Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
Permalink  
 


  • Sekar Samuel
    OK Reddy. இளம் சகோதரர்கள் ஓரணியில் திரளுவது இருக்கட்டும் சகோ.சில்சாம். இந்த மாற்றம் விரும்பும் இளம் சகோதரர்கள் எல்லாருக்கும் எதிராக நீங்கள் உங்கள் திருவாய் மலர்ந்து மணம் வீசியிருக்கிறீர்கள். ஆகவே இப்படி எல்லாம் பேசி பெரிய அண்ணன் மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டாம். அதிலும் நேற்று இரவு ஒரு ஆட்டம் ஆடி (அடங்கி) இருக்கிறீர்கள். வெளியே இருக்கும் எதிரிகளை விட (உங்களைப் போல) உள்ளே இருக்கும் துரோகிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.

    உங்களைப் பாராட்டுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் (இப்போதைய நல்லவர் - சகோ.அன்பு) . உங்களைச் சரி செய்ய ஒரு சின்ன கருத்தைச் சொன்னாலும் அவர் எதிரி ஆகி விடுவார்.
    நண்பர்களைச் சம்பாதிக்கத்தெரியாதவனும், காப்பாற்றத் தெரியாதவனும் எதிரிகளையே பரிசாகப் பெறுகிறான்.

    உங்களுடன் இணையத்தில் நீண்ட நாள் பழகிய ஒரு நண்பரை உங்களால் காட்ட முடியுமா? அப்படி ஒருவர் இருந்திருந்தால் உங்களுக்கும் உங்கள் தூஷணங்களுக்கும் ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருப்பாரே.

    சகோ.விஜய் அவர்கள் பெருந்தன்மையுடன் உங்களை மன்னித்து மறந்திருக்கலாம். ஆனால் நீங்கள்?

  • Yauwana Janam சேகர் தம்பி யாரையும் மன்னிக்கவோ மன்னிக்கப்படவோ நட்புகொள்ளவோ எதிரியாகவோ நான் இங்கு பொருட்டல்ல.நான் முந்தாநாள் தினத்தந்தி பேப்பர் மாதிரி...

    நான் சாதாரண வழிப்போக்கன் என்று சொல்லிப்பார்த்தேன்... நீங்கள் நம்புகிறதில்லை... இன்னும் என்னை தாழ்த்தி அந்த வழிப்போக்கன் போட்டு உறங்கும் பழைய பேப்பர் நானாக இருக்கிறேன்.அவன் தூங்கியெழுந்ததும் அந்த பேப்பரை அப்படியே விட்டுட்டு போயிருவான்.ஆனால் அந்த பேப்பரிலும் சில உண்மையான விஷயங்கள் இருக்கும். அதை கவனித்தாலே போதும் என்கிறேன்.யாருடனும் நட்புகொண்டு நான் எதையும் சாதிக்க விரும்பியதில்லை.

    ராஜ்குமாருக்கு நான் செய்த துரோகத்தை ரெண்டே வரிகளில் எழுதட்டும்..என்னிடமிருக்கும் பழைய தினத்தந்தி பேப்பரையெல்லாம் அவருக்கே கொடுக்கிறேன்..! என் நியாயத்தை விசாரிக்கும் வயது அவனுக்கு இருக்கிறதா..? இரவெல்லாம் திட்டம் போட்டு பேயாட்டம் போட்டு மூன்றே மணிநேர ஆபரேஷனில் ஒரு மனிதனை தூக்கியெறிந்தவர்களுக்கு நீங்கள் சாமரம் வீசுகிறீர்கள்.இந்த அநியாயத்தை கேட்க இங்க ஆளில்லை.

    ஆடு கசாப்புக்கடைக்காரனையே நம்புமாம்...நட்புக்கு கண்ணிவைத்து கலகம் செய்த குள்ளநரிகளை விரைவில் எல்லோரும் அடையாளம் காண்பார்கள்.மறைந்திருந்து சதிசெய்பவனைவிட நேருக்கு நேராக நின்று நியாயம் கேட்பவனை நம்பலாம்.முதுகில் குத்தும் முன்னாள் நண்பனைவிட நெஞ்சிலே குத்தும் இன்னாள் எதிரியை தழுவலாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Sekar Samuel சகோ.சில்சாம் என்பவர் ஒருபோதும் தவறை திருத்திக் கொள்ள மாட்டார் என்ற உண்மையை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. சமயத்திற்கேற்ற படி “அரைவேக்காட்டு வெள்ளரிப் பிஞ்சு” என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கீங்க... உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுவார் யாரடி அது கிளியே  32 minutes ago · Like

  • Vijay Kumar
    வேலைப்பளுவின் காரணமாக என்னால் நீண்ட கட்டுரைகளைப் படிக்க இயலவில்லை. நடந்தது என்ன என்று முழுமையாக அறியாமல் யாருக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ கருத்துக்கூற விரும்பவில்லை. இந்தக்கட்டுரை என் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் உடனடியாக பதில் எழுதினேன், இந்தக் கட்டுரையை இப்போது தோண்டி எடுத்து வெளியிடுவதால் எனக்கோ, தங்களுக்கோ அல்லது சகோ.சில்சாம் அவர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. வாசிப்பவர்கள் பக்தி விருத்தி அடைவார்கள் என்றால் அதுவும் இல்லை. இதனால் பரலோக ராஜ்ஜியத்துக்கு பிரயோஜனமா என்றால் அதுவும் இல்லை. பின்னே என்னத்திற்கு? பகையும் கசப்பும் வளர்க்க மட்டுமே பயன்படும்.

  • Yauwana Janam விஜய் அவர்களுடைய பண்பட்ட வரிகள் புண்பட்ட மனங்களுக்கு ஆறுதலாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.இதுதான் படித்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

    குறிப்பு:படித்தவர்கள் என்பது கிறிஸ்துவை எனக் கொள்க.

  • Yauwana Janam நண்பர் விஜய்,பொன்னுத்துரை அண்ணன்,ப்ரஸன், அற்புதம், மைகோவை,ராஜ்குமார் போன்று மாற்றம் விரும்பும் இளம் சகோதரர்கள் ஒரே அணியில் திரண்டால் ஆரோக்கிய உபதேசத்துக்கான மாபெரும் அணியாக அது திகழும்.இதுவே நமது தரிசனம்.தேவ ராஜ்யமும் விரைந்து கட்டப்படும். ஆனால் நாம் நம்முடைய ”எதிரி யார்” என்பதை அடையாளம் காணமுடியாமல் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறோம்.சுயம் காரணமாக சொந்தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்கிறோம்.இதில் கோல்டா, இம்மானுவேல் ஆபிரகாம் போன்றவர்கள் எரியும் தீயில் எண்ணெய் விடும் அரும்பணியினை பெருந் தியாகத்துடன் செய்துவருகிறார்கள்.

    மத்தேயு 12:25 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:

தசமபாகம் குறித்த விவாதத்தில் விஜய் என்பவருடைய தளத்தில் பலமணி நேரம் உழைத்து எழுதிய‌ பல பக்கக் கட்டுரைக்கு இணையான எனது பின்னூட்டங்கள் வீசியெறியப்பட்டு விட்டது;தொடர்ந்து அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார்;ஆனால் வோர்ல்டு விஷனுக்கு எதிராக தமிழ் ஹிந்து வெளியிட்ட கட்டுரைக்கு ரொம்ப நல்ல பிள்ளை போல கருத்து கூறுகிறார்;அதனை எதிர்த்து  நம்முடைய கருத்தை இவ்வாறு பதிவு செய்தோம்.

// இந்த அமைப்புக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பேசுவது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதற்க்குச் சமம். //

ஓஹோ... முதல் கோணல் முற்றும் கோணல் என்று எழுதிவிட்டால் காயம் குணமாகி விடுமா..தத்துவம் பேசறாய்ங்க‌...தத்துவம்...1?

// இந்தியாவின் மிகப் பிரபலமான ஊழியக்காரர் ஒருவர் மரித்த பின்பு அவரோடு தொடக்க காலத்தில் ஊழியம் செய்தவரும் பின்பு அவரது ஊழியத்தை இன்றுவரை கடினமாக விமர்ச்சிப்பவருமான மற்றொரு ஊழியர் தனது பத்திரிக்கையில் அந்த பிரபலத்தைப் பற்றி எழுதிய குறிப்பு என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது,

அந்தப் பிரபல ஊழியர் தனது ஆரம்ப காலங்களில் பில்லி கிரகாம், வில்லியன் மரியன் பிரன்ஹாம் போன்றோரின் ஊழியங்களில் ஆழமாகக் கவரப்பட்டு அவர்களது புகழ் பற்றியும் அவர்களுக்குக் கூடும் கூட்டம் பற்றியுமே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பாராம். அவரது பேச்சு சிந்தனை எல்லாம் புகழ், பெருங்கூட்டம்,அற்புத அடையாளங்கள் என்றே இருக்குமாம். இதுவே முதல் கோணல் என்பது. அவரும் தான் விரும்பினதை சீக்கிரமே அடைந்தார். புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்றார். ஆனால் இன்று பல ஊழியர்கள் அவரைப் பின்பற்றி சோரம் போவதற்க்கான மோசமான பல முன்மாதிரிகளை இந்திய கிறிஸ்தவத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார் //

இதுபோல ஒரு அரைவேக்காட்டு வெள்ளரி பிஞ்சுதனது தளத்தில் எழுதியிருக்கிறது;இதைப் படிக்கும் இளம் வாசகர் இடித்துத் தள்ளப்படுவாரே தவிர ஊன்றக்கட்டப்படுவாரா என்ன‌..?

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று திக்குத் தெரியாக் காட்டில் புதியவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போதே இந்த இளஞ்சிக்கல்கள் மன்னிக்க, எளஞ்சிங்கங்கள் எழும்பி " புரச்சி, புரச்சி " என்று " ஏய்ப்புதல் " பற்றி பேசும்....திசைமாறிப் போவோர் கறையேறுவாரோ..கரையேறுவாரோ யாமறியோம்...பராபரமே..!


@Sekar Samuel //நன்றி.சகோ.விஜய். ஒருவேளை நீங்கள் மன்னித்து மறந்திருக்கலாம். சகோ.சில்சாம்??????? அவர் இன்னமும் பத்திரமா பாதுகாத்துகிட்டு இருக்காரே? //

நாம் ஒருபோதும் ஒன்றையும் திருத்துவதோ நீக்குவதோ இல்லை என்பதை இப்போதாவது நண்பர்கள் அறிந்துகொள்ளட்டும்.நாம் நீக்கினாலும் சர்வ வல்லவருடைய ஞாபக புத்தகத்தில் ஒவ்வொன்றும் குறிக்கப்பட்டுள்ளதை மனப்பூர்வமாக நம்பி அதற்கேற்ற அச்சத்துடனே அவரவருக்குரிய பதிலளித்து வருகிறோம். ஒரு சாதாரண வழிப்போக்கன், விமர்சகன், என்ற அளவில் விமர்சனங்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுவோர் எல்லோருக்கும் நண்பர்கள் ஆகிறார்கள்.

மேலும் வெள்ளரிப் பிஞ்சு அற்புதமான மருத்துவ குணமுள்ளது என்பதையும் அது உஷ்ணத்தைக் குறைக்க உதவும் அருமருந்து என்பதையும் அதனை யாரும் சமைத்து சாப்பிடுவதில்லை என்பதையும் எல்லோரும் அறிவார்கள்.எனவே நாம் நண்பர் விஜய் அவர்களை புகழ்ந்திருக்கிறோமே தவிர இகழவில்லை என்பதை நண்பர்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

ஆக விஜய் அவர்கள் நமது நெஞ்சிற்கினிய நண்பர் ஆவார். இதைக் குறித்து நமக்கு அருமையான பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களே ஒருமுறை மிகவும் சிலாகித்து கூறியிருக்கிறார்.அந்த தொடுப்பு வேண்டுமா..? ஆனால் நீங்கள் அதை நீக்கிடுவீர்களே..?

https://www.facebook.com/note.php?note_id=138397062937783



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
Permalink  
 


”தமிழ் கிறிஸ்தவ தளம்” என்பது எத்தனை கொடூரமானது என்பதற்கான அண்மைய நிரூபணம்... இதோ 16 நிமிடம் முன்பு வரையிலும் நம்மோடு உறவாடிக்கொண்டிருந்த மைகோவை அவர் நிர்வாகியாக இருக்கும் தமிழ் கிறிஸ்தவ தளத்திலிருந்து சகோதரர் சில்சாம் அவர்களை தன்னிச்சையாக நீக்கியிருக்கிறார்.

இதுகுறித்து எந்தவொரு விளக்க அறிவிக்கையோ எச்சரிக்கையோ அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் சகோதரர் சில்சாம் அவர்கள் கடந்த மூன்று வருடத்துக்கும் மேலாக இரவும் பகலுமாக அந்த தளத்தின் உறுப்பினராக பங்காற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுதான் இன்றைய கிறிஸ்தவர்களின் நாகரீகம்...அங்கே உண்டான பாதிப்புகளால் இங்கே வந்து முகாந்தரமில்லாமல் தூஷிக்கிறார்களே என்று நியாயம் கேட்டு அந்த தளத்தின் உறுப்பினர் என்ற முறையில் வெட்கம் பாராமல் தனது கட்டுரையை அங்கே பதித்தது குறித்து வேறு தளங்களின் குப்பைகளையெல்லாம் ஏன் இங்கு வந்து கொட்டுகிறீர்கள் என்று எகத்தாளம் செய்தவர்கள் இங்கே செய்த வாதத்தின் பாதிப்பை அங்கே ஒரு பாவமும் அறியாத சில்சாம் மீது காட்டலாமா ?

இதனை நம்முடைய தாய் தளம் போல நேசித்து இந்த தளத்தின் தொடுப்புடனே எதையும் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தோம்.ஆனால் நட்பைக் குறித்து வாய்கிழிய பேசும் அறிவுஜீவிகளான அவர்கள் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ளுவதைக் கண்டால் வருத்தமாக இருக்கிறது. முதலில் ஃபேஸ்புக் தளத்தில் நம்முடைய செயல்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் சூழ்ச்சிகளை செய்துவரும் மர்ம மனிதர்களுடைய உதவியுடன் சில்சாம் என்ற பெயரில் செயல்பட்ட நமது கணக்கை முடக்கினார்கள்.அடுத்து தமிழ் கிறிஸ்தவ தளத்திலிருந்தும் வெளியேற்றியிருக்கிறார்கள். நம்மிடமிருந்து வார்த்தைகளைப் பிடுங்கி அதை வைத்தே குற்றஞ்சாட்டி தள்ளிவிடும் போக்கு பொய் கேஸ்போடும் போலீஸாரின் செயலைப் போல இருக்கிறது.என்றைக்குமில்லா அதிசயமாக மைகோவை நம்முடன் விவாதித்தபோதே ஏதோ சூழ்ச்சி நடப்பதை யூகித்தோம். நினைத்தது போலவே நடந்துவிட்டது. biggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
Permalink  
 


Chillsam on 28-11-2010 07:03:33

http://c-thiratti.blogspot.com/p/christian-thiratti.html

நண்பர் இராஜ்குமார் அவர்களே, பிரதான பகுதியில் இல்லாவிட்டாலும் மேற்காணும் தொடுப்பிலுள்ள பகுதியில் இணையக்கூட யௌவன ஜனத்துக்கு தகுதியில்லையா? ஏனெனில் இறைவன் தளத்தின் சுந்தர் அவர்கள் கருத்தின்படி அவர் தனது தளத்தை கிறித்தவர்களுக்கான தளமாக அறிவிக்கவில்லையே; ஆனால் யௌவன ஜனம் தளமோ இதுவரை தன்னுடைய எல்லைகளை வகுத்துக்கொண்டு நிதானமாக முன்னேறி வருகிறது; அதனை திரட்டப்படும் பொதுவான‌ வரிசையிலிருந்தும் கூட நீக்கியிருப்பது அதிலும் ஏற்கனவே உறுப்பினராக இருந்த ஒரு தளத்தை நீக்கியிருப்பது ஏதேச்சதிகாரமான முடிவாகவே தோன்றுகிறது; நானும் தங்களைப் போலவே ஆண்டவரையறியாத நண்பர்களைக் கவரவே வித்தியாசமான தலைப்புகளில் கட்டுரைகளை இடுகிறேன்;இல்லாவிட்டால் என்னையும் மதப் பிரச்சாரம் செய்பவன் என்றே முத்திரையிட்டிருப்பார்கள்.


Chillsam on 03-12-2010 03:20:00

"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் " என்பது போல அருமை நண்பர் இராஜ்குமார் அவர்கள் தனது அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொண்டு தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் உபதேச வித்தியாசங்களைப் பாராது இணைத்துக் கொண்டது நல்ல ஆரம்பம்; இது இனிதே தொடரட்டும்.

இது எனக்குள்ளிருந்து எழுந்த ஒரு குரல், யாரையும் தவிர்க்கவேண்டாம், முதலில் ஒருவரையொருவர் இணைத்துக் கொள்ளுவோம், பிறகு பேசி தீர்த்துக்கொள்ளலாம், உபதேச வித்தியாசங்களை ஒருங்கிணைப்பதும் ஒரு ஊழியமே; நம்மில் உத்தமர் இன்னான் என்பது இதனால் விளங்கும்.

எனவே பவுலடிகளும் எல்லாவற்றையும் சோதித்துபார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்; அதன்படி இது ஆரோக்கிய உபதேசம் என்று சொல்லும் அமைப்பு இங்கே இல்லாததால் இயேசுவை அறிந்தோர் மற்றும் பைபிளையொட்டி செல்லும் மார்க்கத்தார் அனைவரையும் முதலில் ஒருங்கிணைக்க வேண்டுகிறேன்; இது எந்த வகையிலும் தவறாக இருக்கமுடியாது;

மேலும் தங்களது திரட்டிக்கு குருவி என்ற பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது; ஒவ்வொரு நெல்மணிகளாக சேர்ப்பதாலோ அல்லது நன்றாக உளவு வேலை (LTTE) செய்வதாலோ இருக்கலாம்; இந்த பெயரை எனது வலைப்பூவில் ஏற்கனவே Tweeter-க்கு கொடுத்துள்ளேன்; அதிலிருந்தே இதனை எடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி; மேலும் குருவி என்பதை இன்னும் மேம்படுத்தி தமிழ்க் குருவி என்றும் வைக்கலாம்..!


SundarP Wrote on 03-12-2010 19:35:38:
தமிழ் கிறிஸ்த்தவ திரட்டி அனேக சகோதரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மிக அருமையாக கட்டப்பட்டு வருதை கண்டு என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். அது தேவனாலே கைகூடி வருகிறது! நான் சொல்ல நினைத்த சில ஆலோசனைகளை தள சகோதரர்களே தெரிவித்துவிட்டார்கள். உபதேச வேறுபாடு பார்க்காமல் கிறிஸ்த்தவம் சம்பந்தப்பட்ட எல்லா தளத்தின் செய்திகளையும் தளம் திரட்டுவதால் எனது விசேஷ நன்றிகள்.

என் தேவனே, சகோ. ராஜ்குமார் செய்த உம்முடைய காரியங்கள் எல்லாவற்றின்படியும் அவருக்கு
நன்மையுண்டாக அவரை நினைத்தருளும்

Chillsam on 04-12-2010 17:37:11

உபதேச வேறுபாடுகளை பொருட்படுத்தாது அவை திரட்டப்படுவதால் அவை அனைத்துமே ஏற்கப்படும் (என்று மகிழ வேண்டாம்..) என்பதல்ல பொருள்; அவை கூட்டப்பட்டாலும் (+) வகுத்து கழித்து அதன் வழியே தேவ ஜனம் பெருக்கப்படும் என்பதை துருபதேசக்காரர்கள் அறியவேண்டும்.

துருபதேசக்காரர்களுக்கு பதிலளிக்க ஆளில்லாது போலிருந்தாலும் உண்மை அதுவல்ல; ஊற்றிலிருந்து புறப்பட்டு வேரிலிருந்தும் தோன்றினோர்க்கு எதை ஏற்கவேண்டும் அல்லது எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்; தேவைப்படும் காரியங்களுக்கு மட்டுமே நின்று பதில் சொல்லுவார்கள்; பெரும்பாலும் பொருட்படுத்தாது கடந்து சென்று விடுவோர் ஞானவான்கள்..!

ஆனாலும் அவர்களும் கூட வஞ்சிக்கப்படக்கூடிய ஏனையோருக்காக பரிதபிக்க முன்வரவேண்டும்; இரண்டு உதாரணங்களை என்னால் தரமுடியும்; ஒன்று ஆடுகள்; இன்னொன்று மீன்கள்.

ஆடுகளைக் கூட்டிச் சேர்ப்பது மட்டுமல்ல,அவை சிதறிப் போகாமல் காப்பாற்ற வேண்டும்; வலைவீசி மீன்களைப் பிடிப்பது மாத்திரமல்ல, அவை கரையேறுவதற்குள் மீண்டும் துள்ளி விழுந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
Permalink  
 


இந்த பின்னூட்டத்தில் பெறப்பட்ட IP முகவரியின் தேடலில் கிடைத்த விவரங்கள் பின்வரும் தொடுப்பில் தரப்பட்டுள்ளது;அதன்படி அந்த பின்னூட்டமானது அது சுந்தருடையதல்ல,போலியானது;

அது அமெரிக்கா ஐக்கிய தேசத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரிலிருந்து ஏற்றப்பட்டுள்ளது;அதுபோலவே சகோதரர் எட்வின் அவர்களுடைய IP முகவரியானது சிங்கப்பூரிலிருந்து செயல்படுவதாகத் தெரிகிறது;

சுந்தர் பெயரில் போலியாகப் பின்னூட்டமிட்டவருடைய விவரம் அறியும் தொடுப்பு:

http://www.ip-adress.com/whois/174.36.199.200


Email:sundar@yahoo.com

http://www.everified.com//results/email/?hop=firestarte&item=3&email=sundar@yahoo.com&imageField_x=77&imageField_y=14#


எட்வின் அவர்களுடைய விவரம் அறியும் தொடுப்பு:


http://www.ip-adress.com/whois/202.79.203.43


ஏதோ என்னால் முடிந்த புலனாய்வு (..!?) இதை என்னுடைய IP முகவரியுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே அறிவிக்கிறேன்.

இவையெல்லாம் அந்திகிறித்துவின் ஆட்சிகாலத்தில் நாம் வாழுகிறோமோ அச்சத்தினை ஏற்படுத்துகிறது;ஆண்டவர் நம்மை கண்காணிக்கிறார் நம்பாத மனிதன் ஒரு இயந்திரம் தன்னை கண்காணித்து இரகசியங்களை வெளிப்படுத்துவதை நம்புவானா?

எல்ரோயீ -நீர் என்னைக் காண்கிற தேவன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பரே நான் உறுதிபடுத்தாமல் எதையும் அறிவிக்கமாட்டேன்;மேலும் உண்மைக்கு மாறான ஒன்றைக் கூறி பரபரப்பு எழுப்பவும் அவசியமில்லை; பொய் பேசும் வழக்கமும் எனக்கு இல்லை என்பதை தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

Sundar
lord.activeboard.com
sundar@yahoo.com
174.36.199.200   
Submitted on 2010/11/27 at 3:27 am

சிலகாலமாக ஆவியானவர் ஏதேதோ என் உள்ளத்தில் சொல்லி வருகிறார்.இயேசு கிறிஸ்து என்பது லூசிபர் என்றும், பசுத்தோல் போர்த்திய நரி என்றும் கூறி வருகிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது.இயேசு ஒரு தீய ஆவியா என்று எனக்கு தெளிவு படுத்துங்கள்.
சிலகாலமாக ஆவியானவர் ஏதேதோ என் உள்ளத்தில் சொல்லி வருகிறார்.இயேசு கிறிஸ்து என்பது லூசிபர் என்றும், பசுத்தோல் போர்த்திய நரி என்றும் கூறி வருகிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது.இயேசு ஒரு தீய ஆவியா என்று எனக்கு தெளிவு படுத்துங்கள்.
ApproveUnapprove | Reply | Quick Edit | Edit | Spam | Trash


எனது வலைப்பூவுக்கு வந்த பின்னூட்டத்தின் விவரங்களை இதோ எடுத்து போட்டிருக்கிறேன்;இதிலுள்ள தகவல்களை வைத்து உண்மையைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவிசெய்யுங்கள்.

இது நண்பர் சுந்தர் அவர்களுக்கும் எனக்குமான கருத்துவேறுபாடுகளை அறிந்த யாரோ கலகத்துக்காக செய்த மோசடியாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உண்டு; இதையும் அந்த கருப்பு ஆடு மர்மமாக இருந்து இரசித்துக்கொண்டு தானிருக்கும்.

எனவேதான் நான் மிகவும் நிதானமான ஒரு பதிலை அங்கே கொடுத்திருக்கிறேன்;ஆனால் சுந்தர் தேவையில்லாமல் நான் அவரது தளத்திலிருந்து வெளியேறியதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்; இது அவர் என் மீதே சந்தேகப்படுவது போலிருக்கிறது; இணையதளத்தில் இப்படியும் மோசடி செய்யமுடியும் என்பதை இப்போது தான் அறிகிறேன்.

இதோ சுந்தர் அவர்களின் மறுப்பு...

வலைதளங்களில் பதிவிடும் அன்பு சகோதரர் கோதரிகளே! நண்பர்களே 
அன்பவர்களே,
சகோதரர் சில்சாம் அவர்களின் தளத்தில் நான் எழுதியதாக சொல்லி ஒரு பின்னூட்டமும், அதை சொடுக்கினால் எனது தளத்தின் தொடுப்பும் கொடுக்கபட்டுள்ளது.
அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்.
ஆண்டவராகிய இயேசுவை "தேவனின் ஒரு பகுதி" என்றும் "தேவனின் வார்த்தை" என்றும் திட்டமாக விசுவாசிக்கும்  நான், அவரும் தேவனுக்கு சமமானவர் என்றே எனது பதிவுகளில்   வாதிட்டு வந்துள்ளேன்.
இந்நிலையில் அவரது தியாகத்தை கொச்சை படுத்தி, எழுதகூட கை நடுங்கும் ஒருபதிவை  எனதுபெயரில் பதிவிட்டு, அதற்கு என்னுடய தளத்தின் தொடுப்பை கொடுத்திருப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் வேதனையையும் தருகிறது. இப்படி  எல்லாம் "சதி செய்து"  என்னை  கவிழ்ப்பதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் அல்ல.
இச்செயலை செய்தவர்கள்  யார் என்பது நமது தேவனுக்கு நிச்சயம் தெரியும்.    அவர்கள் யாராக இருந்தாலும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இவர்கள் செய்த இந்த செயலை மன்னிக்கும்படி தேவனிடம் மற்றாடுகிறேன்
சமீபத்தில் சகோதரர் சில்சாம் எனது தளத்தில் கடுமையான சாபம் ஒன்றை கூட எழுதியிருந்தார்.  அதை எல்லாம் நாம்  பெரிதாக எடுக்கவில்லை. பின்னர் அவராகவே அவரது பதிவுகளை எல்லாம் டிலீட் செய்து தளத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.  அவரது தளத்தில் இப்படி ஒரு பதிவை யாரோ  எழுதி யிருக்கிறார்கள்.   

என்னைபற்றி எந்த அவதூறு வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் 
இயேசுவின் தியாகத்தை கொச்சைபடுத்த வேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்
சுந்தர்

சுந்தரை நான் சபித்துவிட்டதாகவும் அது பலிக்குமா பலிக்காதா என்றும் அவரது தளத்தில் பெரிதாக விவாதம் நடந்துகொண்டிருக்கிறது;நான் எனது தரப்பாக கொடுத்த எந்த விளக்கத்தையும் யாரும் ஏற்றதாகத் தெரியவில்லை;இதில் மூன்று பிரதானமான மாற்று உபதேசக்காரர்களும் இணைந்துகொண்டனர்;ஆரோக்கிய உபதேசத்தை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் எனது நண்பர்கள் யாரும் இந்த விஷயத்தில் எனக்கு உதவிசெய்யமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த காரியமே.

ஆனாலும் நான் இறுதியாக சுந்தர் அவர்களை எச்சரிக்கக் காரணமாக இருந்த அந்த குறிப்பிட்ட கட்டுரையின் தலைப்பையே மாற்றிவிட்ட சுந்தர் அந்த கட்டுரையின் வாசகங்களை மறுபரிசீலனை செய்ய முன்வரவில்லை என்பதை அனைவரும் கவனிக்கவேண்டும் .

இது முதல்முறையல்ல , இதற்கு முன்பும் இதேபோன்ற ஒரு கருத்தை -அதாவது வேதத்துக்காக வைராக்கியம் பாராட்டுவது போல சாத்தான் சிலரைத் தூண்டிவிட்டு வேதத்தின் உண்மைகளை அறியாமல் தடுக்கிறான் என்று தூஷித்தார்;அதுவும் அவருடைய தளத்திலேயே இருக்கிறது .

அவர் சில வசனங்களைக் குறிப்பிட்டு அதற்கு அவர் தனது சொந்த விளக்கங்களைக் கொடுத்து அதை வைத்து நேரடியாக தாக்காமல் ரொம்ப டெக்னிக்கலாக 'சாத்தான் தான் இதையெல்லாம் செய்கிறான் ' என்றால் தூஷணமாகாதா?

அவனவன் புத்தியில் தோன்றுவதையெல்லாம் இது ஒரு புதிய வெளிப்பாடு என்ற பெயரில் எழுதிவைத்துவிட்டு 'இது என்னுடைய மரண சாசனம் போல இருக்கட்டும் ' என்று சொல்லிவிட்டால் அவனவன் தீர்க்கதரிசியாகி விடமுடியுமா?

வேதம் என்பது எழுதி முடிக்கப்பட்ட விஷயமாகும்;அதில் இன்னும் புதிதாக எதையும் சேர்க்கவோ அல்லது அது சொல்லவரும் செய்திக்கு மாறான விளக்கங்களைக் கொடுக்கவோ எவனுக்கும் அதிகாரம் கிடையாது; 'புரியலையா,கொஞ்சம் ச்சும்மா உட்கார்ந்திரு,எதையாவது உளறி வைக்காதே,'என்பதே நம்முடைய நிலை;

ஹாரிபாட்டர் போன்ற பிரம்மாண்டமான படங்களை எடுப்பவனும் மனிதன் தான்;நம்மைப் போன்ற சாதாரண மனிதனால் எப்படி அதுபோல சிந்திக்கமுடிகிறது ?மனிதன் இயல்பாக
வே கற்பனை வளமிக்கவன்;அவனது மனதில் தோன்றி மறையும் எண்ணங்களுக்கும் காட்சிகளுக்கும் எவராலும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது;எனவே கனவு காட்சிகளைக் காணும் எவருமே அது தேவனால் தனக்கு கொடுக்கப்பட்டது போன்ற மாயையில் உழலுகிறார்கள்;நம்முடைய கிறித்தவ விசுவாசத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்தும் பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுவிட்டது;சிலருடைய தனிப்பட்ட அனுபவங்களை பொதுவான போதனையாக்கக் கூடாது .

நான் இறைவன் தளத்திலிருந்து வெளியேறக் காரணமாக இருந்தது அவர்களுடைய அணுகுமுறை தான்;இதைக் குறித்து விவரமாக வாசகர்கள் முன் எனது கருத்தை முன்வைத்திருக்கிறேன்;"வேண்டாத காரியங்களில் தலையிட்டு கருத்து சொல்லவேண்டாம்;ஏற்றுக்கொள்ள இஷ்டமில்லாவிட்டால் அமைதியாக இருக்கவேண்டும்" என்று எப்போது சுந்தர் அவர்கள் வெளிப்படையாகவும் தனிமடல் மூலமாகவும் சொல்லிவிட்டாரோ அப்போதே நான் அமைதியாகி விட்டேன்;ஆனாலும் அவர்களுடைய செயல்பாடுகளை ஒரு வாசகனாக இருந்து கவனித்துக்கொண்டே இருந்தேன்;எத்தனை முறை அவருக்கு நேசக்கரத்தையும் எனது மன ஓட்டங்களையும் தெரிவிக்க முயற்சித்தேன்;ஆனால் அவரோ தனி ஆவர்த்தனம் செய்வதிலேயே கவனம் செலுத்துவதுடன் சகோதர சிநேகத்தில் ஆர்வமில்லாதவராக இருப்பதை அறிந்துகொண்டேன்;அதாவது அவருக்கு மாணவர்கள் போலிருந்து அவருக்கு அடங்கியிருந்து செயல்படுவோரிடம் பரிவுடனும் என்னைப் போன்று சற்று விவரத்துடன் கேள்வி கேட்போரிடம் பாராமுகமாகவும் இருப்பார் .

இறுதியில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் அவர் எழுப்பிய சர்ச்சை காரணமாக நான் எனது கருத்தை சற்று வைராக்கியத்துடன் எழுத அனைத்து விரல்களும் என்னை நோக்கி திரும்பியது;'இதுதான் கிறித்தவ அன்பா நீயெல்லாம் எப்படி ஊழியம் செய்வாய் ' என்றெல்லாம் கண்டனங்கள் பறந்தது;போகட்டும்;ஒரு தளத்தின் நிர்வாகி வருத்தத்துடன் இருக்கும் மூத்த உறுப்பினரை எப்படி நடத்தவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல் என்னை வெளியேற்ற கருத்துக் கணிப்பு போடுகிறார்;அதற்கு சிலர் அமோதித்து ஆவேசமாக கருத்து கூறுகின்றனர்;இதற்கு மேல் கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை காத்திருக்கவேண்டுமா என்ன‌?

அதன்பிறகு நான் வெளியேறியதற்காக வருந்தாமல் அதற்காக மகிழ்ந்ததில் இவருடைய சுயரூபம் தெரிந்தது;என்னுடைய பதிவுகளை இவர் சிதைத்து அல்லது நீக்கி நாசப்படுத்தாமலிருக்கவே அவசரமாக எனது அனைத்து பதிவுகளையும் நம்முடைய தளத்துக்கு மாற்றிவிட்டு நீக்கினேன் என்பதை வாசகர் அறியவேண்டும்.

மற்றபடி இவருடன் நமக்கு எந்த பங்காளி சண்டையும் இல்லை;இவர் சத்தியத்தை சிதைத்தும் புரட்டியும் எழுதினால் இவருக்கு நான் கொடுத்த சாபம் மட்டுமல்ல,வேதத்திலுள்ள அனைத்து சாபங்களும் இவர் மேலும் இவர் சந்ததி மேலும் வந்து இவருக்கு பலிக்கும்; அது பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல,புதிய ஏற்பாட்டிலும் அதே.


வாசகர் நண்பர்களுக்கும் தள நண்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்..!
ஒரு தனிப்பட்ட மனுஷனுடனான போராட்டமாகவோ வீண் விவாதமாகவோ விளக்கங்களாகவோ தயவுசெய்து
இவற்றைப் பார்க்கவேண்டாம்;நாம் விரைவில் ஆக்கப்பூர்வமாக செயல்பட துவங்குவோம்;அபோதும் இந்த தளத்தின் நோக்கங்களின் படி பல்வேறு நபர்களுடனும் கருத்து மோதல்கள் ஏற்படும்;அப்போதும் சத்தியத்தின் படி சரியான விளக்கங்களை நாம் நம்முடைய தளத்தில் பதியவேண்டுவது அவசியமாகும்;ஆனாலும் இதனை செய்துகொண்டிருக்கும் எனக்கு ஏற்படும் சலிப்பும் சோர்வும் வாசகருக்கும் ஏற்படுமே என்ற எண்ணத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

சுந்தர் அவர்கள்  எழுதும்   வார்த்தைகளை வைத்தே கண்டு  பிடிக்கலாம் சுந்தர் எப்படி பட்டவர் என்று

அவர் எழுதிய வார்த்தைகள் எல்லாம் ஆண்டவரை மகிமை படுத்தியதாகவே இருக்குமே தவிர

ஆண்டவரை சிறுமை  படுத்துவதற்கு  இருக்காது என்பது நான்  அறிந்தது
 
தேவை இல்லாத ஒரு பொய்யை கிளப்பி விடுகின்றீர்கள் நீங்களா அல்லது வேறு யாரோ என்பது எனக்கு  தெரியவில்லை

ஆனால் நிச்சயம் சுந்தர் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்
 
தேவன்  நிச்சயம் உண்மையை   வெளியே  கொண்டு  வருவார்
 


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 27th of November 2010 02:06:25 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
Permalink  
 



// இம்மாதிரி ஆலோசனையை ஏற்கனவே சில முறை கூறியுள்ளேன். தற்போதும் உரிமையுடன் இவ்வாலோசனையைக் கூறுகிறேன். நல்லவிதமாகப் புரிந்துகொண்டு, பழையனவற்றைக் களைந்து புதிய நட்புணர்வுடன் வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.//

நீங்கள் எப்போதும் கண்ணியமான அணுகுமுறையினையே கடைபிடித்து வந்துள்ளீர்கள் என்பதையும் நான் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொண்டதையும் ஒப்புக்கொள்ளுகிறேன்;

அண்மையில் எனதருமை நண்பர் சுந்தர் அவர்கள் எனது வலைப்பூவுக்கு அனுப்பிய பின்னூட்டத்தை கவனிக்கவும்;http://chillsam.wordpress.com/2010/11/24/revival-martin/ இதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்;அதாவது இவர்தான் இப்படி எழுதுகிறாரா என்பதை ஏற்கவும் முடியவில்லை;அல்லது அவரை எதிர்த்து எதுவும் எழுதவும் தோன்றவில்லை.

பவுலடிகள் கிறித்துவின் மார்க்கத்தினை ஏற்கும் முன்பதாக வைராக்கியத்தை கொலைவெறியாக வெளிப்படுத்தினார்;ஆனால் பிறகு அந்த வைராக்கியமானது அவரையே உருக்கியெடுக்கும் அளவுக்கு துக்கமாக மாறினது;எனவே, "ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ" என 2.கொரிந்தியர்.11:28- இல் புலம்புகிறார்; இத்துடன் நம்முடைய ஆண்டவர் குறிப்பிட்ட மத்தேயு.11:28- ஐயும் ஒப்பிட்டு பார்க்கவும்.

நான் இதுபோல பேச்சு நடையிலேயே வசனத்தைக் குறிப்பிடுவேன்;அது என்னுடைய பாணி;இதையும் குற்றமாக பாவிக்கவேண்டாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// ஐயா அன்பு அவர்களே, நான் மறைமுகமாக உங்களை இரசிக்கிறேன்; உங்களுக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்; உங்களிடம் பெரிய குறைகள் எதுவுமில்லை; எல்லாம் வேத வசனங்களின் வியாக்கியானம் சம்பந்தமான நிவர்த்தி செய்யக்கூடிய விஷயங்களே; அதில் சில காரியங்கள் நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கலாம்; முக்கியமாக தமிழ் வேதாகமத்தின் வசனங்களை மூலபாஷையின் மூலம் நிரூபிக்கவும் உறுதிப்படுத்தவும் அதிகப் பிரயாசமும் பொறுமையும் வேண்டும்; அதில் என்னைப் போன்றோர் அனைத்து வசதிகளும் இருந்தும் பின் தங்கியிருக்கிறோம்;குறிப்பாக "பூமி தட்டையானதா" எனும் வாதத்தில் தங்கள் கருத்துக்கள் மிகவும் நேர்மையாகவும் சிறப்பாகவும் இருந்தது; "கிறித்தவ திரட்டி" சம்பந்தமான காரியத்தில் தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை;என்னைப் போன்றோர் எப்படி வேண்டுமானால் செயல்படலாம்; ஆனால் "கிறித்தவ திரட்டி" என்பது கிறித்தவ திரட்டியாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது; கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக‌. //


மேற்கண்ட எழுத்துக்களில் வெளிப்படும் நம்முடைய‌ பெருந்தன்மையையும் நட்புணர்வையும் இழிவுபடுத்தும் வண்ணமாக திரு.அன்பு அவர்கள் தனது தளத்தில் எழுதியிருக்கிறார்;அதனை எழுதி 2 நாட்களாக எந்தவொரு உபசார வார்த்தைகளையும் சொல்லாத பெரியவர் நம்மைக் குறைகூறுவதாக எண்ணிக்கொண்டு தம்மைத் தாமே சிறுமைப்படுத்திக் கொள்வதாகவே தோன்றுகிறது; ஏனெனில் மிகுந்த வேதனையுட
னும் ஆதங்கத்துடனும் அவர் எழுதிய எழுத்துக்களில் மனதுருகி நாம் எழுதிய வார்த்தைகள் அவை;அதனால் அவரது துருபதேசத்தை ஏற்றுக்கொண்டோம் என்பது அர்த்தமல்ல;அவரை நம்முடைய அன்பினால் ஈர்த்து நல்வழிப்படுத்த முயற்சிக்கிறோம் என்பதே பொருளாகும்;நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் வருமளவும் இதுவே நம்முடைய நிலை;ஆனாலும் துருபதேசக்காரர்களுக்கு வாழ்த்துதல் சொல்வது  தவறு என்பதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது;

உதாரணமாக,ஒரு கிறித்தவனுடைய வீட்டில் இந்து வேதங்களோ அல்லது இஸ்லாமியருடைய வேதமோ இருக்கக்கூடாது;அது அந்த விசுவாசியின் வளர்ச்சிக்கு இடறலாக இருக்கும்;ஆனாலும் வேத ஆராய்ச்சியாளர்களுடைய வீட்டில் இவை இருக்கிறது;காரணம்,அவர் அவற்றைப் பார்க்கும் பார்வை வித்தியாசமானது.

இப்படியே கொல்வின் அவர்கள் இந்த பெரியவரின் சுயரூபம் தெரியாமல் இயல்பாக வாழ்த்துகிறார்;அதற்கும் இவரை ஆய்ந்தறிந்து வாழ்த்தும் எனக்கும் வித்தியாசமுண்டு என்றெண்ணுகிறேன்;அப்படியே அந்த வாழ்த்துக்கு அவர் பொருத்தமில்லாதவராகத் தொடருவாரானால் நான் மீட்டுக்கொண்ட இரட்சகரிடம் மன்றாடி இந்த ஆக்கினையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளுகிறேன்;அதைக் குறித்து ஐயா அவர்கள் கவலை கொள்ளவேண்டாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

rajkumar_s Wrote on 25-11-2010 02:56:28:
சில்சாம் அவர்கள் நான் ஒரு கவர்ச்சியான கதை எழுதி குட்டுப்பட்டு பின்பு தலைப்பை மாற்றியிருந்ததாகச் சொல்லியிருந்தார், அவரது யூகத்தில் பாதி உண்மை மாத்திரமே இருக்கிறது, நான் இட்ட அந்த பதிவின் மூலம் எத்தனை பேர் தொடப்பட்டு இரட்சிக்கப்படவும் விடுதலையாகவும் நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டு வந்த மின்ன்சஞ்சல்களை நம் தளத்தில் இருக்கும் என் தளத்தின் ஜெபக்குழு உறுப்பினரிடம் மாத்திரம் அதைப் பகிர்ந்து கொண்டேன். நான் குட்டு வாங்கியது, நான் எங்கே தவறு செய்வேன் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சில புறஜாதி கூகுள் குரூப்ஸ் இடமும், ஒரு தமிழ் திரட்டியிடமும் தான், அதையும் நான் அறியவில்லை ஒரு சகோதரி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதைச் சொன்னார், ஆகவே தலைப்பை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த திரட்டியிலிருந்தும் விலகிவிட்டேன். அவ்வளவே,

மற்றபடி நான் கிறிஸ்தவத்தைக் கற்றுக் கொள்ளவே இனையத்திற்கு வருகிறேன், தங்கள் பதிவுகளில் கிறிஸ்தவ வைராக்கியம் ஆணித்தரமாக விளங்குகிறது ஆனாலும் அதிகமான பதிவுகளைப் பார்க்க முடிவதில்லை, இரட்சிப்பின் முழுமையின் போராட்டத்தில் எனக்கு உரமாக இருந்த மைகோவை அண்ணா, டாக்டரண்ணா, சகோ ருக்மனி, அற்புதம் அவர்கள், இன்னும் அனேகர், ஆகியோர் இன்று பதிவுகள் இடாமல் பார்வையாளர்கள் பக்கம் சென்றுவிட தங்களைப் பொன்றவர்களின் பதிவுகள் கிறிஸ்துவுக்குள் இன்னும் அதிகமாக வளரச் செய்யும் என்று முழு நிச்சயமாய் நம்புகிறேன்.


நண்பர் இராஜ்குமார் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முயற்சியில் என்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்கிறேன்; தற்போது நான் சூழ்நிலையின் அழுத்தத்தினால் செய்து வருபவை எனக்கே சம்மதியில்லை என்பதை அறிந்திருக்கிறேன்.

நண்பர் தனது கதையினால் அநேகர் தொடப்பட்டதாகக் கூறியிருப்பது உண்மையே; ஆனாலும் அந்த கதையானது நமது தளத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அதற்காக அவர் வருந்தியது போலவும் ஞாபகம்...எப்படியிருப்பினும் அவருடைய சாட்சியின் எதிர்ப்பக்கம் நான் இருக்கிறேன்; என்னுடைய செயல்பாடுகளால் யாராவது பாதிக்கப்பட்டிருப்பார்களா அதாவது சத்தியத்தைவிட்டு விலக நான் காரணமாகவோ இடறலாகவோ இருந்திருக்கிறேனா என்றும் யோசித்துப் பார்க்கிறேன்.

மற்றபடி இணைய ஊழியம் சம்பந்தமான தங்களுடைய சாட்சியில் தாங்கள் குறிப்பிட்டது போல எனக்கு மூன்று வருடமல்ல, இரண்டே வருடம் தான்; எனது ஊழியத்தின் நோக்கங்களை நான் வகையறுத்துக் கொள்ளாத காரணத்தினால் என்னை வளர்த்துக்கொள்ள முடியவில்லை; அதாவது பல்வேறுபட்ட வேலைப்பளுவில் நான் சிக்கியிருக்கிறேன்; ஆனாலும் ஆரம்பத்தில் எப்படி வாய்ப்புகள் இயல்பாக வாய்த்ததோ அதுபோல மீண்டும் சில வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

இன்று தான் கவனித்தேன்..,நம்முடைய தமிழ்க் கிறித்தவ தளமே சி திரட்டியினால் திரட்டப்படவில்லை; காரணம் ஏனோ.?

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"கிறித்தவ திரட்டி" சம்பந்தமான சர்ச்சையில்  தமிழ் கிறித்தவ தளத்தில் நித்திய ஜீவன் தளத்தின் நிர்வாகி திரு.அன்பு அவர்களின் கருத்தும் அதில் இடப்பட்டுள்ள நம்முடைய பின்னூட்டமும்...

rajkumar_s wrote:
//தற்போது கிறிஸ்தவ திரட்டி புதிய பொழிவுடன் செய்ல்பட்டு வருகிறது, அந்த வலைப்பூவின் பேஜ் ரேங்கை உயர்த்தவும் மற்ற புறஜாதியாரும் வந்து செல்லவும் வசதியாக அன்பு சகோதரரும் போதகருமான அற்புதராஜ் அவர்களின் ஆலோசனைப்படி கிறிஸ்தவம் அல்லாத தளங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.//

அன்பான சகோதரரே! வலைப்பூவின் “பேஜ் ரேங்கை” உயர்த்தும் நோக்கில் நீங்கள் செய்த நடைமுறையின் காரணமாக இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சம்பந்தமான தலைப்புகளெல்லாம் உங்கள் திரட்டியில் வர ஆரம்பித்துவிட்டன. ரோமர் 1:27-ஐச் சற்று படியுங்கள். சுபாவத்திற்கு விரோதமான பாலியல் உறவை வேதாகமம் கண்டிக்கிறது. அப்படியிருக்க, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சம்பந்தமான தகவல்கள், அவ்வாறான உறவுகளை ஊக்குவிப்பதாக உள்ளன.

மாத்திரமல்ல, இதுவரை அம்மாதிரி விஷயங்கள் தெரியாதவர்கள்கூட இதுபோன்ற தகவல்களால் அவற்றிற்கு நேராக இழுக்கப்பட நேரிடும். இதனால் வீட்டில் அனைவரும் பொதுவாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் உங்கள் திரட்டியை "Bookmark" செய்ய இயலவில்லை. இப்படிச் செய்து எனது வீட்டிலுள்ளோரை இடறல்களிலிருந்து ஓரளவு நான் காத்துக்கொள்ள முடியும்தான்.

ஆனால் இணையதளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் இவ்வாறு செய்வார்களா என்பது சந்தேகந்தான். உங்களைப் பொறுத்தவரை பலர் உங்கள் திரட்டியை நோக்கி வரவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம். ஆனால் அதற்காக நீங்கள் செய்துவரும் நடைமுறையால் பலர் உங்கள் திரட்டியை விட்டுவிலகவும் நேரிடும் என்பதை அறியுங்கள்.

உங்கள் திரட்டியை யாராவது விலக்கினால் அது அவர்களுக்கு ஒரு நஷ்டமல்ல. ஆனால் உங்கள் திரட்டியில் உலா வந்து, அதன் தொடுப்புகளைப் பார்ப்பவர்கள் இடறலடைய நேரிட்டால், பிறரது இடறலுக்கு நீங்கள் காரணமாகிவிடுவீர்கள்.

இடறல்கள் வருவது அவசியந்தான், ஆனால் யாரால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ என மத்தேயு 18:7 கூறுகிறது. இப்பிரபஞ்சித்திற்கு ஒத்த வேஷம் தரிக்கவேண்டாமென்றும் புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்றும் (ரோமர் 12:2; எரேமியா 10:2) வேதம் கூறுகிறது. இவ்வசனங்களைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

இத்தளத்தில் நான் சொல்வதை பலரும் பொருட்படுத்துவதில்லை. இதனால் நஷ்டம் எனக்கல்ல. உங்களுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லாவிடில் இரத்தப்பழி என்மேல் சுமரும் என வேதம் கூறுகிறது (எசேக்கியேல் 33:8). எனவே நீங்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் நான் சொல்லவேண்டியதை சொல்லிவருகிறேன் (எசேக்கியேல் 2:7).

இத்தளத்தில் சிலரது கருத்துக்கு ஒத்ததான விஷயங்களை நான் சொல்கையில் ஆஹா ஓஹோ எனப் புகழ்கிறவர்கள் பிற விஷயங்களைக் கண்டுகொள்வதில்லை. வசனத்தின் அடிப்படையில் நான் சொல்கிற சில கருத்துக்கள் இத்தள நிர்வாகத்தாரின் கருத்தோடு ஒத்துப்போகாததால்தான் எனக்கு இந்தப் புறக்கணிப்பு. கிறிஸ்துவையே புறக்கணித்த இந்த உலகத்திற்கு நான் எம்மாத்திரம்?

மேலே நான் குறிப்பிட்டுள்ள மேற்கோளில் கூட, அற்புதம் அவர்களை போதகர் என நீங்கள் அழைத்துள்ளீர்கள். ஆனால் இப்படி அழைப்பது பின்வரும் வசனத்திற்கு விரோதமாக உள்ளதே என நீங்களும் நினைப்பதில்லை, அற்புதமும் நினைப்பதில்லை.

மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். (ரபீ என்றல் போதகர் என்று அர்த்தமாம் - யோவான் 1:38).

சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்; கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.


நம்முடைய கருத்து:
ஐயா அன்பு அவர்களே, நான் மறைமுகமாக உங்களை இரசிக்கிறேன்; உங்களுக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்; உங்களிடம் பெரிய குறைகள் எதுவுமில்லை; எல்லாம் வேத வசனங்களின் வியாக்கியானம் சம்பந்தமான நிவர்த்தி செய்யக்கூடிய விஷயங்களே; அதில் சில காரியங்கள் நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கலாம்; முக்கியமாக தமிழ் வேதாகமத்தின் வசனங்களை மூலபாஷையின் மூலம் நிரூபிக்கவும் உறுதிப்படுத்தவும் அதிகப் பிரயாசமும் பொறுமையும் வேண்டும்; அதில் என்னைப் போன்றோர் அனைத்து வசதிகளும் இருந்தும் பின் தங்கியிருக்கிறோம்;குறிப்பாக "பூமி தட்டையானதா" எனும் வாதத்தில் தங்கள் கருத்துக்கள் மிகவும் நேர்மையாகவும் சிறப்பாகவும் இருந்தது; "கிறித்தவ திரட்டி" சம்பந்தமான காரியத்தில் தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை;என்னைப் போன்றோர் எப்படி வேண்டுமானால் செயல்படலாம்; ஆனால் "கிறித்தவ திரட்டி" என்பது கிறித்தவ திரட்டியாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது; கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அண்மையில் "கிறித்தவ திரட்டி" எனும் ஒரு அமைப்பை தமிழ் கிறித்தவ தளத்தின் சகோதரர் இராஜ்குமார் அமைத்து அதில் இணைய நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்;நாமும் இணைந்தோம்;தற்போது அவருடைய திரட்டியிலிருந்து நம்முடைய தளம் நீக்கப்பட்டுள்ளது;இது சம்பந்தமான விளக்கத்தை மிகுந்த தாழ்மையுடனும் நட்புணர்வுடனும் கேட்டிருந்தோம்;அவர் தமிழ் கிறித்தவ தளத்தில் தனது செய்தியை பதித்திருந்ததாலும் அந்த தளத்தில் நாமும் உறுப்பினர் என்பதாலும் அங்கே நமது கோரிக்கை பதியப்பட்டது;அதற்கு அவர் அளித்துள்ள பதில் பல்வேறு உணர்வுகளைத் தொட்டுச் செல்லுகிறது.

இங்கே நமது கோரிக்கையையும் அதற்கு அளித்துள்ள பதிலையும் அதனைத் தொடர்ந்து நம்முடைய கருத்தையும் பதிவு செய்கிறோம்;நண்பருடைய பதிலைக் குறித்து நமக்கு எந்த வருத்தமுமில்லை;நாம் ஒரு பார்வையாளன் மற்றும் வழிப்போக்கன் அவ்வளவே;இது நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.

கோரிக்கை:
நண்பர் இராஜ்குமார் அவர்களே, நான் பொதுவான -சுவாரசியமான செய்திகளைப் பதித்ததற்கு விமர்சித்தனர்;அது கிறித்தவ திரட்டியின் நோக்கத்தை மாசுபடுத்துவதாக குறைகூறினர்;ஆனால் தற்போது கண்டகண்ட தலைப்புகளில் செய்திகளும் சினிமா கவர்ச்சி படங்களும் என கண்றாவியாக இருக்கிறது; இதன் நோக்கம் என்னவோ எனக்கு புரியவில்லை; மேலும் எனது எந்த ஒரு படைப்பும் திரட்டப்படுவதில்லை போலும்; நீக்கிவிட்டீர்களா, அல்லது கட்டமைப்பு வேலைகளில் நான் காணாமல் போனேனோ தெரியவில்லை; விருப்பமிருந்தால் தெரிவிக்கவும்.

இராஜ்குமார்:
// அன்பு ஐயா, நானே தங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்று நினைத்திருந்தேன், முதலில் தங்களுடைய ஐயத்தை நீக்கிவிடுகிறேன், இந்த வலைப்பூ இப்போது தான் வளர ஆரம்பித்திருக்கிறது, ஆகவே இதைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு என்னைக்கவர்ந்த அல்லது தமிழர்களால் அதிகம் பார்வையிடப்படும், வலைப்பதிவுகளை முன்பக்கத்தில் மாத்திரம் பட்டியலிட்டிருக்கிறேன், இதற்கு காரணம் அதிகமான பார்வையாளர்களைக் கவர்வதன் மூலம் வாசகர்கள் மத்தியில் இந்த தளத்தை பதிவு செய்வது மாத்திரமே, இது ஆரம்பகட்ட வளர்ச்சிக்காக மட்டுமே தவிர வேறு ஒரு நோக்கமும் இதில் இல்லை, மேலும் வரும் பார்வையாளர்களுக்கு ஏதாவது உபயோகமான தகவல்களைச் சொன்னால் இன்னும் அதிக பிரயோஜனமாக இருக்கும் எனபதால் சமையல் வேலைவாய்ப்பு அன்மைச் செய்திகள் ஆகியவற்றையும் பட்டியலிட்டு இருக்கிறேன், இதுவும் பார்வையாளர்களைக் கவரவே, வரும் நாட்களில் தளம் பிரபலமடைந்த பிறகு இந்த நிலைமை மாறும் என்று விசுவாசிக்கிறேன்.

இப்படிப்பட்ட மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் தான் கிறிஸ்தவ பார்வையாளர்கள் இடறலடையக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவ தளத்திற்கு இனைப்பு கொடுத்திருக்கும் நண்பர்கள் அந்த இனைப்பை கிறிஸ்தவ திரட்டிப் பக்கத்தில் நான் புதிதாகக் கொடுத்துள்ள நிரலியைப் பயன்படுத்துமாறு சென்ற பதிவில் பணித்திருந்தேன்.


அதிலும் முக்கியமாக சினிமா, ஜோதிடம், ஆகியவைகளை அதிக அளவில் வெளியிடும் தளங்களை இனைத்தால் இன்னும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைய முடியும் ஆனாலும் அப்படிப்பட்ட பார்வையாளர்கள் அதிகமாக இருந்தாலும் நமக்குத் தேவையில்லை ஆகவே அவைகள் சேர்க்கப் படவில்லை, மேலும் தங்களுடைய பிளாக்கர் தளம் எப்போதும் போல தொகுக்கப்படுகிறது அது முதல் மற்றும் கிறிஸ்தவ பக்கத்தில் திரட்டப்படுகிறது. (ஆதாரம் : பார்க்க படம்)


man_question_mark.jpg


மேலும் கிறிஸ்தவ பக்கத்தில் முன்பிருந்த அதே கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன, அங்கே கட்டாயம் கிறிஸ்தவம் இல்லாத பதிவுகள் மூன்று முறைக்கு மேல் இடம்பெறுமாயின் அப்பகுதியிலிருந்து அந்த வலை பூ நீக்கப்படும், மேலும் தாங்கள் சொல்லும் கவர்ச்சிப்படம் போன்றவை இதுவரை முதல் பக்கத்தில் எந்த ஒரு பதிவரும் பதித்ததில்லை நான் நாள் தோறும் அந்த பதிவுகளை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன் ஒருவேளை அப்படி இடம் பெற்றால் மறு நிமிடமே அதை நீக்கிவிடுவேன், தாங்கள் சொன்னது படி கண்றாவியான தலைப்புகளோடு கவர்ச்சிப்படங்களை வெளியிட்ட தளங்களை
(உதாரணமாக தாங்கள் இட்ட தலைப்புகள் போல ஏ கிளாஸ் ஜோக்ஸ் மற்றும், சாரு நிவேதிதா ஒரு பொம்பள பொறுக்கியா? போன்றவை) ஆதாரங்களோடு வெளியிடத் தயாரா? வெளியிட்டால கட்டாயம் அந்த தளத்தை நீக்கிவிடுகிறேன்.

இன்னும் கூட ஒரு விசயம் கிறிஸ்தவ பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளால் தான் நான் நடத்திவரும் மற்றொரு தளமான தமிழ் கிறிஸ்தவ மன்றத்தை இனைக்கவில்லை அது முதல் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது,
மாத்திரமல்ல கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் தமிழ் முஸ்லீம், தமிழ் கத்தோலிக்கன் ஆகியவை கூட முதல் பக்கத்தில் மட்டுமே திரட்டப்படுகிறது. கிறிஸ்தவ பகுதியின் கண்ணியம் காக்கப்படவேண்டும் என்பதற்காக என்னுடைய தளத்தையே(தமிழ் கிறிஸ்தவ மன்றம்) அனுமதிக்கவில்லை என்பதை இங்கே தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல ட்ரூத் சீக்கர் என்பவர் கிறிஸ்தவத்தில் மாற்றுக்கருத்துக்கள் பல உடையவர், அவர் திரட்டியின் கிறிஸ்தவ திரட்டியில் இனைய விண்ணப்பித்த போது, நான் சற்றுத் தயங்கினேன். காரணம் அவர் ஏற்கெனவே மார்ஸ் மேடையில் தடை செய்யப்பட்டவர் என்பதால் தான். ஆனாலும் நம் தளத்திலுள்ள ஒரு நண்பர் ஆரம்பத்தில் யாரையும் புறம்பே தள்ள வேண்டாம் என்று சொன்னதால் அவருடைய தளம் இனைக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஒருவேளை அவரது கட்டுரைகளில் எதாவது வேத புரட்டுகள் இருக்குமானால் நிச்சயமாக நீக்கப்படுவார். அவர் மட்டுமல்ல என்னுடைய பைபிள் அங்கிள் தளமானாலும் நீக்கிவிடுவேன்.


சரி தங்களைத் தொடர்புகொள்ள நினைத்திருந்ததாக ஏற்கெனவே நான் சொன்னது நினைவிருக்கலாம், அதுவும் இதனோடு தொடர்புடையது தான். தாங்கள் முழு நேர ஊழியர் ஆனால் இனையத்தில் பகுதி நேர ஊழியர் என்பது முன்பொரு பகுதியில் தாங்கள் சொன்னதிலிருந்து அறிந்து கொண்டேன். மேலும் தாங்கள் மூன்று தளங்களை நடத்தி வருவதும் எனக்குத் தெரியும். அதில் ஏதாகிலும் ஒன்றையாவது முழு நேர கிறிஸ்தவ தளமாக நடத்துவதாகத் தாங்கள் சொன்னதாக நியாபகம் இருக்கிறது(நிச்சயமாக பிளாக்கர் இல்லை) அது ஆக்டிவ் போர்டில் நடத்தும் தளமா? அல்லது வோர்டு பிரஸ் தளமா என எனக்குத் தெரியப்படுத்தினால் அதை கிறிஸ்தவ திரட்டியில் இனைத்து விடுவேன்.


எதற்காக இதைக் கேட்கிறேன் என்றால் சில நாட்களுக்கு முன்னால்
தாங்கள் தங்களுடைய பிளாக்கரில் ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி? என்ற பதிவை வெளியிட்டிருந்தீர்கள். அது கிறிஸ்தவ திரட்டி பகுதியில் வெளியிடத் தகுதியானது அல்ல மாறாக முதல் பக்கத்தில் வெளியிடலாம். ஆகவே தாங்கள் நடத்தும் தளங்களில் எது முழு கிறிஸ்தவ தளம் என்று சொல்லுவீர்களானால் அதை இனைத்து விடுகிறேன். மாறாக கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக தாங்கள் இது போன்ற வேறொரு உரையாடலில் சொன்னது போல ஏதோ ஒரு(சரியாக நினைவில்லை) தளத்தை கிறிஸ்தவ தளமாக நடத்துகிறேன் என்று தாங்கள் சொன்னது அப்போதைக்குத் தப்பிக்கொள்வதற்காகவே சொன்னீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

நிச்சயமாக பத்திரிக்கை சுதந்திரம் போல இனைய பகிர்வுக்கும் சுதந்திரம் உண்டு அதில் நான் தலையிட விரும்பவில்லை,
ஆனாலும் இந்த சி‍ திரட்டியின் கிறிஸ்தவ திரட்டியில் கிறிஸ்தவம், கிறிஸ்தவம், மற்றும் கிறிஸ்தவம், தவிர வேறு ஒரு நோக்கமும் இல்லை, ஒருவேளை என்னுடைய இந்த பதிலைப் பார்த்து என்னுடைய தளத்தை ஒன்றையும் எப்பக்கத்திலும் திரட்ட வேண்டாம் என்று சொன்னீர்களாயின் நான் கவலைப் படப்போவதில்லை காரணம் உங்களை விட கிறிஸ்தவத்தை மாத்திரம் எழுதும் இனைய நண்பர்கள் எனக்கு முக்கியம், நான் முழு நேர இனைய ஊழியர்களைக் குறிப்பிடுகிறேன்.

நான் இதைக் கேட்பதற்கு மற்றொரு காரணம் தங்களைப் போலவே இனையத்தில் முழு நேர கிறிஸ்துவப் பதிவுகள் இடாத தமிழ் முஸ்லீம், தமிழ் கத்தோலிக்கன், என்னுடைய தமிழ் கிறிஸ்தவ மன்றம், போன்றவர்கள் நான் ஏற்கெனவே சொன்னது போல கிறிஸ்தவ திரட்டி பக்கத்தில் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் பகுதி நேர இனைய கிறிஸ்தவரான தாங்களை அப்பகுதியில் அனுமதித்தால் அந்த மூன்று தளங்களையும் அவமானப் படுத்துவது போல ஆகிவிடும், ஆகவே இது மிக முக்கியமான காரணம் ஆகும்.



ஒருவேளை தாங்கள் முன்பே மிரட்டியது போல, நீங்கள் என்னை நீக்கிவிட்டால் நானும் ஒரு திரட்டியை ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்று சொல்ல்வீர்களாயின் தாராளமாக ஆரம்பித்து உங்கள் ஏ ஜோக்ஸ் மற்றும் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வழிகள், அல்லது ரஜினி திரைப்படவிழாவில் சொன்ன குட்டிக்கதை ஆகியவற்றை எல்லாம் திரட்டி கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை நீங்களும் வளருங்கள், அப்படி ஒரு திரட்டி ஆரம்பிப்பீர்களானால் வெற்றியடைய அட்வாண்ஸ் வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய இந்த கடினமான அனுகுமுறையைப் பார்த்து யதார்த்தவாதி வெகுஜன விரோதி ஆகவே எனக்கு நண்பர்கள் குறைவு என்று சொல்ல ஆரம்பித்து விடாமல், கிறிஸ்தவ பகுதியில் கிறிஸ்தவம் தவிர மற்றவைகள் இடம்பெறக்கூடாது என்ற ஆதங்கத்தில் நான் இப்படிப் பேசினேன் என்று எதார்த்தமாக எடுத்துக் கொள்ளுங்கள்
, நன்றி.

பின்குறிப்பு: கிறிஸ்தவ வலைபதிவுகளின் அனைத்துப் பதிவுகளும் பகுதியில், வெகுவிரைவில் எல்லா கிறிஸ்தவ தளங்களும் இனைக்கப்படும், தற்போது மூன்று தளங்கள் மாத்திரம் இனைக்கப்பட்டிருக்கிறது, வரும் நாட்களில் எல்லாத்தளங்களையும் இனைத்து விடுவேன்.

நம்முடைய கருத்து :
நண்பர் இராஜ்குமார் தனது கிறித்தவ திரட்டி சம்பந்தமாக வகுத்துள்ள கொள்கைகளைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லமுடியாது;ஆனால் அதில் நம்மை சேர்க்கத் தடையாக உள்ள காரணிகளாக அவர் சொன்னவை நம்முடைய சுயமரியாதைக்கும் கருத்து சுதந்தரத்துக்கும் சவாலாக அமைந்துள்ளது;

கிண்டல், கேலி ,எகத்தாளத்துடன் அவர் குறிப்பிடும் நம்முடைய வலைப்பூக்கள் மற்றும் தளத்தின் தலைப்புகளில் நான் எந்த செய்தியையும் எழுதவில்லை;அது கிறித்தவரல்லாத தளத்தின் வாசகர்களைக் கவர பொதுவான திரட்டிகளில் சேர்க்க உருவாக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட தலைப்புகளாகும்;

இதன் காரணமாக நம்முடைய தளத்துக்கு தலைப்புகளால் கவரப்பட்டு வரும் நண்பர்கள் நம்முடைய மற்ற படைப்புகளையும் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும் என்பது நம்முடைய தனிப்பட்ட கருத்து;அதுவே தற்போது கிறித்தவ திரட்டியின் கருத்தாகவும் விரிவடைந்திருக்கிறது;

நாம் வாசகரை ஈர்க்கும் தலைப்புகளில் எழுதியுள்ள செய்திகளும் கூட சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாகும்;இதற்கு பல உதாரணங்களை குறிப்பிடமுடியும்;அது நமது வாசகர்களுக்கும் நன்கு தெரியும்;

உதாரணத்துக்கு சூப்பர் ஸ்டார் சொன்ன கதை என்று வலைப்பூவிலும் அதே செய்தியானது  முற்பகல் செய்யின்...பேரனுக்கு என்னும் தலைப்பில் நம்முடைய தளத்திலும் பதிக்கப்பட்டுள்ளது;இதனை முழுவதும் படித்தால் அதன் இறுதியில் ஒரு நற்செய்தியை வசனத்துடன் குறிப்பிட்டிருக்கிறோம்;ஆனால் நண்பர் அவர்கள் ஒரு பாலியல் கதையை கவர்ச்சியான ஒரு தலைப்பில் எழுதி குட்டு வாங்கி பிறகு அந்த தலைப்பை மாற்றியதை மறந்துவிட்டார் போலும்; ஆக‌ இவருக்கு தேவை தலைப்பு தான், செய்தியல்ல என்றாகிறது;

ஏனெனில் நண்பர் இராஜ்குமார் அவர்கள் சொல்வது போல அவருடைய கிறித்தவ தளத்தின் முதல் பக்கத்திலுள்ள கவரக்கூடிய தலைப்புகளைத் தொட்டுச் சென்றால் அதில் தோன்றியது நடிகைகளின் கவர்ச்சிப்படங்களே..!

அதோடுகூட நம்முடைய கிறித்தவ தளங்களின் செய்திகளும் கலந்திருக்கிறது;அதாவது இவருடைய கொள்கையின்படி திரட்டப்படும் அனைத்து செய்திகளுடன் கிறித்தவ செய்திகளும் (முதல் பக்கத்தில் தான்)
இடம்பெறுகிறது;அதில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தின் செய்திகள் கானவில்லையே என்பதே நமது மனக்குறை;

நம்மை கிறித்தவனாக ஏற்றுக்கொண்டு அவர்களோடு சேர்த்துக்கொள்ள நாம் கேட்கவில்லை;பொது செய்திகளின் பிரிவில் கூட அதிலும் ஏற்கனவே உறுப்பினரான நம்மை ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை என்றே கேட்கிறோம்;

இறுதியாக‌,"ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி? என்ற தலைப்பு நாம் எழுதிய செய்தியல்ல;அது வெறும் தொடுப்பு தான்;அதன் விவரம் இன்றைய சமுதாயத்தின் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடிகளைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதாக இருந்ததால் அதனைத் தொடுத்தோம்;

"என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் " என்றார், நம்முடைய ஆண்டவர்;நாம் நமது அன்றாட வாழ்வில் காணும் பல்வேறு காரியங்களையும் அவருடன் இணைத்துப் பார்த்தே பெருமூச்சு விடுகிறோம் என்பது அந்த இரட்சகருக்கு நிச்சயமாகவே தெரியும்.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தசமபாகம் குறித்த விவாதத்தில் விஜய் என்பவருடைய தளத்தில் பலமணி நேரம் உழைத்து எழுதிய‌ பல பக்கக் கட்டுரைக்கு இணையான எனது பின்னூட்டங்கள் வீசியெறியப்பட்டு விட்டது;தொடர்ந்து அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார்;ஆனால் வோர்ல்டு விஷனுக்கு எதிராக தமிழ் ஹிந்து வெளியிட்ட கட்டுரைக்கு ரொம்ப நல்ல பிள்ளை போல கருத்து கூறுகிறார்;அதனை எதிர்த்து  நம்முடைய கருத்தை இவ்வாறு பதிவு செய்தோம்.

// இந்த அமைப்புக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பேசுவது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதற்க்குச் சமம். //

ஓஹோ... முதல் கோணல் முற்றும் கோணல் என்று எழுதிவிட்டால் காயம் குணமாகி விடுமா..தத்துவம் பேசறாய்ங்க‌...தத்துவம்...1?

// இந்தியாவின் மிகப் பிரபலமான ஊழியக்காரர் ஒருவர் மரித்த பின்பு அவரோடு தொடக்க காலத்தில் ஊழியம் செய்தவரும் பின்பு அவரது ஊழியத்தை இன்றுவரை கடினமாக விமர்ச்சிப்பவருமான மற்றொரு ஊழியர் தனது பத்திரிக்கையில் அந்த பிரபலத்தைப் பற்றி எழுதிய குறிப்பு என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது,

அந்தப் பிரபல ஊழியர் தனது ஆரம்ப காலங்களில் பில்லி கிரகாம், வில்லியன் மரியன் பிரன்ஹாம் போன்றோரின் ஊழியங்களில் ஆழமாகக் கவரப்பட்டு அவர்களது புகழ் பற்றியும் அவர்களுக்குக் கூடும் கூட்டம் பற்றியுமே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பாராம். அவரது பேச்சு சிந்தனை எல்லாம் புகழ், பெருங்கூட்டம்,அற்புத அடையாளங்கள் என்றே இருக்குமாம். இதுவே முதல் கோணல் என்பது. அவரும் தான் விரும்பினதை சீக்கிரமே அடைந்தார். புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்றார். ஆனால் இன்று பல ஊழியர்கள் அவரைப் பின்பற்றி சோரம் போவதற்க்கான மோசமான பல முன்மாதிரிகளை இந்திய கிறிஸ்தவத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார் //

இதுபோல ஒரு அரைவேக்காட்டு வெள்ளரி பிஞ்சுதனது தளத்தில் எழுதியிருக்கிறது;இதைப் படிக்கும் இளம் வாசகர் இடித்துத் தள்ளப்படுவாரே தவிர ஊன்றக்கட்டப்படுவாரா என்ன‌..?

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று திக்குத் தெரியாக் காட்டில் புதியவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போதே இந்த இளஞ்சிக்கல்கள் மன்னிக்க, எளஞ்சிங்கங்கள் எழும்பி " புரச்சி, புரச்சி " என்று " ஏய்ப்புதல் " பற்றி பேசும்....திசைமாறிப் போவோர் கறையேறுவாரோ..கரையேறுவாரோ யாமறியோம்...பராபரமே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
Permalink  
 


புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?

அண்மையில் ஒரு தளத்தில் தசமபாகத்தைக் குறித்த ஒரு பரியாசக் கட்டுரை எழுப்புதல் என்ற பெயரில் வெளியானது;அதன் விவரம் இங்கே...
http://chillsam.wordpress.com/2010/09/11/tithe/

இதைக் குறித்த கருத்து ஒன்றையும் நாம் கூறவில்லை;ஆனால் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஒரு வார்த்தை நம‌க்குள் சில கேள்விகளை எழுப்பவும் விளக்கம் கேட்டு நம‌து பின்னூட்டத்தை நியாயமான முறையில் அந்த தளத்தில் இட்டோம்; அதற்கு நட்புரீதியிலான இதமான பதில் கிடைக்கவில்லை;மாறாக 'என்னை நீ கேள்வி கேட்கிறாயா ' என்ற தோரணையில் ஆவணத்துக்கு பதில் ஆணவமான‌ பதிலே கிடைத்தது;

நாமும் விடாமல் வாதத்தை நடத்தினோம்; இதனிடையில் இதனை மற்ற சகோதரர்களும் அறியும் வண்ணமாக நாம் கடந்த இரண்டு வருடமாக பங்கேற்று வரும் தமிழ் கிறித்தவ தளத்தில் இதனைப் பதித்தோம்; அதில் எந்த நியாயமும் கிடைக்காமல் இறுதியில் வழக்கம்போல் நமக்கே புத்திமதிகளும் ஆலோசனைகளும் வாரி வழங்கப்பட்டன; சத்தியத்துக்கு விரோதமாக எழுதிய கனவான் தூக்கிவைத்து கொண்டாடப்பட்டார்;

இந்த தளத்தில் நமது பங்களிப்பை முக்கியமான சிலர் விரும்புகிறதில்லையோ என்ற ஐயம் எழும் வண்ணமாக இன்று மனம் நொறுங்கிப்போனது;இந்த ஒரு கட்டுரைக்காக மட்டுமே கடந்த இரவு முழுவதும் உழைத்திருக்கிறோம்; பகல் முழுவதும் பல்வேறு அலுவல்களையும் கவனித்துவிட்டு இரவும் உறங்காமல் நம்முடைய சகோதர தளம் என்ற ஆவலுடன் பங்கேற்கும் நமக்கு அதற்குரிய தார்மீக மரியாதை கூட வழங்கப்படுவதில்லை;

ஒருவர் தேவையில்லாத காரியங்களில் தலையிடாதீர் என்கிறார்; இன்னொருவர் உமக்கு என்ன தான் வேண்டும் என்று மனங்குழம்பியவனைக் கேட்பதைப் போல வினவுகிறார்;

// அப்படியானால் அவன் தனது சுய சம்பாத்தியமான வருமானத்திலிருந்து கொடுக்கவில்லை மாறாக தனக்கு சொந்தமல்லாத கொள்ளைப் பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தான் என்று சொல்லுகிறீர்களா? //

நீதிபதியின் கேள்வி போல அமைந்திருக்கும் இந்த கருத்தானது விஷ(ம)மானது என்பது நமது தனிப்பட்ட கருத்தாகும்; தசமபாகம் சரியா,தவறா என்பதைவிட ஊழியனைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிக்கும் கொடுமையைவிட ஆபிரகாம் கொள்ளைப் பொருளையே கடவுளுக்கு தசமபாகமாகக் கொடுத்தான் எனும் வேதத்துக்குப் புறம்பான கருத்து யாரையும் பாதிக்கவில்லை என்பது ஆச்சர்யமே;

நாம் தசமபாகத்தைக் குறித்து எதுவுமே சொல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் அதைக் குறித்தே கேள்வி எழுப்புகிறார்கள்;ஆனால் அதைக் குறித்து அது நியாயம்தான் என்பது போல எழுதியவருக்கு ஒரு எதிர்கருத்தும் எழும்பவில்லை;

நம்மை நோக்கி சீறிய விஜய் தசமபாகக் கட்டளை தற்கால சபைக்குக் கிடையாது எனும் தனது ஆதாரக் கருத்துக்கு எதிராக எழுதியவருக்கு பதில் சொல்லியிருக்க வேண்டுமல்லவா, அதைச் செய்யவில்லை; மாறாக பொது எதிரியாக என்னை நிர்ணயித்து சற்றும் நியாயம் நீதியில்லாமல் 'வழவழாகொழகொழா ' என்று எதையோ செய்துகொண்டிருக்கிறார்கள்;

கொள்ளைப் பொருளையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்ற கருத்திலேயே தொடர்ந்து வாதிட்டு தேவ தூஷணம் செய்யும் இவர்கள் ஆபிரகாம் தான் மீட்டு வந்ததிலேயே கடவுளுக்கு தசமபாகம் செலுத்தினான் என்று நாம் வலியுறுத்தியதை ஏற்க மனமில்லாமல் வாதத்தை வளர்த்துவிட்டு இறுதியில் நாங்களும் இதையே சொன்னோம் என்று பல்டியடித்தார்கள்;

உண்மையான எழுப்புதல் கொண்டுவருகிறோம் என்ற பெயரில் ஊழியங்களையும் ஊழியர்களையும் தூஷித்து விமர்சனம் செய்யும் ஒருவித மாயை இப்போது பெருகியிருக்கிறது; இவர்கள் பெரும்பாலும் துருபதேசப் பின்னணியிலிருந்தே செயல்படுகிறார்கள்;"நாங்கள் அவையெல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகிறோம்,ஆனாலும் ..."என்று இழுப்பதே வஞ்சிக்கத்தான்;

இந்த சூழ்ச்சி வலை புரியாமல் அநேக இளம் விசுவாசிகள் தங்கள் தலைவர்களை எதிர்த்து கலகம் செய்யும் ஒருவித ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருகிறது; இது உடனே தடுக்கப்பட வேண்டும்;

ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் பிரபலங்கள் முதலாக அடித்தளத்தில் ஊழியம் செய்யும் சாதாரண கிராம ஊழியர் வரை அனைவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை இதனால் ஏற்படும்;

ஊழியர்கள் தவறு செய்வது உண்மை தான்; ஆனாலும் சரியான மாற்றையும் தீர்வையும் சொல்லாமல் ஊழியர்களைத் தாக்குவதுடன் ஆதார வேத சத்தியங்களையும் ஒன்று விடாமல் தாக்குவதும் ஐயங்களை எழுப்புவதும் சத்தியத்துக்கு எதிரானதாகும்;

இந்த கட்டுரையின் தலைப்பிற்கான காரணமாவது...
தமிழ் கிறித்தவ தளம் என்ற பெயரில் இயங்கும் தளமானது சில காலம் செயல்படவில்லை; இந்த இடைவெளியின் காரணமாக பலர் இந்த தளம் இருக்கிறதா இல்லையா என்று கூட பார்க்காமல் அவரவர் வேலையில் 'பிசி ' யாக இருந்தனர்;ஆக்கப்பூர்வமான -சுவாரசியமான எந்த டாபிக்கும் துவங்காமல் தளம் தூங்கி வழிந்தது; அதனை உணர்ந்து நாம் மட்டும் தொடர்ந்து எதையாவது எழுதிக் கொண்டே இருந்ததுடன் இந்த தளத்தின் தொடுப்புகளை ஆங்காங்கு போட்டு வைத்தோம்; ஆனால் நம்மீது குற்றஞ்சாட்டப்படுவது போல கிறித்தவ விரோத தளங்களில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளுக்குத் தொடுப்பு தரவில்லை; நம்முடைய தளத்துக்கு வரமாட்டார்கள் என்று அவர்களுடைய தளத்தில் சென்று பதிக்கும் கட்டுரைகளுக்கும் எந்த வித பாராட்டோ விமர்சனமோ பின்னூட்டமோ இல்லாமல் பாராமுகம் காட்டி முதலில் புறக்கணித்தார்கள்;

எனவே நாம் தாழ்மையுடன் அவர்களுடைய கட்டுரைகளில் சென்று பின்னூட்டமிட்டோம்; அதற்கு உதாசீனப்படுத்தும் வண்ணமாக தளத்தின் மூத்த உறுப்பினர் என்ற தகுதியோடு இருப்போர் கருத்து கூறுவர்; அதற்கு இந்த நியாயஸ்தர்கள் இடைபட்டு எந்த பஞ்சாயத்தும் செய்வதில்லை; எதை எழுதினாலும் அதற்கு விளக்கம் கேட்டு நம்முடைய நியாயத்தை உணருவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் இது தவறு என்று உடனே தீர்ப்பு செய்வார்கள்;

ஒரு சின்ன பையன் தன் தலைவலிக்காக ஆண்டவரையே தூஷித்து இந்த தளத்தில் எழுதினான்;அவனைக் கண்டித்து எழுதிய என்னை அவன்  தாக்கியபோது யாரும் அவனைக் கண்டிக்கவில்லை;ஆனால் இங்கே விஜய் என்பவர் இவர்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் 'காக்கா ' மாதிரி ஒன்றுகூடி கொத்துகிறார்கள்;

காக்கா மாதிரி என்றதும் நினைவுக்கு வருகிறது;இவர்களிடம் நல்லெண்ணத்தையும் நல்லுறவையும் விரும்பி ஒருபுறம் வாதாடினாலும் மறுபுறம் அவர்கள் தளத்திலிருந்து காகம் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரையினை மேன்மைப்படுத்தி பதித்தோம்;அதற்கும் எந்த கருத்தும் யாரும் கூறவில்லை;சுபாவ அன்பில்லாமலும் சிநேக பாவமில்லாமலும் மாய்மாலம் செய்யும் இவர்களுடன் இவ்வளவு நாள் போராடியதற்காக மிகவும் நாம் வருந்துகிறோம்;

இவர்களை விட "திருச்சிக்காரன்" போன்ற இந்து அடிப்படைவாதிகளிடம் அதிக மென்மையும் அரவணைக்கும் தன்மையும் தெரிகிறது; புறக்கணித்து உதாசீனமும் பரியாசமும் செய்து கர்த்தருக்கு ஊழியம் செய்வதாக எப்படி சொல்லுகிறார்களோ, இவர்களை ஆதாயம் செய்யும் மந்திரவித்தை மட்டும் நமக்குத் தெரியவில்லை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard