Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: டிவி ஊழியம் தவறா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: டிவி ஊழியம் தவறா..?
Permalink  
 



bereans
தசமபாகம் நிபுனர், ஆசீர்வாதம் டீவியின் அதிபர், ஆலன் பால், நேற்று (3/9/2010) இரவு தன் டீவியில் (இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை) இவ்வாறு ப்ரசங்கித்துக் (சாரி மிரட்டி) கொண்டு இருந்தார்,

நீங்கள் (அப்பவி விசுவாசிகள், ஏமாந்தோர் கூட்டம்) கொடுக்க வேண்டிய இடத்தில் உங்களின் பணத்தை கொடுக்காவிட்டால், வேண்டாத இடங்களுக்கு செலவு செய்ய வேண்டியதாக இருக்குமாம், அதாவாது நோய்வாய் பட்டு, ஆஸ்பத்திரி, மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்ய வேண்டுமாம், அதுவும் தேவனே அதை அவர்களுக்கு தருவாராம். ஆனால் கொடுக்க வேண்டிய இடத்தில் (அதாவது தசமபாக, காணிக்கையாக அவரிடம்) கொடுத்தால், தேவன் கொடுப்பவர்களுக்கு ஆசீர்வாதித்து அப்படி கொடுப்பவர்களுக்கு தனி ஆசிர்வாதம் கொடுப்பாராம்.

என்ன ஒரு தெய்வீக அன்பு, என்ன ஒரு மிரட்டல். இந்த மிரட்டலை கேட்டு அங்கு அமர்ந்திருந்தவர்கள் "அல்லேலூயா" என்று கோஷம் வேறு (அத மக்கள் சொல்லுவதா, அல்லது இவர்களின் இனைப்பா என்று தெரியவில்லை)!,

தேவ‌னை இப்ப‌டி த‌ண்டிக்கும் தேவ‌னாக‌ இவ‌ர்க‌ள் காண்பிக்கும் அள‌விற்கு என்ன‌ ஒரு துனிச்ச‌ல்!! இதை எழுதினால், சில‌ருக்கு கோப‌ம் வ‌ருகிற‌து, இவ‌ர்க‌ள் "தேவ‌ ம‌னுஷ‌ர்க‌ளை" குறை கூறுகிறார்க‌ள் என்று. எந்த‌ வ‌ச‌ன‌த்தின் அடிப்ப‌டையில் இப்ப‌டி பிர‌ச‌ங்கிக்கிறார்க‌ள் என்று தெரிய‌வில்லை. இப்ப‌டி கொடுக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ளுக்கு (யார் இந்த‌ கூட்ட‌த்தார்!?) கொடுக்காம‌ல் இருந்தால் தேவ‌ன் இந்த‌ த‌ண்ட‌னைக‌ளை வ‌ர‌ப்ப‌ண்ணுவார் என்று என்ன‌ ஒரு கீழ்த்த‌ர‌மான‌ தேவ‌ தூஷ‌ன‌ம்!! இது எல்லாம் ச‌ரி என்று சொல்லும் ஒரு ஜால்ரா கூட்ட‌ம் வேறு. தேவ‌னை குறைத்து பேசுவ‌து இவ‌ர்க‌ளுக்கு தெரியாது, ஆனால் தேவ‌ ம‌னுஷ‌ர்க‌ளை நாங்க‌ள் எழுதுவ‌து மாத்திர‌ம் க‌ண்டிக்க‌ தெரியும். என்ன‌ கிறிஸ்த‌வ‌ அன்போ!!

soulsolution
வேண்டாத இடங்களுக்கு செலவு செய்து ஆஸ்பத்தரியில் செத்துப்போன டிஜிஎஸ் பற்றியும், சர்க்கரை வியாதி முதலான இத்யாதி வியாதிகளினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற ஏராளம் பாஸ்டர்மார்கள் பற்றி சொல்லிவிட்டார் போல.

அப்பனுடைய ஈமக்கிரியைகளுக்கு பணமில்லை என்று பப்ளிக்காக பிச்சை எடுத்த பால்தினகரன், அலன்பால் போன்ற ஓநாய்களுக்கும் இந்த வேண்டாத செலவுகள் வரும். என்னமோ இந்த ஓ....நாய்களுக்கு எந்த "வேண்டாத செலவுகளே" இல்லாதமாதிரி பேசி ஜனங்களை மோசம் போக்குகிறார்கள்.....

chillsam
ஆமா,உங்க தலைவரு கோதுமை வித்தாராமே,தெரியுமா..?


//சோம்பேறியா இல்லாமல் வேலைப்பார்த்தார் என்று சொல்லுங்கள். அது கோதுமை வித்தா என்ன சைக்கிள் துடைத்தாள் தான் என்ன? மற்றவர்களை சுறண்டாமல், மற்றவர்களின் பணத்தை டிரஸ்ட் என்று பெயர் வைத்து வருமான வரியை ஏய்த்து பிடிங்கி தின்னு பிணத்தை வைத்து எல்லாம் காசு சம்பாரிக்கவில்லையே. தன்னிடமிருந்ததை வித்து அவர் செய்தார்?

நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்லுகிறீர்களோ அவரை நாங்கள் ஒன்றும் தலைவராக ஏற்று அவரை பின் பற்றவில்லை. நான் முன்னமே குறிப்பிட்டிருப்பது போல், இயேசு கிறிஸ்து ஒருவரே எங்களுக்கு மூத்த சகோதரரும் எங்கள் தலைவருமாக இருக்கிறார். "இந்த தேவ மனுஷர்களுக்கு" எல்லாம் ஜால்ரா போட்டு இருக்க வேண்டிய அவசியம் உழைக்கும் எங்களுக்கு தேவை இல்லை. உழைப்பில்லாமல் சாப்பிடுவோர் சங்கத்திற்கு தான் இது தேவை.

இருக்கிற ஓநாய்களை குறித்து எழுதினால் ஒரு சிலருக்கு கோபம் வர தான் செய்யும், ஏனென்றால் தேவனை காட்டிலும் மனிதர்களை அல்லவா இவர்கள் நம்பி இருக்கிறார்கள்!!//

நண்பரே நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய் என்கிறேன்; நீங்கள் யெகோவா சாட்சிகள் எனும் பிரம்மாண்டமான உலகளாவிய பிசாசின் உபதேசத்திலிருந்து பிரிந்துவந்து வேதாகம மாணவர் எனும் மாயம் பண்ணி வஞ்சிக்கும் நூற்றுக்கணக்கான குழுவிலிருந்தும் பிரிந்த ஒரு விளக்குமாற்று குச்சியைப் போன்றவர் என்பது மட்டுமே உண்மை;

ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டு அவரை விட்டுப் பிரிந்துவந்தபிறகும் அதையே செய்தால் அது மெய்யான பிரிவல்ல;உங்கள் இரத்தத்தில் ஒரு கிருமி தொற்று ஏற்பட்டு நீங்கள் வியாதியில் விழுந்தும் பிழைத்தும் அதன் பாதிப்பு இருந்தால் அதாவது அது அடையாளம் போட்டுச் சென்றிருந்தால் எப்படியிருக்குமோ அந்த நிலையே உங்கள் நிலை?

அப்படியானால் அந்த‌ கோதுமை வியாபாரியைக் குறித்து விளக்கமாக எழுதும் பொறுப்பு
ம் என்னையே சேருகிறது அல்லவா..?

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது டிவி ஊழியங்களைத் தூஷித்து எழுதப்பட்டுள்ள ஒரு தளத்தின் பதிவுக்கான கட்டுரை... அது சரியா தவறா என்பதைவிட அதைக் கூறுவோரின் இலட்சணம் என்னவென்று பார்க்கவேண்டும்;அதற்கு உதாரணமாக அவர்களுடைய எழுத்துக்கள்...

// தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை. 
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்தாம். அதிலும் பெயர் சொல்லி அழைப்பது, வியாதியஸ்தர்களுக்கான ஜெபம், மாணவர்கள் பரீட்சைக்கு ஜெபம், அன்னியபாஷை ஜெபம் என்று ஏகப்பட்ட வெரைட்டி ஜெபங்களை காணலாம். அதுவும் சில வேளைகளில் இவர்கள் 'SPECIAL EFFECT' கொடுப்பதற்கு "வியாதிப்பட்ட இடத்தில் உஙகள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்" என்று instruction வேறு.

மூல வியாதியுடைய சகோதரர்கள் இதைக்கேட்டு மிகவும் சங்கோஜப்படுகிறார்கள். 

அது போகட்டும், இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் உண்மையிலேயே பதில் தருகிறாரா? என்பதே நமது கேள்வி. தருகிறார் என்று வாதாடும் சகோதரர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். கீழ்கண்ட வரிசையில் எந்த சந்தர்ப்பத்தில் தேவன் பதில் தருவார்?


1. ஊழியர் ஜெபம் செய்யும்காட்சி படப்பிடிப்பின்போது.
2. ஊழியர் ஜெபம் செய்யும் காட்சி ஒளிபரப்பபடும்போது.
3. மறுஒளிபரப்பின் போதும்
4. எப்போதெல்லாம் குறுந்தகடு போடப்படுகிறதோ அப்போதெல்லாம்.
5. மேற்கண்ட எல்லா சமயங்களிலும்...

இதில் ஒரு "சாதுவான" தாடிவைத்த தடிமாட்டு ஊழியர் "கண்ணுங்களா, செல்லங்களா TV முன்னாடி முழங்கால் போட்டிங்கலா" என்று சொல்லிவிட்டுத்தான் ஜெபம் செய்யும்.

ஏற்கனவே பதித்ததுதான் என்றாலும் புது பார்வையாளர்கள் கவனத்திற்குக் கொண்டுவர மறுபடியும் ஒரு பதிவு.
இன்னும் "DGS அங்கிள்" டிவி யில் ஜெபிக்கிறார், அறிவுகெட்ட ஜென்மங்கள் அதையும் பார்த்து "இர்ர்ர்ர்ரங்கும் ஆண்டவரே" என்று டிவி முன்னால் ஜெபிக்கிறதுகள்.

இன்னொரு முட்டாள் எண்ணி எண்ணி ஸ்தோத்திர பலி ஒளிபரப்புகிறான். பரலோகத்தில் ஆசீர்வாதம் டிவி மூலமாய் களிப்பல்ல நகைப்பே உண்டாயிருக்கும்.

என்ன யோசிக்கிறீர்களா?

இனியாகிலும் இதுபோன்ற 'வஞ்சிக்கிற ஆவி'களால் மோசம்போகாதபடிக்கு நாமும் எச்சரிக்கையாக இருப்போம் மற‌றவர்களயும் எச்சரிப்போம்! //


உண்மையைத் தேடும் உன்மத்தர்களே...
வயித்தால போவுதுன்னா என்ன அர்த்தம்,பிரச்சினை வயித்துலேர்ந்தே ஆரம்பிக்குதுன்னுதானே... அதுபோல உமக்கு மூல வியாதி வந்தா அங்க கைய வெக்க வேண்டியதில்ல‌... உப்பு,புளி,காரத்தை குறைச்சுகிட்டு வயித்துல கைய வெச்சு ஜெபிச்சா போதும்... அத எப்ப வேணானாலும் செய்யலாம்... அவங்க டார்கெட் ஜெபிக்கத் தெரியாதவங்கதானே தவிர உம்மைப் போன்ற அறிவுஜீவிகளல்ல‌...


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard