 

ஒரு மாநிலத்தின் மேல் தேவ கோபம் இறங்கும். ஒரு வியாதி அங்கு தீவிரமாக பரவும். ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் 

ஒரு பெரிய கம்பெனி பெரிய அவமானத்துக்குள்ளாகும் 

பல அரசியல்வாதிகளின் முகத்திரை கிழியும். - நிறைவேறிக் கொண்டிருக்கிறது 

கிரிக்கெட்டில் இந்தியா சேம்பியனாகும் - நிறைவேறிவிட்டது 

உலகம் 

ஜப்பான் அசைக்கப்படும். சீட்டுக் கட்டு குலுக்கப்படுவது போல் ஜப்பான் குலுங்கும் - நிறைவேறிவிட்டது 

ஒரு விபச்சாரத்திற்கு பெயர் பெற்ற டூரிஸ்ட் சிட்டி(பாங்காக்?) அழியும். கடலுக்குள் போகும். 

பலர் எதிர்த்தாலும், இரான் அணு ஆயுத சோதனையை நடத்தும். 

ஒரு குழப்பத்தின் ஆவி ஐரோப்பாவில் கிரியை செய்யும். 

--

 

காதல் பற்றி ஆல்வின் தாமஸ் பேசியதைக் கேட்டேன்.(Freedom 10 DVD) 

இக்கால இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு கேள்வி- காதலிப்பது சரியா தவறா? சிறந்த திருமணம் - காதல் திருமணமா, பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணமா? 

இக்காலக் காதல் எப்படி இருக்கிறது என்று ஒரு சின்ன நாடகம் நடக்கிறது. பஸ் ஸ்டாப்பில் பார்த்தவுடன், கண்டவுடன் காதல். செல் போனில் தொடர்கிறது. நேரில் சந்தித்து பேச ஆரம்பிக்கிறார்கள். அப்படியே இருட்டை நோக்கி நகர்கிறது. அப்பெண் கர்ப்பமாகிறாள். அவன் கை விடுகிறான். இவள் சாகலாம் என்று நினைக்கிறாள். 

இப்படியெல்லாம் காதலிக்கக் கூடாது.காதல் பாவம் என்று சொல்ல மாட்டேன் - ஆனால் காதலிக்கும் போது கண்டிப்பாக பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், காதலிப்பது போல் நடித்து பிறரை ஏமாற்றுவது பெரிய பாவம், தகுதியற்ற, பெற்றோருக்கு பிடிக்காத, தேவ சித்தமற்ற துணை தேடக் கூடாது/ காதலிக்கக் கூடாது என்றும் சொன்னார் 

முக்கிய செய்தி: அவர் காதல் மணம் புரிந்தவர்! அவங்க அப்பா, ஏதாவது செய்து மானத்தை வாங்கிடாதடா. நல்ல கிறிஸ்தவ பெண்ணைக் காதலிச்சா, நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொன்னாராம். இவரும் அப்படியே பார்த்து காதலித்தார் போல் தெரிகிறது.!காதலிக்கும் போதும் இவ்வளவு குண்டாகத்தான் இருந்தாரா என்று தெரியவில்லை!! 

உண்மையான பாரத்தோடு, கண்ணில் கண்ணீரோடு, நிரம்பி வழியும் அபிஷெகத்தோடு பேசுகிறார்.Freedom Concert இல் இடையிடையே நாடகம், பாட்டு, நடனம் என்று செய்தியை சொல்வதும் நன்றாக இருக்கிறது. வாலிபர்கள் அவர் சொல்வதைக் நன்றாகக் கேட்கிறார்கள். ஒப்புக் கொடுக்கிறார்கள். விடுதலை அடைகிறார்கள். ஆண்டவர் மகிமை அடைகிறார். அவர் இராஜ்யம் கட்டப்படுகிறது. 

அவருடன் இருக்கும் இசை வாசிக்கும்  இளைஞர் படை கலக்குகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நீண்ட இடைவெளிக்கு யௌவன ஜனம் தளத்தைப் பார்வையிட்டு தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே; இந்த தளத்தில் தாங்களும் ஒரு உறுப்பினர் என்ற பொறுப்பினை உணர்ந்து பங்காற்ற அன்புடன் வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

சகோதரர் சில்சாம் அவர்களே,

ஆல்வின் தாமஸ் அவர்களின் செய்தியை கேட்டு பார்த்தேன். சரியாகத்தான் போதிக்கிறார். பாடல்களும் நன்றாகத்தான் உள்ளன. தேவ ஆளுகைக்கு தன்னை ஒரு குழந்தையை போல விட்டு கொடுப்பவர் போல தெரிகிறார். அவரை போல நான் இருந்தால் நிச்சயம் நடனமாட மாட்டேன். பிறர் அசிங்கமாக நினைப்பார்கள் என்று. ஆனால் இவரோ அதை பற்றி கவலைப்படாமல் தன்னை குழந்தையை போல விட்டு கொடுக்கிறார்,

அகஸ்டின் ஜெபக்குமார் சொன்னது தவறான தீர்க்கதரிசனம்தான். இருந்தும் அவருக்கு வக்காலத்து வாங்குவதும், ஆல்வின் தாமஸ் சரியாக போதித்தாலும் அவரை ஏதோ கள்ளத் தீர்க்கதரிசி போலவும் காண்பிப்பது தவறானது.

தீர்க்கதரிசனம் என்பது குறைவுள்ளதாக இருக்க வாய்ப்புண்டு என்பதையும், அவர்கள் இயேசுவை மகிமைப்படுத்துகிறார்களா இல்லையா என்பதே அவர்கள் சரியான ஊழியரா இல்லையா என்பதை காட்டும் எனபதையும் நான் ஏற்கனவே என் தளத்தில் சொல்லியுள்ளேன்.

அதனால் நான் யாரையும் அவர்களின் சரியான நோக்கம் அறியாமல் எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக குற்றம் சாட்டுவதில்லை.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:

அருவருப்பான அங்க அசைவுகளுடன் ஆவியானவர் பெயரால் சத்தியவசனம் உபதேசிக்கப்படவேண்டிய மேடையில் நடைபெறும் பேய்த்தனமான‌ கூத்துகள்... எழுப்புதல் வருமா,வராதா..?


 

இந்த வீடியோவைப் பதித்த ஆல்வினின் இரசிகர்கள்,அவர்களே அசிங்கப்பட்டு அதனை நீக்கியிருக்கின்றனர்;எனவே அதனைக் காண இயலவில்லை;இனி இதுபோன்ற காட்சிகளை  நீக்க இயலாத வண்ணம் நாம் அதனை முதலில் தரவிறக்கி (download) சேமித்துக்கொண்டு பிறகே லிங்க் கொடுக்கவேண்டும் போலிருக்கிறது.

நமது நியாயமான வாதங்களால் மனசாட்சி குத்தப்படும் நல்லவர்கள் அதனை நீக்கும் காரியத்தை மட்டுமல்ல,எம்மைப் போல குமுறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் செய்யும் முகனாக ஒரு வருத்தம் தெரிவித்துவிட்டு அதுபோன்ற மோசடி ஊழியர்களைவிட்டு நீங்கள் விலகிவிட்டீர்கள் என்பதை சாட்சியாக அறிவித்தால் நாங்கள் சற்று நிம்மதியடையும் வாய்ப்புண்டாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் விஜய் அவர்களின் தளத்தில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது;அதுகுறித்த நமது உணர்வுகளை அங்கே பதித்துள்ளோம்.

அன்பு சகோதரர் விஜய் அவர்களே,
நல்லதொரு கட்டுரையினை உங்கள் பாணியில் படைத்திருக்கிறீர்கள்;நீங்கள் எழுதினால் அது உடனே சென்று சேரவேண்டிய இடத்தில் சேருகிறது; எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் போலிருக்கிறது.

ஆனாலும் நீங்களாவது நண்பர் என்ற முறையில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் இதுகுறித்து ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை ஒரு வரியாகிலும் குறிப்பிட்டிருந்தால் நமக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புண்டாகுமே..?

நம்முடைய கட்டுரை (?!) யை தாங்கள் கவனிக்கவில்லையோ அல்லது அதன் பாதிப்பினால் நீங்கள் இதை எழுதினீர்களோ நான் அறியேன்…ஆனாலும் நமது மதிப்புற்குரிய வாசகர்களின் கவனத்துக்கு இதனைக் கொண்டுவருகிறேன்.

அடியேன் ஆதாரத்துடனும் நேருக்கு நேராக பெயரைக் குறிப்பிட்டும் எழுதுவதால் எனக்கு எதிரிகள் அதிகம்,ஆனாலும் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்முடைய பாணி இதுவே என்று நிர்ணயித்துக்கொண்டேன்.

நீங்கள் கட்டுரைகளாகவே எழுதி அதனைப் புத்தகமாகவும் போடுமளவுக்கு நேர்த்தியாக வேலை செய்கிறீர்கள்;உங்கள் அளவுக்கு நான் இந்த காரியத்தில் என்னால் சாதிக்கமுடியாத வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

http://chillsam.activeboard.com/t42362968/3g-to-heaven/

http://chillsam.activeboard.com/t39030228/topic-39030228/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இன்று மதியம் தமிழன் டிவியில் பாஸ்டர் (அல்ல) தற்போது விளம்பர போதையினால் சகோதரன் என்று சொல்லிக்கொள்ளும் ஆல்வின் தாமஸ் அவர்களின் நிகழ்ச்சியினிடையே ஒரு விளம்பரத்தை கவனித்தேன்; நம்முடைய இளகிய மனம் இதையெல்லாம் பார்க்க சகித்துக்கொள்ளாது என்றே பார்க்கிறதில்லை;அப்படியும் எப்போதாவது இதுபோல வசமாகக் சிக்கிக்கொள்ளுகிறேன். அதில் சொல்லப்பட்ட காரியங்கள் அதிர்ச்சியாக இருந்தது.

அதாவது மத்தேயு.24- ஐயும் லூக்கா.21- ஐயும் உல்டா பண்ணி கலந்தடிக்கும் அவரது தீர்க்கதரிசனத்தை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்; ஆசை யாரை விட்டது,க்ளிக் ஆயிடுச்சுன்னா ஒரே லாங்க் ஜம்ப் தானே,தவறி விழுந்தா சேதாரம் பலமாக இருக்கும் என்பது பாவம் அவருக்குப் புரியவில்லை;ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பானாம்,ஆனா கைவிட்டுடுவானாம்,ஆனா என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு ஒண்ணுமே கொடுக்காததுபோலிருந்தாலும் கைவிடமாட்டானாம், இது என்னுடைய தத்துவமல்ல, இவர்களுடைய விளம்பரத்தில் கவர்ச்சிக்காக இடையிடையே சேர்க்கப்பட்டுள்ள சிறப்பு இசையான விஷ்க்,விஷ்க் ஒலியின் பிதாமகனான ரஜினியின் தத்துவம் தான்..!

அந்த சினிமா கவர்ச்சி போதைதானே இத்தனை பாடுபடுத்துகிறது..? உங்களுக்கெதிராக யாரும் ஜிகாத் பண்ணமாட்டறாங்களே..!

நீங்கள் உளறி விற்கும் கள்ளதீர்க்கதரிசன வீடியோவின் விலை வெறும் பத்து ரூபாய் கூட (செய்தி அல்ல,தயாரிப்பு செலவு) பெறாது;அதை துணிகரமாக 100 ரூபாய்க்கு விற்கிறீர்கள்;

ஆனால் முழுமையான தீர்க்கதரிசன புத்தகமான வேதப்புத்தகத்தின் விலையே 100 ரூபாய் தானே...அடப்பாவிகளா...இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//You must have gone to several Gospel Crusades. And you will find the video cameras being turned towards people who are sobbing and crying. I am not criticising it, but have you tried to find out why most of these people shed tears? They hear words from the pulpit, “Your husband does not love you...Your wife does not respect you... Your children do not obey you... nobody understands you. Fear not. Worry not. Jesus understands you!” Immediately tears roll down their cheeks. This is very natural and there is nothing spiritual about it. No gospel preaching is necessary for that. You go to anybody and sympathetically say, “Don’t worry, I understand what you are going through,” anybody will cry!//

 சரியான கருத்து!  இது போன்ற கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் அழுவதற்கு இதுவே காரணம். நிறைய திருமணமான பெண்களை அந்நிய ஆண்கள் வலையில் விழவைப்பதற்கும் இதுபோன்ற Cheap Tricks ஐயே பயன்படுத்துகிறார்கள். இது ஒரு Psychology, கிறிஸ்தவம் அல்ல!

 

 



-- Edited by John on Thursday 28th of April 2011 01:33:52 AM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

கொஞ்சம் வேகமா கை தட்டிரக் கூடாது. கையை உயர்த்திடக் கூடாது. கண்ணீர் வடிச்சிடக் கூடாது. அபிஷேகத்தில் உடல் அசைந்து விடக்கூடாது. உடனே படம் பிடித்து உலகமெங்கும் காட்டி விடுவார்கள் நம் ஊழியக்காரர்கள்!. இது நல்ல நாகரிகம் கிடையாது என்பது தான் என் கருத்தும்.பொட்டு வைத்தவர்கள் வந்தால் VIP அந்தஸ்து தான். கண்டிப்பாக பல முறை அவர்கள் காட்டப்படுவார்கள். பிசாசு பிடித்த ஜனங்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கூட விட்டு வைக்காத கொடுமைதான் நடக்கிறது. பிசாசினால் கஷடப்படும் ஜனங்களை நாமும் இப்படி கஷ்டப்படுத்தணுமா?. ஒருத்தர் கண்ணீர் வடிப்பதையும், கஷ்டப்படுவதையும் காட்டி வல்லமையான் ஊழியர் என்று பேர் வாங்குவது அசிங்கம் இல்லையா? நாம் உணர்வில்லாதவர்களாய்தான் இருக்கிறோம். அடுத்தவங்களைப் பத்தி கவலையே கிடையாது. நமக்கு பேர் வந்தா போதும் என்று தான் ஊழியக்காரர்கள் நினைப்பார்கள் போல.

Bro Chillsam: இளம்பெண்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படாதா?

எதிர்காலம் ஏன் பாதிக்கப்படப்போகுது? அதே மாதிரி குதிக்கும் பையன் கிடைப்பான்!!

இது சகோ ஸ்டான்லி, ஜனங்கள் கண்ணீர் வடிப்பதைப் பற்றி எழுதியது!

--

You must have gone to several Gospel Crusades. And you will find the video cameras being turned towards people who are sobbing and crying. I am not criticising it, but have you tried to find out why most of these people shed tears? They hear words from the pulpit, “Your husband does not love you...Your wife does not respect you... Your children do not obey you... nobody understands you. Fear not. Worry not. Jesus understands you!” Immediately tears roll down their cheeks. This is very natural and there is nothing spiritual about it. No gospel preaching is necessary for that. You go to anybody and sympathetically say, “Don’t worry, I understand what you are going through,” anybody will cry!

--



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

வரும்...................................................... ஆனா.......... வராது .....................................



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இளம்பெண்களைத் துள்ளிவிழச்செய்த ஆவி எதுவோ..? அதனைப் படம் பிடித்து இப்படி இணையதளங்களில் உலவ விடுவது தகுமோ? இளம்பெண்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படாதா? இதுபோன்ற மீடியா ஊழியர்களின் கூட்டங்களுக்குச் செல்லுவதை இளம்பெண்களும் குடும்ப ஸ்திரீகளும் தவிர்க்கவேண்டும்; ஏனெனில் இந்த மோசடி ஊழியர்கள் தங்கள் சுயநலத்துக்காக உங்களை படம் பிடித்து அதை விற்று காசுபார்க்கிறார்கள் என்று சகோதர உணர்வுடன் எச்சரிக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருவருப்பான அங்க அசைவுகளுடன் ஆவியானவர் பெயரால் சத்தியவசனம் உபதேசிக்கப்படவேண்டிய மேடையில் நடைபெறும் பேய்த்தனமான‌ கூத்துகள்... எழுப்புதல் வருமா,வராதா..?

இந்த வீடியோவைப் பதித்த ஆல்வினின் இரசிகர்கள்,அவர்களே அசிங்கப்பட்டு அதனை நீக்கியிருக்கின்றனர்;எனவே அதனைக் காண இயலவில்லை;இனி இதுபோன்ற காட்சிகளை  நீக்க இயலாத வண்ணம் நாம் அதனை முதலில் தரவிறக்கி (download) சேமித்துக்கொண்டு பிறகே லிங்க் கொடுக்கவேண்டும் போலிருக்கிறது.

நமது நியாயமான வாதங்களால் மனசாட்சி குத்தப்படும் நல்லவர்கள் அதனை நீக்கும் காரியத்தை மட்டுமல்ல,எம்மைப் போல குமுறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் செய்யும் முகனாக ஒரு வருத்தம் தெரிவித்துவிட்டு அதுபோன்ற மோசடி ஊழியர்களைவிட்டு நீங்கள் விலகிவிட்டீர்கள் என்பதை சாட்சியாக அறிவித்தால் நாங்கள் சற்று நிம்மதியடையும் வாய்ப்புண்டாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கேள்வி:  2011 பிப்ரவரி ஜாமக்காரனில் ரூஹா சபை பாஸ்டரும், டிவியில் பிரசங்கிப்பவருமான ஆல்வின் தாமஸ் அவர்கள் 2011 ஜனவரி மாத தீர்க்கதரிசனமாக அறிவித்ததை நீங்கள் குற்றப்படுத்தி எழுதியிருந்தீர்களே, இப்போது பார்த்தீர்களா? எங்கள் பாஸ்டர் கூறியதைப்போல் ஜப்பானில் சுனாமியின் பேரழிவு ஏற்பட்டதே அவர் தீர்க்கதரிசனம் உண்மையாய்போனதே, இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள்?

images?q=tbn:ANd9GcSlQhS2xHIkGyFgwz5AWd5Osum2R_o8X7VPiQLGGjQpqita6e2H

பதில்:  உங்கள் பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் மட்டுமல்ல, ஏஞ்சல் TV முதலாளி சாது சுந்தர் செல்வராஜ், சகோ.வின்சென்ட் செல்வகுமார் இன்னும் பல போலி தீர்க்கதரிசிகளும் தாங்கள் கடந்த வருடமே ஜப்பானைப்பற்றி கூறினோம் என்று கடந்த வருடம் இவர்கள் பிரசங்கித்த அந்த வீடியோவை டிவியில் திரும்ப திரும்ப போட்டு பெருமைப்பட்டுக்கொண்டார்கள். யாவருக்கும் நான் கூறிக்கொள்வது என்னவென்றால் ஜப்பானில் நடந்த பூமியதிர்ச்சியும், சுனாமியும் ஜப்பானுக்கு புதியதல்ல, ஒவ்வொரு வருடமும் அவர்கள் நிலநடுக்கத்தை சந்திக்கிறார்கள். வருடத்துக்கு 5 முறைகூட ஜப்பானில் பூமியதிர்ச்சி ஏற்பட்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டதை தினசரி செய்திதாள்களில் நாம் எல்லாரும் வாசித்து அறிந்திருக்கிறோம். இந்த முறை ஏற்பட்ட பூமியதிர்ச்சி இன்னும் நிற்கவில்லையே! தொடருகிறதே! ஜப்பானை பொருத்தவரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும், ஏனென்றால் பூமியதிர்ச்சி உண்டாகும் பூமியின் (பெல்டில்) அமைப்பில் ஜப்பான் அமைந்தால் எப்போதும் அந்த நாட்டில் பூமியதிர்ச்சியும், எரிமலை வெடிப்பதும், சுனாமி அலை வருவதும் அவர்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு ஒரு தீர்க்கதரிசனம் தேவையில்லையே. செய்திதாள்களை பார்த்தாலே போதும். இதில் கவனிக்கவேண்டியது இயேசு கிறிஸ்துவை மேடையில் நிற்கவைத்து தான் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு இருந்ததாக ஒரு சாட்சியில் கூறும் மோகன் சி.லாசரஸ் போன்ற இந்த மாதிரி தீர்க்கதரிசிகள் யாரும் கூறாத ஒன்றை வேலூர் CMC வாசக விசுவாசி சுட்டிக்காட்டுகிறார்.

star2.gif  ஜப்பானில் அணு உலை நான்கு வெடித்து அதிலிருந்து யூரேனியம் அணுகதிரானது வானமண்டலத்தில் பரவியுள்ளது. அது ஜப்பானில் உள்ளவர்களுக்கும், ஆசியா மக்கள் அனைவருக்கும், நம் இந்தியாவுக்கும் சேர்த்து பெரும்பாதிப்பை உண்டாக்கப்போகிறது. அது தோல் வியாதியையும், மரணத்தையும் உண்டாக்கும் ஆபத்தான வாயு ஆகும். மேலும் அந்த அணுக்கதிர் லட்சக்கணக்கான மக்களை கொன்றுவிடும். அந்த அணுக்கதிர் தாக்கிய இடத்தில் புல், பூண்டு கூட முளைக்காது. பல தலைமுறைக்கு பிறகும் குழந்தையெல்லாம் ஊனமாகவே பிறக்கும். இப்படிப்பட்ட அணுக்கதிர் காற்றோடு காற்றாக இப்போது பரவிக்கொண்டிருக்கிறதே! அந்த பெரிய ஆபத்தைக்குறித்து நம் ஊர் தீர்க்கதரிசிகளுக்கு இவர்களின் Mr.அருள்நாதர் இவர்களுக்கு காண்பிக்காதது ஏன்? என்று கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு ஊழியர்கூட இந்த அணு உலை வெடித்ததால், அதன்மூலம் ஜப்பான், ஆசியா முழுவதிற்கும் உண்டாகப்போகும் நாசத்தைக்குறித்து கூறாமல் வாய் மூடிகளானது ஏன்? இவர்கள் முதல் தரிசனம் கண்ட களைப்பில் தூங்கிபோனார்களா? அல்லது வேறு வேலையில் இருந்தார்களா கொஞ்சம்கேட்டு சொல்லுங்கள். உங்கள் பாஸ்டரிடமாவது கேட்டு சொல்லுங்களேன். இவர்கள் யாவரும் பத்திரிக்கை செய்தி வாசிப்பவர்கள் என்பதையும், இவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல என்பதையும் இனியாவது உணருங்கள். தீர்க்தரிசிகளை உருவாக்கும் தமிழ்நாட்டில் செங்கம் என்ற ஊர் தீர்க்கதரிசியான சகோ.எசேக்கியா பிரான்சிஸ் ஜப்பானைப் பற்றியும் கூறவில்லை, ஆஸ்ட்ரோலியாவைப்பற்றியும் கூறவில்லை எதைப்பற்றியும் கூறவில்லையே! ஆச்சரியமாக இல்லை! தன் கூட்டத்தில் வந்தவர்கள் அனைவரையும் தீர்க்கதரிசிகளாக மாற்றும் இவரே, ஒரு தீர்க்கதரிசனத்தைப்பற்றியும் கூறாமல் இருப்பதின் இரகசியம் என்ன? நான் எழுதிய இவர்கள் எல்லாரைப்பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு கொஞ்சமாவது தெளிவு உண்டாகும்.

star2.gif  கடைசி காலத்தில் கள்ளதீர்க்கதரிசிகள் இயேசுவின் நாமத்தைகூறி எழும்புவார்கள் என்று வேதம் பல நூறு வருடங்களுக்கு முன்பே நம்மை எச்சரித்துவிட்டது. இதை அறியாமல் உங்களைப் போன்ற வேதத்தை படிக்காமல் பாஸ்டரை அல்லது ஊழியரைமட்டும் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாது! நான் எழுதியவை உங்களுக்கு பெருத்த அதிசயமாகத்தான் இருக்கும். உங்களை போன்ற கிறிஸ்தவ விசுவாசிகளைக்குறித்து பரிதாபப்படுகிறேன். இனிமேலாவது வேத வசனத்தை வாசித்து அதன்படி நடக்க முயலுங்கள். மற்ற விஷயத்தையும் நீங்கள் அறியவேண்டும். இன்றைக்கு உலகம் முழுவதும் மொத்தம் 32 நாடுகளில் 450 அணு உலைகள் இயங்கி வருகின்றன. இவைகள் நாட்டின் மின்சார தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம் என்று இவர்கள் (நம் இந்தியாவையும் சேர்த்து)கூறினாலும் பெரும்பாலும் அணுகுண்டு போன்ற ஆயுத தயாரிப்புகளுக்கே இவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைக்கு உலகத்திலேயே நல்ல லாபம் உண்டாக்குவது அணு ஆயுதம் தயாரித்து விற்பதுதான். இதை வாங்குபவர்கள் பெரும்பாலும் பல்வேறு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளாவர். இந்த அணு உலையின் பேரழிவை மனதில்கொண்டுதான் பெரும்பாலான குறிப்பிட்ட சில உலக நாடுகள் புதிய அணு உலைகளை நிறுவுவது இல்லை. ஏற்கனவே அணு உலைகளை வைத்திருப்பவர்கள் அதை புதுப்பிப்பதும் இல்லை என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது. ஆனால் நம் இந்தியா அந்த தொழில்நுட்பத்தை ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து பெற்று தொடர்ந்து உபயோகித்து வருகின்றன. இது நம் நாட்டுக்கே நிச்சயம் ஆபத்தாக முடியும். இப்படி நான் கூறுவது தீர்க்கதரிசனமல்ல.

star2.gif  கடந்த மார்ச் 19ம் தேதி வானத்தில் சந்திரன் நம் பூமியை மிகமிக அருகே நெருங்கி வந்தது. இதன்மூலம் பல இடங்களில் பெரியபெரிய சுனாமி அலைகள் உருவாகலாம் என்று எதிர்பார்த்து கடந்த மாதமே எச்சரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெல்லை, சென்னை போன்ற இடங்களில் அணு உலைகள் உண்டு. இதன் பாதுகாப்பு எப்படிப்பட்டதோ - சுனாமி தாக்கும் மிக அருகில் இந்த அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

star2.gif  தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடித்த நிலையில் யார் இந்த ஆபத்தைக் குறித்து கவனிக்கப் போகிறார்கள்! யாருக்கு எத்தனை தொகுதி, யாரோடு கூட்டணி என்பதில் எல்லா அரசியல்வாதிகளும், மந்திரிகளும் பைத்தியம் பிடித்த நிலையில் அலைகிறார்கள். அரசாங்க அதிகாரிகளாவது மிக உன்னிப்பாக இந்த ஆபத்தை கவனித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நல்லது. கேள்வி கேட்ட நீங்களும் இவைகளுக்காக ஜெபியுங்கள்.



நன்றி: ஜாமக்காரன்



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

3G to Heaven -ஆல்வின் தாமஸ்

(ஆல்வின் தாமஸ், ஞாயிறு தமிழன் டீவியில் 12.30 - 1 மணி வரை ஒளிபரப்பான் நிகழ்ச்சியில் சொன்னது.)

Experiences of Gethsemane,Golgatha,and Grave(3G) will take you to Heaven.

Gethsemane - கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் மனதளவில் கசக்கிப் பிழியப்பட்டார். அதுவே தேவ சித்தம். எனக்கு ஏன் இந்த பிரச்சினை? நான் ஏன் இந்த பிரச்சினையை சகிக்க வேண்டும்? என்று பல சமயம் நாம் கேள்வி கேட்கிறோம். நாம் கடந்து செல்ல வேண்டிய பாதையாய், தேவ சித்தமாய் அது இருக்கக் கூடும்.

பெரிய பாடுகள் மத்தியில் பெரிய ஆறுதலும் வரும். கெத்சமனே தோட்டத்தில் ஒரு தேவ தூதன் வந்து பலப்படுத்தினான்.

ஒரு வருடம் ஆல்வின் தாமஸ் எருசலேம் போயிருந்தபோது, கெத்சமனே தோட்டத்தில் மனம் கசந்து அழுது ஜெபித்தாராம். பல உபத்திரவங்கள், பாடுகள், துரோகங்கள், ஊழியத்தில் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு இல்லாதது போன்ற காரியங்களுக்காக ஜெபித்த போது தான் ஆண்டவர் freedom (விடுதலை) concert நடத்தும் படி சொன்னாராம். கர்த்தரின் ஆவி எங்கு உண்டோ, அங்கு விடுதலை உண்டு என்ற வார்த்தையின் படி, இந்தியாவின் இளைஞர்கள் மத்தியில் ஆவியானவர் இறங்கி, விடுதலை தரும்படியாக, அவர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் வரும்படியாக இதை நடத்தும்படி ஆண்டவர் தரிசனம் தந்தாராம். பல உபத்திரவங்கள் உனக்கு வரும். பலரும் உன்னை புரிந்து கொள்ளாமல், எதிர்ப்பார்கள் என்றும் சொன்னாராம்.

2007-2014 இந்தியாவிற்கு ஆசீர்வாதமான காலம். பல துறைகளில் இந்தியா செழிக்கும். ஆவியானவரும் ஊற்றப்படுவார் என்றும் ஆண்டவர் சொன்னாராம்.

கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று இவர் மூலம் ஆண்டவர் வெளிப்படுத்தியிருப்பார் போல. தீர்க்கதரிசனமும், நிறைவேறுதலும் என்று இந்தியா உலக கோப்பை வென்ற காட்சிகளை முதலில் காட்டினார்கள்! முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை முதலில் இழந்தாலும், இந்தியா ஜெயித்து விட்டது என்றெல்லாம் சொன்னார்கள்!!

அவர் தற்சமயம் ஆண்டவர் கரத்திலிருக்கும் பாத்திரமாய், ஆண்டவரால் பயன்படுத்தப்படும் ஊழியக்காரராய்தான் எனக்குத் தெரிகிறது.இவர் செய்திகளை நான் அதிகம் கேட்டதில்லை. ஒரு முறை - அவர் நம்மை அடிக்கிறவராகிய கர்த்தர் - Jehovah Makkah - என்ற தலைப்பில் பேசியதைக் கேட்டேன். பொதுவாக அப்படி யாரும் பேச மாட்டார்கள். என்வே கொஞ்சம் வித்தியாசமானவராகத்தான் எனக்குத் தெரிந்தார். அவரது கலர்ஃபுல் காஸ்ட்யூம் எனக்குக் கொஞசம் அலர்ஜிதான். அவரது பாடல்கள் நன்றாகத்தான் இருக்கிறது.

பாடல் பிறந்த கதையில் கேட்டது:

அவர் நடத்தும் சபை ஒரு basement இல் இருந்ததாம். ஒரு தடவை மழை பெய்து தண்ணீர் முழங்கால் அளவு வந்து விட்டதாம். அப்போ இவர் வருத்தத்தோடு அங்கு இருக்கையில், அவர் சபையில் உள்ள ஒரு பேதமையான ஒரு பெண்மணி, ஆலயக் கட்டிடத்தில், சேர் போட்டு அமர்ந்து கொண்டு, தண்ணீரில் காலாட்டிக் கொண்டே ஆண்டவரோடு இப்படி பேசிக் கொண்டிருந்தார்களாம்- ஆண்டவ்ரே எங்க சபைக்கு ஒரு ஞானஸ்நானத் தொட்டி இல்லைன்னு சபையையே தொட்டியா மாத்திட்டீங்களே! நன்றி! என்று. அதைக் கேட்டு இவர் மனதில் குத்தப்பட்டாராம். இந்த பேதையான அம்மா இப்படி எல்லா சூழ்நிலையிலும் ஆண்டவரைப் பார்ப்பது போல் நம்மால் பார்க்க முடியவில்லையே என்று. அப்ப ஜெபிக்கும் போது ஆண்டவர் கொடுத்த பாட்டுதானாம் “ உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசய்யா...உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசய்யா.”



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard