Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்பின் வலிமையும் ஆதிக்கவெறியும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
அன்பின் வலிமையும் ஆதிக்கவெறியும்
Permalink  
 


The Power of Love and the Love of Power

sor77a.jpg

வெற்றிகள் பல குவித்த வலிமையான ஒரு இராஜாவானவன் ஒரு பெரிய யுத்தத்தை நடத்தி எதிரி நாட்டு ராஜாவை கொலை செய்து அவனது கிரீடத்துடன் பெருமையாக தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்;

காட்டுப் பகுதியின் வழியே செல்லும் வழியில் ஓய்வெடுக்க விரும்பி அன்று மாலையில் தனது போர் வீரர்களுடன் தங்கினான்;அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் ஒரு ஆசிரமம் இருந்தது;இராஜா அந்த ஆசிரமத்துக்குச் சென்று முனிவரை சந்தித்து மரியாதை செலுத்த எண்ணி தனது வீரர்களை அனுப்பி உத்தரவு கேட்டு வரச் சொன்னான்;

ஆனால் முனிவரின் சீடர்களோ இன்றைக்கு குருவை சந்திக்கமுடியாது; அவர் ஓய்வில் இருக்கிறார்;நாளைக்கு நீங்கள் வரலாம் என்று கூறிவிட்டார்கள்;

மறுநாள் காலையில் இராஜா தனது மேன்மையான ஆடம்பர ஆடை அலங்காரத்துடனும் மந்திரிமார் மற்றும் உதவியாளர்களுட
னும் முனிவரை சந்திக்க ஆர்ப்பாட்டமாக வந்தான்;

முனிவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்து தன்னைச் சுற்றிலும் திணைகளை வீசிக் கொண்டிருந்தார்;அவற்றை பொறுக்க நூற்றுக்கணக்கான பறவைகள் கூடிவிட அந்த காட்டுப்பகுதியே பறவைகளின் சத்தத்தால் நிறைந்தது;

இராஜா முனிவரை நோக்கி முன்செல்ல முனிவரோ நிமிர்ந்தும் பார்க்காமல் திணைகளைக் கொறித்துக் கொண்ட‌ பறவைகளின் மீதே கவனமாக அதனை இரசித்துக் கொண்டிருந்தார்;

இராஜாவும் பொறுமையாக "வந்தனங்கள் குருவே" என்றார்;முனிவரிடம் எந்த பதிலும் இல்லை;இராஜா இன்னும் சத்தமாக,"வந்தனங்கள் குருவே" என்றார்;முனிவரிடம் எந்த சலனமும் இல்லை;இராஜா சற்று கோபமான தொனியில்,"குருவே நான் வந்தனம் என்கிறேன்" என்றான்,சத்தமாக.

முனிவர் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்,"ஏன் சத்தமிடுகிறாய்,பறவைகள் பயந்துவிடும்" எனவும் இராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது;"நான்
யார் என்று தெரியுமா"
எனக் கத்தினான்;

முனிவர் அமைதியாகச் சொன்னார்,"ஆம்,
நீ யார் என்று எனக்குத் தெரியும்,நீ ஆதிக்கவெறியினால் கொலைசெய்பவன்,அந்த ஆதிக்க வல்லமை நிரந்தரமானதல்ல என்பதை நீ அறியாதிருக்கிறாய்;இன்னொரு ஆதிக்க வெறி பிடித்தவன் உன்னையும் கொலை செய்வான்,உனது ஆதிக்கவெறியே உனது வீழ்ச்சிக்கும் காரணமாக அமையும்" என்றார்.

இராஜா உக்கிரத்துடன் முனிவருக்கு அருகில் வந்து,"உன் அறியாமை எல்லை மீறிவிட்டது, இப்போதே உன் தலைசீவுகிறேன்,பார்" என்று கூறிக் கொண்டே தனது வாளை உருவினான்;

உடனே அங்கே திணை பொறுக்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான‌ பறவைகளும் ஒரே நேரத்தில் பாய்ந்து இராஜாவைத் தாக்கின;இராஜாவின் தலையிலும் தோளிலும் கண்களிலும் முகத்திலும் தங்கள் கூரிய அலகினால் கொத்தின;இராஜா அலறிக்கொண்டே அவ்விடம் விட்டு உயிர் தப்பி ஓட முயற்சித்தும் விடாமல் துரத்தின;

உடனே முனிவர் பறவைகளை நோக்கி,"செல்லங்களே,அவரை விட்டு விடுங்கள்,அவர் நம்முடைய விருந்தாளி,அவருக்கு கெடுதல் செய்யக்கூடாது" என்று சொன்னதும் அத்தனைப் பறவைகளும் அந்த முனிவரின் காலடியில் வந்து அமர்ந்தன;

முனிவர் இராஜாவை நோக்கிச் சொன்னார்,"இராஜாவே,இந்த பறவைகளுக்கு நான் அன்பைத் தவிர ஒன்றையும் செய்யவில்லை,அன்பின் வலிமையை உணர்ந்தாயா? ஆதிக்க வெறி உன் கண்களைக் குருடாக்கி கொலைகளைச் செய்யவைத்தது;இந்த பறவைகளும்கூட உங்களைக் கொலைசெய்திருக்கும், ஆனால் அவை எனது அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறது;நானும் அவற்றை ஒரு அரசனைப் போல ஆளுகிறேன்; ஆனால் அன்பினால் மட்டுமே;அது மட்டுமே இந்த பூமியில் சக்திமிக்கது."

நாம் எதைச்
சேர்த்தோம் என்பதைவிட எதை சிந்தினோம் என்பதிலேயே நாம் வாழும் வாழ்க்கையின் தரம் விளங்கும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard