Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓசூரில் இந்து வெறியர்கள் அட்டகாசம்..!
Anonymous

Date:
RE: ஓசூரில் இந்து வெறியர்கள் அட்டகாசம்..!
Permalink  
 


ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின GOOD

__________________
Anonymous

Date:
Permalink  
 

good

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்.

ஓசூர் ஹேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல், பெருவிழா ஜெப கூட்டம் நடக்கிறது. ஓசூர் டவுன், மத்திகிரி, பாகலூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. மத பிரசாரம் என்ற பெயரால், இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக, இந்து அமைப்புகள் சார்பில் புகார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், மத பிரசாரம் மற்றும் மத மாற்றத்தைக் கண்டித்து, ஓசூரில் நேற்று, அரை நாள், "பந்த்'க்கு அழைப்பு விடுத்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு, பஜ்ரங்தள் நகர தலைவர் விஷ்ணுகுமார் தலைமையில் இந்து அமைப்பினர், நேற்று முன்தினம் மாலை, வீதி, வீதியாகச் சென்று, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், "பந்த்'க்கு ஆதரவு கேட்டனர். இந்து அமைப்புகளின், "பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்து, ஓசூர் நகர் முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.

டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு நூறு அடிக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். ரயில்வே ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், மூன்று பேர் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இந்து அமைப்பினர் மூன்று கடைகளை அடைக்க கூறியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடைகளை சிலர் சேதப்படுத்தினர்.

இது தொடர்பாக, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் ஜனபர் பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் (31), மத்திகிரி நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுமன் (24), ஓசூர் நகர அமைப்பாளர் வெங்கடேஷ் (28), நாகராஜ் (25), மூர்த்தி (28) ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். தகவலறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினரும், இந்து அமைப்பினரும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகையிட்டு, கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். மதியம் 1 மணிக்கு பின், வழக்கம் போல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு கூறுகையில், "ஓசூர் தாலுகா பகுதியில், இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து, அமைதியான முறையில் "பந்த்' நடத்தப்பட்டது. மூளை சலவை செய்து, மதமாற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22139

மதசார்பற்ற தேசமான இந்தியத் திருநாட்டை சுடுகாடாக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் சில சமூக வெறியர்கள் அமைதியான முறையில் சமுக சேவையுடன் கூடிய இறைப்பணியாற்றிவரும் இறைத் தொண்டர்களை நோக்கி வன்முறையை ஏவி விட்டு வருகின்றனர்;

இதன் பின்னணியில் மோசமான சூழ்ச்சியும் தீயநோக்கமும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது;அதாவது விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக இந்து மதப்பற்றை மாற்றி வியாபாரமாக்கி வருகின்றனர்;

அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களையும் அப்பாவி மக்களையும் மிரட்டி சுரண்டி பிழைக்கும் இவர்கள் ஏற்கனவே அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கோவில் என்ற பெயரில் எதையோ கட்டி கொள்ளையடிக்கின்றனர்;

Mohan%20C%20Lazarus.jpg http://www.jesusredeems.com/Schedule.asp?Id=488
மோகன்.சி.லாசரஸ்

இதனிடையே இவர்கள் செய்து வரும் மோசடிகளை அம்பலப்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உண்மையான விடுதலையுணர்வினையூட்டும் அருட்பணியாற்றிவரும் இறைப்பணியாளர் மீது இவர்களது உக்கிரம் திரும்பியுள்ளது;

காரணம் இவர்கள் அப்பாவி மக்களை காலங்காலமாக மூளைச் சலவை செய்து காத்து கருப்பு பிசாசு பில்லிசூன்யம் வாஸ்து மற்றும் சுவாமி தோஷம் பரிகாரம் என அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்;

அதிலிருந்து மக்கள் தெளிவடைந்து வெளிச்சத்தைப் பெற்றுவிட்டால் தங்கள் வருமானம் பாதிக்குமே என்று எதிர்த்து நிற்கவோ சண்டையிடவோ விரும்பாத மெய்யான சாதுக்களைத் துன்புறுத்த துவங்கிவிட்டார்கள்;

http://www.jesusredeems.com/livevideo.html


ஆனாலும் அனைத்தையும் அமைதியாகக் கவனித்து வரும் திருவாளர் பொதுஜனம் இவர்களுக்குத் தக்க மரியாதையினைச் செய்வார்கள் என்பது திண்ணம்;

ஏனெனில் இவர்களது வீரம் இஸ்லாமியரது மார்க்க விளக்கப் பொதுகூட்டத்தில் எடுபடாது அனைவரும் அறிந்ததே;அந்த வெறியைத் தணித்துக்கொள்ளவே அண்மைக்காலமாக கிறித்தவர்கள் மீது பாய்கின்றனர்;

ஆனால் அவர்கள் தேவன் வல்லவர்,அவருடன் யாரும் எதிர்த்து நிற்கமுடியாது என்பதை அறியாதிருக்கிறார்கள்;ஒரு இரவில் இவர்கள் வேஷத்தை அவர் இகழுவார் என்பது வரலாறாகும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard