Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெபத்தைக் குறித்த சிந்தனை..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஜெபத்தைக் குறித்த சிந்தனை..!
Permalink  
 


// வெறும் ஜெபத்தால் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என்றால் ஆண்டவர் இத்தனை பெரிய வேதபுத்தகத்தை எழுதி கொடுக்காமல் "நீ அமர்ந்து ஜெபி மற்ற எல்லாவறையும் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லி முடித்திருப்பார்! //

நண்பரே, எழுதிக் கொடுக்கப்பட்டிருப்பதற்கும் மேலே புதினமான காரியங்களையும் ம(இ)றைபொருளையும் அறிந்துக் கொள்ளும் ஆர்வத்திலிருக்கும் உங்களுக்கு உதவுவதே ஜெபநேரத்தில் திறக்கும் வானத்தின் வாசலே;

ஜெபம் ஆரம்பம் மட்டுமே;தகுதி தொடருவது;
தகுதியடையச் செய்வதும் ஜெபமே;

உங்கள் தொடுப்பிலுள்ள காரியம் உங்கள் தனிப்பட்ட அனுபவம்;
அதைக் குறித்த தெளிவான போதனை எதுவுமில்லை;

வியாதிப் படுக்கையிலிருக்கும் ஒருவர் சுகம் பெற இறைவன் எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை;மனதுருக்கம் நிறைந்த பிரார்த்தனை மட்டுமே போதுமானது;

சம்பந்தப்பட்டவரின் அர்ப்பணத்துடன் தேவைப்படும் மற்றுமொரு காரியம் அவர் பிறருக்கு மன்னிக்காத கசப்பு இருக்குமானால் அதனை அறிக்கையிட்டு மன்னித்து சீர்பொருந்தவேண்டும்; அவரால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காவிட்டாலும் தேவன் மன்னித்து சுகம் தருவார்;(யாக்கோபு.5:14,15,16)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

வெறும் ஜெபத்தால் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என்றால் ஆண்டவர் இத்தனை பெரிய வேதபுத்தகத்தை எழுதி கொடுக்காமல் "நீ அமர்ந்து ஜெபி மற்ற எல்லாவறையும் நான்
பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லி முடித்திருப்பார்!
 
ஜெபிப்பவர்  என்ன தகுதியில் இருக்கிறார் என்பதின் அடிப்படையிலேயே ஜெபம் கேட்கப்படும் என்றே நான்
கருதுகிறேன்.
 
தானியேல் ஜெபிக்க ஆரம்பித்ததும் கட்டளை வெளிப்பட துவங்கியது ஏனென்னில் அவன் தேவனுக்கு பிரியமான புருஷனாக இருந்தான். அனால் சிலரை பார்த்து "நீங்கள் மிகுதியாக ஜெபம் பண்ணினாலும் கேளேன்" என்று  கர்த்தர் சொல்கிறார்.
 
எனவே வெறும் ஜெபம் மட்டும் போதாது, ஒருவரின் ஜெபம் கேட்கப்பட,  நீதியான நடத்தை மற்றும் கீழ்படிதலுள்ள வாழ்க்கை நிச்சயம் தேவை 
 
யாக்கோபு 5:16   நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

நீதிமொழிகள் 15:8
 ; செம்மையானவர்களின்
ஜெபமோ அவருக்குப் பிரியம்.


சில சமயங்களில் நாம் என்னதான் ஜெபித்தாலும் நம் ஜெபம் கேட்கபடுவதில்லை அதற்க்கு நமது கரங்கள் சுத்தமாக இல்லாததே காரணம்,
இதுசம்பந்தமாக நடந்த உண்மை சம்பவத்தை அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும் 

http://www.lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=34654099
  


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

durerhands.jpg
"முன் ஏர் போவது போலவே பின் ஏரும் போகும்"
என்ப
து முதுமொழி; இதன்டி ஜெபிக்கிற சுபாவமுடைய ஒருவன் மற்றொருவனையும் ஜெபிக்கத் தூண்டுவான்; இதற்கான முதலாவது முயற்சி அந்த மற்றொருவனுக்காக ஜெபிப்பதே;

ஜெபம் என்பது பிரசங்கம் அல்லது ஆராதிப்பதைப் போல அனைத்தையும் தன்னை
நோக்கி குவித்துக் கொள்வதல்ல;அது இறைவனை நோக்கித் திரும்பச் செய்வது; இப்படிப்பட்ட ஜெப முறையினைக் கற்று செயல்படுத்துவோர் இயல்பாகவே மற்றவரும் ஜெபிக்கத் தூண்டும் வண்ணம் செயல்படுவார்;

பிரார்த்தனை என்பது வளையம் போன்றது;அல்லது சங்கிலி போன்றது; நிச்சயமாகவே இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும்;அப்படியில்லாதிருந்தால் அது அப்படியானது அல்ல என்பது அர்த்தமாகும்;

மேலும் அதனை ஒரு முக்கோணம் என்றும் சொல்லலாம்; நான் என் சக நண்பனுக்காக அல்லது உறவுக்காக இறைவனிடம் மன்றாடுகிறேன் என்றால் அதன் விளைவு நான் யாருக்காக மன்றாடினேனோ அவரை இறைவன் ஏதாவதொரு வழியில் சந்திப்பதில் அது நிறைவேறும்;

அனைத்து ஜெப இயக்கங்களுமே இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே வளர்ந்து வருகிறது; மற்ற எந்த அமைப்பு ஒழிந்துபோனாலும் இந்த ஜெப இயக்கம் மட்டும் தோற்றுப் போகாது என்பது சத்தியமாகும்;

ஜெபத்தைக் குறித்த எந்த போதனையும் தேவையில்லை;ஒரு மனுஷன் ஜெபிக்க உட்கார்ந்தாலே மற்ற அனைத்தையும் தேவ ஆவியானவர் பார்த்துக்கொள்வார்,,!

(தொடரும்...)


-- Edited by chillsam on Thursday 25th of March 2010 11:34:47 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard