Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கஷ்ட காலத்தில் உதவாத இஷ்ட தெய்வங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கஷ்ட காலத்தில் உதவாத இஷ்ட தெய்வங்கள்..!
Permalink  
 


திருச்சிக்காரனுக்கு நாம் கொடுத்த பதில்கள்...

// கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய்,பிசாசு என்று திட்டி //

ஒரு காலத்தில் நானே கடவுளாக வணங்கியதை பேய்,பிசாசு என்று சொல்வேனா?அதுபோல ஒருபோதும் சொல்வதில்லை;

ஆனால் உண்மை தெய்வத்தைவிட்டு திசைதிருப்பி சாதாரணமான கல்லையும் காவிய நாயகர்களையும் மிருகத்தின் சொரூபங்களையும் வணங்கச் செய்தவையே பிசாசின் சக்திகள்;

என்னைப் படைத்த தேவனை விட்டு நானே படைத்த தேவர்களை வணங்கச் செய்பவையே பேய்கள்..!

இந்த பேய்கள் படைத்த பரம்பொருளான தேவனை வணங்கினால் மட்டுமே கிடைக்கக்கூடிய மனநிம்மதிக்கு மாற்றாக மனம்போனபோக்கில் வாழும் துஷ்டத்தனமான வாழ்க்கை முறையினை அனுமதிக்கிறதினாலேயே சமுதாயத்தில் இத்தனை பிரிவினைகள்;

சாராயம் விற்பவனும் அதனைக் குடிப்பவனும் ஒரே சாமியை வணங்குகிறான்;அந்த கொடூரத்தை அந்த சாமி தடுக்கிறதில்லை;குறைந்தபட்சம் குற்ற உணர்வைக்கூட தருகிறதில்லை;காரணம் அவற்றுக்கு ஜீவனும் இல்லை;அவை தன்னை நாடி வந்திருக்கும் ஆத்மாவை படைக்கவுமில்லை; அவனுக்காக ஜீவனைத் தரவும் இல்லை;

இதுபோலவே கலைச்சேவை என்ற பெயரில் விபச்சாரத்தொழில் செய்யும் சினிமாக்காரனும் அதே யானை முகத்தோனை வணங்கியே தன் தொழிலைத் துவங்குகிறான்;

இந்த பயங்கரங்களுக்கெல்லாம் மூலக்காரணத்தையறிந்ததாலேயே மிருகத்தைத் தொழும் மனிதனை எச்சரிக்கிறோம்;எச்சரிப்போம்..!

// இந்த உலகத்திலே பலர் கொல்லப் பட்டு இரத்த ஆறு ஓடினாலும் ...//

இந்த உலகில் இரத்த ஆறு ஓடுவதற்கு மதம் காரணமல்ல;மெய்யான இறை அச்சம் இல்லாததும் பேராசையுமே காரணம்;இவற்றை சமூகத்தில் விதைத்ததும் பிசாசுகளே;

ஆனானப்பட்ட முகமதுவையே பிசாசு வஞ்சித்து அல்லா போல பேசி அந்த வாக்கியத்தை குரானில் இடம்பெறச் செய்திருக்கிறதாம்;அது தனி விவகாரம்..!

// சமரசக் கருத்துக்களை கேட்டால் //

இங்கே காந்திஜியைக் காட்டிலும் சமுதாய நல்லிணக்கத்துக்கு பாடுபட்டவர் யாரேனும் உண்டா? அவரோ இயேசுகிறிஸ்துவைப் போல சொந்த மக்களாலேயே கொல்லப்ப‌ட்டார்;ஆனால் இயேசுகிறிஸ்துவைப் போல அவர் மீண்டும் உயிர்த்தெழாததால் அவரை வணங்கமுடியாது;

செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் குறித்து இயேசுகிறிஸ்து மொழிந்ததுண்டு;அதுபோல இந்த சமுதாயத்தில் இறைவனின் பார்வையில் சமுதாயம் இரண்டாகப் பிரிக்கப்பட்டே தீரும்;அதனைத் தவிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது;

மனிதனின் வசதிக்கு- அவனுக்குத் தோன்றிய நியாயத்தில் சமூகம் சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மொழிரீதியாகவும் வர்க்கரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது;ஏன் இந்த பாவி மனிதன் கடலுக்கும் எல்லையை வகுத்திருக்கிறான்;

ஆனால் கடவுள் இந்த முழு உலகையும் இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறார்;தன்னை அறிந்தவர் மற்றும் தன்னை அறியாதவர்;அறிந்தவர் மூலம் அறியாதோரை சந்திப்பதே இறைவனின் மாபெரும் திட்டம்;அது நிறைவேறியதும் புதியதோர் உலகம் படைக்கப்படும்;எந்த நிலையிலும் இந்த உலகம் அழியப்போவதில்லை;மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு மனிதனால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த் வையத்தைக் காக்கவே இறைவன் இறங்கி வந்தார்;

இதையெல்லாம் விட்டுவிட்டு போலி மதச் சார்பின்மை என்பார்களே அதுபோல போலியான சமரசக் கருத்துக்களைக் கொணர்வதால் எந்த பயனும் இராது;ஏனெனில் மனிதனைக் குறித்த இரண்டு மாறாத பேருண்மைகள் இப்படியாகக் கூறுகிறது;ஒன்று மனிதன் தனக்குத் தானே நன்மை செய்துக் கொள்ளமுடியாதவனாக இருக்கிறான்;மற்றொன்று அவன் தன்னை நம்பும் இன்னொருவனுக்கு நன்மை செய்யமுடியாதவனாக இருக்கிறான்;

// வீட்டு மாடியில் கூரை போட்டு, அதில் மைக் செட் கட்டி, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஏரியாவே காதைப் பொத்தும் அளவுக்கு மைக் செட்டை முழுதும் அலற வைப்பது தான் இயேசு கிறிஸ்து சொல்லிக் கொடுத்த முறையா? //

நண்பரே, மைக் செட்டை நாங்கள் கண்டுபிடித்ததே அதற்குத் தானே..!

நீங்கள் ஆடித் திருவிழாவுக்கும் பேடித்திருவிழாவுக்கும் அதனைப் பயன்படுத்துவதுதான் சட்டவிரோதம்;

அச்சுமுறை முதற்கொண்டு அனைத்து கண்டுபிடிப்புகளும் இறைவனின் மாபெரும் திட்டத்தைக் கொண்டுச் செல்லவே தோன்றியது;

நவீனக் கண்டுபிடிப்புகளை தீயசக்திகளும் பயன்படுத்துவதை நாகரீக சமுதாயத்தில்(..?) தவிர்க்கமுடியாதே என்ன செய்வது..?

எந்த ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடமும் பொறம்போக்கு நிலத்திலோ பொது இடத்திலோ அமைக்கப்பட்டுள்ளதா?

மற்ற வழிபாட்டுக் கூடங்களுக்கு இருக்கும் உரிமையினை இந்த சமூகம் கிறித்தவர்களுக்கு வழங்குகிறதா?

மைக் செட் போட்டு ஒரு காரியத்தைச் செய்வது கொண்டாட்டத்தின் அடையாளம்தானே..?

அவர்கள் ஏக இறைவனைக் கொண்டாடுகிறார்கள்;உங்களையும் அழைக்கிறார்கள்;நீங்கள் எவ்வளவுதான் அவர்களை நெருக்கினாலும் ஒடுக்கினாலும் கிறித்தவ்ர்கள் தளராது உங்கள் சார்பில் அந்த படைப்புக் கடவுளை ஆராதிக்கிறாகள்;இந்த உலகில் அவரை ஆராதிப்போர் இல்லாவிட்டால் இந்த உலகம் அடுத்த நிமிடமே அழிந்துபோகும்;

// Mr.Chillsam is not giving any crappy ideology. He is dealing with real life problems. Divorce is not very rare in our country. Many are facing such difficult times in their lives. In many cases people are forced by the situations to take up divorce. And such a discussion will give some advices, which they usually doesn’t get from their friends >Hard Truth //

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33512237

எனது தளத்தைப் பார்வையிட்டு என்னாலும் முன்வைக்க இயலாத‌
ஒரு கருத்தை என் சார்பில் வெளியிட்ட நண்பர் Hard Truth
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொளளுகிறேன்;

நீங்கள் இத்தனை வெளிப்படையாகக் கிறித்தவ மார்க்கக் கருத்துக்களைக் கூறுவது ஏற்றுக்கொள்ள சற்று சங்கடமாக இருக்கிறது;இங்கு முத்திரை குத்தி பரியாசம் செய்து எள்ளி நகையாடுவார்கள்;உங்களைப் போன்றவர்கள் அறிவுபூர்வமான காரியங்களையும் விவாதங்களையும் முன்வைத்து "பொதுவான" தளத்திலிருந்தே இன்னும் பல காரியங்களைச் சொல்லமுடியும்; இதற்குப் பிறகு என்ன நீங்கள் சொன்னாலும் அதனைக் கிறித்தவனுடைய கருத்தாகவே பார்த்து சம்பந்தமில்லாத வேறு கேள்விகளைக் கேட்டு திசைதிருப்புவார்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

கடவுள் என்பவர் (இயேசு உட்பட) நம் கஷ்ட காலத்தில் நம் இஷ்டப்படி உதவி செய்ய உள்ளவர் அல்ல. தனது விதியின், செயலின் மூலம் மனிதனை உயர் நிலைக்கு கொண்டு செல்பவர். கடவுள் நம் கஷ்ட காலத்தில் நம் இஷ்டப்படி உதவி செய்தால் அது கூடுதல் சலுகை. அந்த கடவுளின் இஷ்டப்படி நம் கஷ்ட காலத்தில் நம்மை ஒப்புக் கொடுப்பதே நாம் செய்ய வேண்டிய கடமை.

தலைப்பில் ஏதோ கோளாறு இருப்பதாக தெரிகிறது.
தலைப்புக்கும் பிற செய்திக்கும் சம்பந்தம் இல்லை.
தலைப்பு இது போல் இருக்க வேண்டும் என கருதுகிறேன்.
கஷ்ட காலத்தில் உதவாத இஷ்ட (இந்து) தெய்வங்கள்..!


-- Edited by SANDOSH on Monday 22nd of February 2010 07:17:18 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சகோதரி கிளாடி அவர்கள் சொல்வது போல ஏழை எளிய மக்களின் சங்கடங்களைக் காசாக்கும்- அவர்களது பக்தியை வியாபாரமாக்கும் எங்கும் காண்கிறோம்;

அண்மையில் என்னிடம் ஒரு தாயார் தனது மகள் மற்றும் மகனுடன் பிரார்த்தனைக்காகச் வந்திருந்தார்கள்; அந்த தாயார் அதற்கு முன்பு மகனுடன் வந்திருந்தபோது அவர்களது சரீர பெலவீனத்துக்காக பிரார்த்தனை செய்து அனுப்பியிருந்தேன்;


ஆனாலும் அவர்களது மகள் நம்பிக்கையில்லாமல் மலையனூர் அருகே உள்ள பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள்; அங்கேயிருந்த பூஜாரி ஒருவன்
தேதோ சொல்லி மிரட்டி 10000 ரூபாயை எடுத்து வரச்சொல்ல விடுதலை கிடைத்தால் போதும் என நகையை அடகு வைத்து எடுத்துச் சென்று கொடுத்தார்களாம்;

நிலைமை முன்பைவிட இன்னும் மோசமாக அலறிக் கொண்டே என்னிடம் வந்தனர்; வேறு ஏதேதோ ஏவல் சக்திகளை அவர்கள் மீது ஏவிவிடவும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவரை அவை அலைக்கழிக்க இரவெல்லாம் நிம்மதியில்லாமல் பயத்தில் இருந்தார்களாம்;

வீட்டிலிருந்த ஆண்களையும் அவை விடவில்லை என்பது தான் ஆச்சரியம்; ஏனெனில் பெண்களுக்கு மட்டும் என்றால் அது மூடநம்பிக்கை எனலாம்; பிரம்மை எனலாம்;ஆனால் 10வது படிக்கும் வாலிபன் முதலாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்;

பணத்தை பிடுங்கிக் கொண்ட அந்த பூஜாரி நீ இங்கே பார்த்தத வெளிய சொன்னா உன் உயிரை எடுத்துடுவேன் என்று மிரட்டியும அனுப்பியிருப்பதால் தான் அங்கே பார்த்தத சொல்லமுடியாமலும் அதை மறக்கமுடியாமலும் மனநோயாளையைப் போல இருக்கிறார்கள்; அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி.

"பணம் போனால் போகட்டும், அவன் என் மீது ஏவிவிட்ட தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள்" என அழுகிறார்கள்;

அவர்களுடைய குல தெய்வமான அங்காளபரமேஸ்வரி எனும் தெய்வமும் ஒரு புறம் வந்து மிரட்டுகிறதாம்; அதுவும் இவர்கள் மீது ஏதோ கோபத்தில் இருக்கிறதாம்;

இது போன்ற அப்பாவி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து அவர்களுடைய மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவித்து என்னைப் போன்றவர்கள் செய்யும் ஊழியமே மதமாற்றம் எனப்படுகிறது;

இன்று என் கண்முன்னே அவர்களே தன் கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தார்கள்; "வீட்டில் எந்த பூஜையும் செய்கிறதில்லை;எல்லாம் போதும் போதும்'னு ஆயிடுச்சி" என்கிறார்கள்;

இப்போதைக்கு செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் காலையில் வரச் சொல்லி இறைவாக்கையும் ஆசியையும் வழங்கி அனுப்புகிறேன்; தற்போது தைரியமாக இருக்கிறார்கள்;

ஒரு முக்கியமான விஷயம், இன்னும் அவர்களிடமிருந்து நான் ஒரு பைசாவும் வாங்கவில்லை; தொழில் செய்யும் அந்த தாயாரின் மகனான சரவணனுக்கு
நான் தான் அவனது தொழில் சிறக்க பத்து ரூபாயை ஒரு புதிய ஏற்பாடு புத்தகத்தில் வைத்து கொடுத்தேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

கஷ்ட காலத்தில் உதவாத இஷ்ட தெய்வங்கள்..!

நம்முடைய கஷ்ட காலத்தில் உதவுவதற்காகவே பற்பல தெய்வங்களை உருவாக்கி வைத்து வழிபடுகிறோம்;ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய செய்முறைகளையும் தவறாது செய்து வருகிறோம்;

ஒருவேளை நாமாகச் செய்வது தெய்வக்குத்தமாகி விடுமே அச்சத்தினாலேயே அதற்கென்று இருக்கும் பூஜாரிகளிடம் சென்று குறி கேட்டு அதன்படியே பக்தி சிரத்தையுடன் சென்று அவற்றை நிறைவேற்றி வருகிறோம்;ஆனால் அவையும் கூட சில சமயம் உக்கிரமாகி நம்மையே அழிக்க வந்தால் என்ன செய்யமுடியும்?

இது எப்படி நமக்குத் தெரியவருகிறது?
இதையும் அந்த பூஜாரிகளே சொல்லி நம்முடைய இஷ்ட தெயவங்களை சாந்திபடுத்தும் பூஜா முறைகளையும் சொல்லுகிறார்கள்;

ஒவ்வொரு பயணத்துக்கும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்துச் சென்று வந்தாலும் அநேக சமயங்களில் விடுதலை கிடைக்கிறதில்லை;மாறாக சென்று வரும் வழியிலும் கூட விபத்துகளில் சிக்கி இரத்தம் சிந்துதலும் உயிரிழப்பும்கூட நேருகிறது;

இதற்கென்ன காரணம்?
இதிலிருந்து தப்புவது எப்படி?

எதற்காக தெய்வத்தை வணங்குகிறோம்,நம்மை தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றவும் அவைகளே நம்மை கோபத்தில் நம்மை அழித்துவிடாமலிருக்கவும் தானே?

இவைகளோ காப்பாற்றவும் இயலாமல் உதவி தேடி எங்காவது சென்றால் உக்கிரமாகி நம்மையே அழிக்கவும் வருகிறதே,வேலியே பயிரை மேய்வதா?

ஒரு வங்கியை காவல் காக்க காவலாளியை நியமிக்கிறோம்;
அவனுடைய வேலை என்ன?

அவன் வங்கியிலுள்ள பணம் திருடு போகாமல் காப்பாற்ற வேண்டும்;அடுத்து அவனும் திருடிவிடக்கூடாது;

ஆக திருடனுடன் சேர்ந்து கொள்ளையடிப்பவனையும் நாம் நம்பமுடியாது;திருடனிடமிருந்து நம்முடையதை காப்பாற்ற முடியாதவனையும் நாம் நம்பமுடியாது;

ஒரு சாமான்யனின் இந்த கூக்குரலுக்கு யார் செவிகொடுத்து உதவிசெய்வார்களோ என மனம் ஏங்குகிறது..!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard